பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 21 நவம்பர், 2012

சைவம் சாப்பிடுங்க நீண்ட ஆயுளோட வாழுங்க..

சைவ சாப்பாடு சாப்பிடுறவங்க ரொம்ப நாள் வாழலாம்னு கலிபோர்னியாவுல இருக்குற லோமா லிண்டா பல்கலைகழக விஞ்ஞானிகள்
நிரூபிச்சு இருக்காங்களாம்.

  • சைவ உணவு மட்டுமே சாப்பிடற ஆண்கள் சராசரியா 83 . 3 ஆண்டுகளும் ,பெண்கள் 85 . 7 ஆண்டுகளும் ஆரோக்கியாமா வாழுராங்கலாம்.அசைவ சாப்பாடு சாப்பிடறவங்கள விட இவங்க 8 வருஷம் அதிகமாவாழுராங்கலாம்.
  • சைவ சாப்பாடு சாப்பிடுறவங்க அசைவ சாப்பாடு சாப்பிடுறவங்கல விட 15 கிலோ எடை கம்மியாதான் இருக்காங்களாம்.
  • சைவ சாப்பாடு சாப்பிடுறவங்களுக்கு சிகரெட் பழக்கம் கம்மியாதான் இருக்காம்.
  • சைவ சாப்பாடு சாப்பிடுறவங்க தொடர்ந்து உடற்பயிற்சி பண்றாங்களாம்.
  • சர்க்கரை நோய் இருந்தாலும் இன்சுலின் சுரக்கறது அசைவ சாப்பாடு சாப்பிடுறவங்கல விட அதிகமாவே சுரக்குதாம்.
-----என்னதான் இப்படி நல்லத படிச்சாலும் சிக்கனையும் பிஷ்-ஐயும் ப்ரை பண்ணி வச்சா சாப்பிடாம இருககமுடியுமா சொல்லுங்க.நியூ இயர் ரெசொலுஷன் மாதிரி காணாம போய்டுதுங்க

திங்கள், 19 நவம்பர், 2012

இதுவும் அழகுதான் ...


  நிறையபேர் நினச்சுகிட்டு இருக்காங்க வெள்ளையா இருந்தாதான் அழகு கருப்பு அழகு இல்லைன்னு .

ஆரம்பத்துல இருந்தே சிகப்பு கலர்ல நமக்கு இருக்குற மோகம் , அதான் நம்மள கருப்பு கலரை ரசிக்க விடமாட்டே.ங்குது.கருப்பு அழகு இல்ல கருப்பா இருந்தா நம்மள யாரும் கவனிக்க மாட்டாங்கனு எண்ணம் நம்ம மனசுல தானா விதஞ்சிடுது .இதுக்கு யார காரணமா சொல்றது? கருப்பு அழகில்லைன்னு சொல்றது எப்படி நியாயம் ஆகும்?

இந்த மீடியாக்களில் ,இந்த கிரீம் போடுங்க அந்த கிரீம் போடுங்க இதனை நாளுல இதனை வாரத்துல சிகப்பாகிடுவீங்கனு விளம்பரம் பண்றாங்களே ..அவங்க இப்படி விளம்பரம் பண்ணி சிகப்புதான் அழகுன்னு நம்ம மனசுல பதிய வச்சுட்டாங்களா? இல்ல கருப்ப அவமானமா நினச்சு சிகப்பாகனும்னு அனேகபேர் விருப்பபடுரதால புதுசு புதுசா கிரீம்கள் தயாரிச்சு விளம்பரபடுதுரான்களா? கலர்-ல என்னங்க இருக்கு?எல்லாமே நம்ம மனசுலதனே இருக்கு.

ஒருத்தங்க கலர் வச்சு அவங்க குணத்தை தீர்மானம் பண்ணிட முடியுமா ? நம்ம நாட்டோட உண்மையான நிறம் கருப்புதானே.நம்ம நிறத்துக்கு காரணம் நம்ம உடம்புல சுரக்குற நிறமி செல்லான மெலனின் அளவு அதிகமா இருக்குறது தான்.

கருப்பும் அழகுதாங்க.எல்லாரையும் தன அழகால தன் காலடியில கிடத்தின 'கிளியோபாட்ரா' கருப்புன்னு தான் கேள்விப்பட்டு இருக்கேன்.கருப்போ சிகப்போ நமக்கு நாமதான் அழகுன்னு நினைக்கணும். (நாம மட்டும் தான் அழகுன்னு நினைக்கறதுக்கும் நாமளும் அழகுதான்னு நினைக்கறதுக்கும் வித்யாசம் இருக்கு).

எந்த விஷயத்துலயுமே மத்தவங்களோட எப்போ கம்பேர் பண்றோமோ அன்னைக்கு வீனாப்போக ஆரம்பிக்குறோம் நாம் .இத எத்தன பேர் ஒத்துக்குறீங்கனு தெரியல. பிறக்கும் போதே யாரும் செலிபிரிட்டியாக பொறக்குறது இல்ல.

