பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 19 ஜூன், 2017

வளைகாப்பு

வளைகாப்பு! கர்ப்பிணிப் பெண்களுக்குகாகச் செய்யப்படும் ஒரு சடங்கு. இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். வளைகாப்பு நிகழ்வானது பெரும்பாலும் கருவுற்ற 7-வது மாதத்தில் செய்யப்படுகிறது.

நோக்கம்:

குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படும்போது கருவுற்ற பெண்ணுக்கு ஒரு மன தைரியம் உண்டாகிறது. மேலும் வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில் 'கண்ணாடி வளையல்' அணிவிக்கப்படுகிறது. அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.

மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

நன்மைகள்:

வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதால் கருவுற்ற பெண்ணுக்கு பிரசவம் பற்றிய பயம் நீங்கி மன தைரியம் பிறக்கிறது.

இதனால் பிறக்கும் குழந்தையும் மன தைரியத்துடன் பிறக்கும்.

வியாழன், 8 ஜூன், 2017

இதுதான் ஆண்மையா?






இவ்வளவு கேவளமானவங்களா?எங்க போய்க்கிட்டு இருக்கோம் நாம.?

"பெண்ணைவிட ஆணை வலுவா ஆண்டவன் படச்சது அவள பாதுகாக்கதானே தவிர பலாத்காரம் பண்ண இல்ல "
இது ஏதோ சினிமாவுல வர வசனமா இருக்கலாம் .ஆனா சிந்திக்கவேண்டிய ,உண்மையான வசனம்..

விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை கட்டாய படுத்துறதோ இல்ல வற்புருத்துறதோ இல்ல பலாத்காரம் செய்யுறதோ இல்ல பலாத்காரம் செஞ்சு கருவை கொடுக்குறதோ இல்ல அவ மேல ஆசிட் ஊத்துறது பேர் தான் ஆண்மையா?

உண்மையான ஆண்மைக்கு அர்த்தம் தெரியுமா? 

வியாழன், 1 ஜூன், 2017

கொசுத்தொல்லைக்கு எளியவழி!!

* கற்பூரவல்லி, கற்றாழைச் சாறு இரண்டையும் தண்ணீருடன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் ஓடிப்போகும்.

* புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இந்தச் செடிகள் இருக்கும் இடத்தை கொசுக்கள் நெருங்காது.

* காலை, மாலை வேளைகளில் கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போடலாம் அல்லது யூகலிப்டஸ் இலைகளை உலரவைத்து, அதைக்கொண்டு வீடு முழுக்கப் புகைபோடலாம். இந்தப் புகை கொசுக்களிடம் இருந்து காக்கும். ஆஸ்துமா நோயாளிகள் இருக்கும் வீடுகளில் மட்டும் புகை போடுவதைத் தவிர்க்கவும்.

* பூண்டு எண்ணெய் மற்றும் தண்ணீரை 1:5 என்ற விகிதத்தில் கலந்து வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு ஓரங்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் அண்டாது.

* எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைக்கவும். இதன் வாசனை அவற்றை நெருங்கவிடாமல் செய்யும்..

* புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுக்க தெளிக்கவும். இந்த வாசனைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கொசுக்கள் பறந்துவிடும்.

* தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில துளிகள் லாவண்டர் எண்ணெயுடன் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், கொசுக்கள் கிட்டே வராது; சுகந்தமான வாசனையும் கிடைக்கும்.

* கற்பூரத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் மிதக்கவிடவும். இதன் மணம் கொசுக்களை விரட்டும்.

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். வேப்ப எண்ணெய், யூக்கலிப்டஸ் ஆயில், கிராம்பு எண்ணெய் மூன்றையும் கலந்து வீடு முழுக்கத் தெளிக்கவும். கொசுக்கள் வாசல் தாண்டி உள்ளே வராது.

* வேப்ப இலை, நொச்சி, ஆடுதொடா, குப்பைமேனி போன்ற இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சி தைலமாக்கவும். இந்தத் தைலத்தைத் தேய்த்துக்கொண்டால், கொசுக்கள் நம்மை நெருங்காது.

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் 1:1 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். இது, கொசுக்களிடம் இருந்து நம்மைக் காப்பதோடு, சருமத்தையும் பாதுகாக்கும். இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்தும்கூட.

* யூகலிப்டஸையும் எலுமிச்சை எண்ணெயையும் சமஅளவில் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். கொசுக்கள் கிட்டே வராது.

* கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு, அறையின் உள்ளே கற்பூரத்தை ஏற்றிவைக்கலாம். 20 நிமிடங்களில் அவை இல்லாமல் போய்விடும்.

* வீட்டின் உள்ளேயும் ஜன்னல் ஓரங்களிலும் துளசிச் செடியை வளர்க்கலாம். துளசிச் செடிக்கு கொசுக்களை விரட்டும் ஆற்றல் உண்டு.