பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 16 பிப்ரவரி, 2017

படித்ததில் பிடித்தது

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது அங்கு சாதாரணமாக  தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார்.அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ-ரூமை  பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.


அப்பொழுது ஷோ-ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல் ஒரு ஏழை இந்திய குடிமகன் என நினைத்து  அடித்து விரட்டினர் இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார்.பிறகு சில மணி நேரம் கழித்து தனது முழு  அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் . ஷோ-ரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர்.ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

102 வருட பனை மரம்

பனை மரமும் தென்னை மரமும் தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்கும்.. இதோடு இதன் வாழ்வு முடிந்துவிடும் .. இதை காண்பது அபூர்வம்..