செலிபிரிட்டிக்களின் குழந்தையா பொறக்குறாங்க இல்லைன்னு சொல்லல .அதுக்காக அவங்க செலிபிரிட்டி ஆகிட முடியாது.நம்முடைய நடை ,உடை,பேச்சு ,போடி லாங்குவேஜ் ,மத்தவங்ககிட்ட பழகுற விதம்,பேசுற விதம் இத நாம மாத்தினாலே நாமும் ஒரு செலிபிரிட்டிதான் .

எத்தனையோ வீட்ல பொண்டாட்டியை புருஷனும் புருஷனை பொண்டாட்டியும் சினிமாவுல ,டி.வி -ல பாக்குற அவங்கள மாதிரி இல்ல நீ இவங்கள மாதிரி இல்ல நீ -னு மனசலவுல கஷ்டப்படுத்துறது நடந்துகிட்டு தான் இருக்கு. முதல்ல நாம அழகுன்னு நினைக்கணும் .அந்த தன்னம்பிக்கை வரணும்.

நம்மகிட்ட எது மைனஸ்னு மத்தவங்க சொல்றாங்களோ அதுக்காக மனசு உடஞ்சுடாம கண்ணாடி முன்னாடி நின்னு இதுவும் அழகுதான்னு ரசிக்க ஆரம்பிக்கணும்.அது நமக்கு கொஞ்சம் கொஞ்சமா பிளஸ் ஆகிடும்.முதல்ல மத்தவங்களுக்காக வாழாம நமக்காக வாழனும்.

நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுவோம் இயற்கையான முறையில நம்ம அழகை பாதுகாத்துக்குவோம் .

எல்லாருகிட்டயும் ஒரு அழகு இருக்கும் ,எல்லார் கிட்டயும் ஒரு திறமை இருக்கும் ,அதை ரசிப்போம் ,அழிஞ்சு போற மேலோட்டமான நிறத்தையோ அழகையோ ஒஎருசா நினச்சு ஒருதங்களை ஜட்ஜ் பண்ணாம எல்லாரையும் ரசிக்க கத்துப்போம்...சந்தோஷமா தன்னம்பிக்கையோட வாழுவோம்.
Untitled Document








இங்க பாருங்க செலிபிரிடிகள் மேக்கப் இல்லாம எப்படி இருக்காங்கனு.அதுக்காக இவங்க அழகா இல்லைன்னு சொல்லிட முடியுமா?மேக்கப்போட பாத்து பாத்து நமக்கு மேக்கப் இல்லாம பாக்க வித்தியாசமா இருக்கும் அவ்ளோதான்.நமக்கு ரசிக்க தெரியலைன்னு வேணும்னா சொல்லலாம்.

திங்கள், 12 நவம்பர், 2012

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்



பட்டாசு வெடிக்கலைனா ரொம்ப சந்தோஷம் , அதெல்லாம் முடியாது நான் வெடிப்பேன்தான்னு அடம்பிடிக்குறவங்க பாத்து ஜாக்கரதையா வெடிங்க..சந்தோஷமா தீபாவளியை கொண்டாடுங்க .

வெள்ளி, 9 நவம்பர், 2012

இன்றும் இனியவை ......


இசை தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க. எல்லாராலயும் பாடமுடியும் .ஆனா சிலபேராலதான் உணரவைக்க முடியும் .வரிகளுக்கு தன் குரலால உயிர் குடுக்கமுடியும்.அவங்களதான் நாம பாடகர்களா ஏத்துகிறோம் .ஒரு சந்தோஷமான துள்ளலான பாட்ட கேக்கும்போது நாமும் அந்த மூடுக்கு போகுறதும் ஒரு சோகமான அழுகையான பாட்ட கேக்கும்போது நாமும் சோகம் ஆகிட்றதும் அழுகுறதும் நல்ல இசை + பாடல் வரிகள் + பாடும் விதம் எல்லாம் சேரும்போதுதான் அமையும் .அதனாலதான் இசை கலைஞர்களை கடவுளோட அருள் இருக்குறவங்கனு கூட சொல்வாங்க .உடனே மத்தவங்களுக்கு அருள் கிடையாதான்னு எல்லாம் கேக்கக்கூடாது .சில சமயம் சில விஷயங்கள ஒத்துகிட்டுதான் ஆகணும் .


கண் போன  போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேணும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேணும்
வாலி அவர்களின் முத்தான வரிகளில் ,TMS அவர்களின் குரலில் ,MSV அவர்களின் இசையில் 1960-களில் வெளிவந்த பணம் படைத்தவன் திரைபடத்தின் பாடல் . 


மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்  
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று
போற்றி புகழவேண்டும்


கண்ணதாசன் அவர்களின் வரிகளில்...


ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம்  பாடி
நாளைபோழுதை இறைவனுக்களித்து
நடக்கும்வாழ்வில் அமைதியை தேடு
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்கையில் நடுக்கமா

சுமைதாங்கி படத்தில் திரு.P .B .ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் ,கண்ணதாசனின் வரிகள்
கிட்ட தட்ட 50 வருஷம் ஆகுது இப்பவும் இந்த பாட்ட கேட்டா மறுபடியும் மறுபடியும் கேக்கணும் போலவே இருக்கு. அவ்வளவு அழகான இசை, அர்த்தம் உள்ள வரிகள்.எவ்வளவு பெரிய மேதைகள் இவங்களாம் .இந்த பாட்ட கேக்கும் போது வர சந்தோஷத்த சொல்ல வார்த்தைகளே இல்ல .

கிட்ட தட்ட 3000 பாடலுக்கு மேல பாடின SPB அவர்கள்,ஜானகி அம்மா அவர்கள் ,சுசீலா அம்மா அவர்கள்,லதா மங்கேஷ்கர் அவர்கள் ,சித்ரா அம்மா அவர்கள்  எல்லாம் இப்பவும் அமைதியா,அடக்கமா இருக்காங்க .ஜானகி அம்மா பாடும் போது முகத்துல ஒரு சின்ன எக்ஸ்ப்ரஷன் கூட கொடுக்காம தன் குரலிலேயே அத்தனை  எக்ஸ்ப்ரஷன்-யும் குடுக்குறவங்க.இவங்ககிட்ட எல்லாம் இருந்து இப்போ இருக்குற ஜெனரேஷன் கத்துக்கவேண்டியது நிறையா இருக்கு

செவ்வாய், 6 நவம்பர், 2012

எப்படி அல்சர் உருவாகுதுன்னு தெரியுமா ?




--இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ,அதாங்க என்ன சொல்லவறேன்னா.....வயிறுக்கு  சரியான நேரத்துக்கு சாப்பிட்டு அல்சர் வராம பாத்துக்குவோம்

:)



-----ஒரு நாளிதழில் இருந்து

:)


-----ஒரு நாளிதழில் இருந்து

திங்கள், 5 நவம்பர், 2012

ஆராதயா






ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் குழந்தையை நம்ம மீடியா காரங்க இந்த குழந்தை பொறந்ததுல இருந்து  போட்டோ எடுக்க படாத பாடு பட்டு கண்ணுமட்டும் தெரியுர மாதிரி,கன்னம் மட்டும் தெரியுர மாதிரின்னு போட்டோ எடுத்து(ப்யூசர்  ஹீரோயின் இன்ட்ரோடக்க்ஷன் இப்போவே குடுத்துட்டாங்க  இல்ல ) கடைசியா ஒரு வழியா போட்டோ எடுத்துட்டாங்க .


என்ன  பண்றது நமக்கு அந்த குழந்தை எப்படி இருக்கு யார் மாதிரி இருக்குனு பாக்க ஆர்வம் அவங்களுக்கு மீடியா கிட்ட இருந்து விலகி ஒரு சாதாரண குழந்தையா வளக்கணும்னு ஆசை , அமிதாப் ,அபிஷேக் ,ஐஸ்-னு ஒரு செலிபிரிட்டி குடும்பத்து வாரிசு அந்த குழந்தையே சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் மாதிரி வளரனும்னு நினச்சாலும் நாம விடமாட்டோம் இல்ல.


இந்த குழந்தை கொஞ்சம் வளந்ததும் முகம் எப்படி இருக்கும்,பத்து வயசுகிட்ட முகம் எப்படி இருக்கும்னு எல்லாம் இப்பவே மார்பிங் எல்லாம் செஞ்சு நெட்-ல போட்டு இருக்காங்க நம்ம ஆளுங்க.எப்புடி.....!!!!!!!!!!!அந்த குழந்தைய பெத்தவங்க கூட இத இன்னும் யோசிச்சு இருக்கமாட்டாங்க.


-------என்ன பண்றது பிரபலம் நாவே  ப்ராபளம் தான்

வெள்ளி, 2 நவம்பர், 2012

நம்ம ஊரு நாய்கள் ...

வெள்ளக்காரங்களுக்கு எதிரான போர்ல மருது சகோதரர்கள் வெள்ளக்காரங்களோட குதிரைபடைக்கு எதிரா ராஜபாளையம் வகை   'நாய்படையை'  பயன்படுத்தி அவங்க குதிரை படையை விரட்டினாங்கலாம் .

ஹே...என் ப்ளாக்-ம் விகடனில் வந்துருக்கு பாத்துக்கோ... பாத்துக்கோ.... பாத்துக்கோ...


எனக்கு முதல் முதல்ல பேசிக் கோடிங் சொல்லிக்குடுத்து அதுமேல எனக்கு ஆர்வம் வரவச்ச என் குருவில் இருந்து என்னை என்கரேஜ் செஞ்ச என் நண்பர்கள்,என் குடும்பம் ,சொந்தகாரங்க  மேலும் என்னை இன்னும்  என்கரேஜ் பண்ற விதமா இதை என்விகடன்-வளையோசை பகுதியில் பப்ளிஷ் பண்ணின ஆனந்த விகடன்..,இவங்க  எல்லாருக்கும் என்னோட நன்றிகள்...