பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 25 ஏப்ரல், 2016

இனிமே துணி துவைப்பதே சந்தோஷமாகப் போகுது!

அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள் துணி துவைப்பதற்கான கடைகளை தேடி அலைவார்கள்.வெளிநாடுகளில் துணி துவைப்பது என்றால் அதற்கு அதிகம் செலவிட வேண்டும்.


இது போன்ற நிலைமைகளில் கை கொடுக்கவென்றே ஒரு துணி துவைக்கும் பை தயாராகியிருந்தது,இதில் துணி, சோப்பு பவுடர், தண்ணீர் மூன்றையும் சேர்ந்து பையை இறுக்கி கட்டி வெளிப்பக்கமாக 30 விநாடிகள் தேய்த்து அழுத்த வேண்டும். இதற்கு பிறகு அழுக்கு நீரை வெளியேற்றிவிட்டு, துணியை அலசிவிட வேண்டும். துணிகளை வெளுப்பதற்கு ஏற்ப உள்பக்கமாக பிரத்யேக அமைப்பு உள்ளது. இயந்திரம் செய்யும் வேலையை கையடக்க இந்த பை செய்து விடுகிறது. இந்நிலையில் கூடிய விரைவில் இனி வாஷிங்மெஷினுக்கு வேலை இருக்கப் போவதில்லை.

வாஷிங்மெஷின் வேலையை இனி ‘டோல்ஃபி’ (Dolfi) என்ற சிறிய கருவியே செய்துவிடப் போகிறது. ஒரு சோப் அளவுக்கு கையடக்கமாக இருக்கும் டோல்ஃபி, அல்ட்ராசோனிக் தொழில் நுட்பத்தில் வேலை செய்கிறது. ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் சேர்த்து, அழுக்குத் துணிகளை போட்டு விட வேண்டும். டோல்ஃபியை ஆன் செய்து வாளியில் வைத்து விட வேண்டும்.

டோல்ஃபியில் இருந்து சக்தி வாய்ந்த அல்ட்ராசோனிக் அலைகள் உருவாகி, குமிழ்களை ஏற்படுத்தும். துணிகளில் உள்ள அழுக்குகள் மாயமாகும். அரை மணி நேரத்தில் துணிகளைத் துவைத்துக் கொடுத்துவிடும். கையடக்கமான இந்த டோல்ஃபியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். வாஷிங்மெஷினை விட துணிகளை மிக மென்மை யாகக் கையாளும் டோல்ஃபி. பருத்தி, பட்டு, பாலியெஸ் டர் என்று எந்த வகையான துணிகளையும் சுத்தம் செய்து கொடுத்துவிடும்.

வாஷிங்மெஷினை விட 80 சதவிகிதம் குறைவான ஆற்றலில் டோல்ஃபி இயங்கு வதால், சத்தமே வெளியே வராது. ஜெர்மனைச் சேர்ந்த தொழிலதிபர் லெனா சோலிஸ் இதை உருவாக்கி இருக்கிறார். டோல்ஃபியை வெளியிடங்களுக்கு செல்லும் போதும் எடுத்துச் செல்லாம். சலவைக்குச் செலவு செய்யும் பணம், நேரம் மிச்சமாகும். துணி துவைப்பதே சந்தோஷ மான விஷயமாக மாறிவிடும். கடந்த ஜனவரியில் திட்டத்தை ஆரம்பித்தோம். விரைவில் விற்பனை செய்ய இருக்கிறோம். ஒரு டோல்ஃபி 7,300 ரூபாய்’’ என்கிறார் லெனா சோலிஸ்.
                                                       --- நன்றி சமூகவளைதளம் 

வியாழன், 21 ஏப்ரல், 2016

ஶ்ரீசக்கரம்

அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்குல் உள்ள இடம்தான் மிக்கி பேசின் சூரியனின் வெப்பத்தில் மணல் கொப்பளிக்கும் அளவுக்கு பாலைவன தேசம்.பில் மில்லர் என்கிற ராணுவ அதிகாரி இந்த இடத்தை குட்டி விமானம் மூலம் கடந்து செல்கையில் 13.3 mile சதுர அளவுக்கு வரி வரியாக வரைபடம் போன்ற ஒன்றை கண்டார்.

ஏதோ நாட்டின் வரை படம் என்று நினைத்து அதை பற்றி ஆராய்ந்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காரணம் அது நம் இந்து மதத்தில் காலம் காலமாக வழிபடும் சிவ விஷ்ணு பராசக்தியை குறிக்கும் ஶ்ரீசக்கரம் தான் அவர் பார்த்தது தொடர்ந்து 30 நிமிடங்கள் வட்டமிட்ட பின்னே தான் அவரால் முழு சக்கரத்தையும் 1 தடவை சுற்ற முடிந்தது.

இதை ப் போலவே வரைய அவர்களால் எவ்வளவு முயன்றும் (1990 to 2014) இன்று வரை முடியவில்லை காரணம் நாலாயிரம் அடி மேலே பறந்து பார்த்தால் தான் ஶ்ரீசக்கரம் என்றே தெரியும்.

UFO ஆராய்ச்சியாளர்கள் டான் நியுமேன்,ஆலன் டெக்ளர் இருவரும் இந்த இடத்தை செப் 15 ல் ஆய்வு செய்தனர் அந்த ஆய்வில் இந்த இடத்தை சுற்றியுள்ள எந்த பகுதியிலும் மனித கால் தடமோ வாகன வந்து சென்ற தடமோ இல்லை என்றும் மனிதனால் இது சாத்தியமே இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

                                                    --நன்றி புதிய தமிழா சமூகவளைதளம் 

புதன், 6 ஏப்ரல், 2016

Whatsapp Security !!

வாரத்திற்கு ஒரு அப்டேட் தட்டிக் கொண்டே இருக்கிறது வாட்ஸ் ஆப். அதே போன்ற ஒரு அப்டேட் தான் சமீபத்தில் வந்துள்ளது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான மற்றும் பாதுகாப்பான அப்டேட். நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது.

 நாம் அனுப்பும் மெசேஜ், "பப்ளிக் கீ" மூலமாக என்க்ரிப்ட் (குறியீடுகள் மூலம் மறைக்கப்பட்டு) செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் சர்வரை சென்றடைகிறது. வாட்ஸ் ஆப் சர்வரில் நம் நண்பரின் ப்ரைவேட் கீ இல்லாததால், நாம் அனுப்பும் மெசேஜினை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் பார்க்க முடியாது. வாட்ஸ் ஆப் சர்வரில் இருந்து, நம் நண்பர்களிடம் சென்றடையும் மெசேஜ், நம் நண்பரிடம் இருக்கும் 'ப்ரைவேட் கீ' யால் டீக்ரிப்ட் செய்யப்படுகிறது. இதனால் நம் நண்பர்களால் அந்த மெசேஜினை பார்க்க முடிகிறது.

 எழுத்து, புகைப்படம், வீடியோ என எதையுமே அனுப்புனர் மற்றும் பெறுநரைத் தவிர, வேறு யாராலும் பார்க்க முடியாது. அரசாங்கத்தால் கூட. இந்த தொழில்நுட்பத்தால், தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் மெசேஜ்களை கண்டு பிடிக்க முடியாது என சில அரசு அதிகாரிகள் கருதுகின்றனர். ஆனால் வாட்ஸ் ஆப், தனது பயனர்களின் தனிப்பட்ட உரிமையினை பாதுகாக்க விரும்புகிறது.

                                                   ---- நன்றி விகடன்