பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 13 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - ஏன் என்றால் - இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

படம் :இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  
பாடல் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்
பாடியவர் : ஹரிஹரன் ,மாளவிகா மனோஜ்,விஷ்ணு ப்ரியா   
இசை : சித்தார்த் விப்பின்  
பாடலாசிரியர் : மதன் கார்க்கி 
உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறைப்பிடிப்பேன்
உலர்ந்த மேகத்தை கொண்டு
நிலவின் கரை துடைப்பேன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

இலை ஒன்றில் மேடை அமைத்து
ஒளிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாடச்செய்வேன்
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன்காதில் கூவச் செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட கட்டளை இடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்..


ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

மலை உச்சி எட்டி
பனிக்கட்டி வெட்டி
உன் குளியல் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிக்கட்டி
பனியெல்லாம் ஒதுக்கிடுவேன்
உன்னை அதில் குளிக்கத்தான்
இதம் பார்த்து இறக்கிடுவேன்
யா யா யா
கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து
ஒஹ் ஒஹ் ஒஹ்
உன்னோடு நான் நீந்த விடுவேன் ஒஹ்
நீ குளித்து முடித்து துவட்டத்தான்
என் காதல் மடித்து தந்திடுவேன்

ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

நெஞ்சத்தை வெதுப்பகம் ஆக்கி
அணிச்சல்  செய்திடுவேன்
மெழுகுப் பூக்களின் மேலே
என் காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அனையாதடி
நீ வெட்டவே முடியாதடி
உன் கண்களை நீ மூடடி
என்ன வேணுமோ கேளடி

ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக