பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - ஓ மனமே - உள்ளம் கேட்குமே

படம் :உள்ளம் கேட்குமே 
பாடல் : ஓ  மனமே
பாடியவர் : ஹரிஹரன் 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 
பாடலாசிரியர் : வைரமுத்து 



ஓ  மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங் கற்களை எரிந்தது யார்

ஓ  மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்

சனி, 28 செப்டம்பர், 2013

சொல்லுங்க பாஸ் சொல்லுங்க ​...

பொண்ணுங்க எந்த வயசுல யார எதிர்த்து பேசினாலும் ​அது அப்பாவா/அண்ணனா/தம்பியா/புருஷனா இல்ல சொந்த பந்தங்களையா இருந்தாலும் அதுக்கு ஒரு தடை போடுறீங்களே...


10 வயசுக்குள்ள எதிர்த்து பேசினா முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள எதிர்த்து பேசுறியானு கேக்குறீங்க..

18 வயசுல எதிர்த்து பேசினா எல்லாம் வயசு கோளாறு....ரெண்டும் கெட்டான் வயசு ..இந்த வயசு இப்படிதான் பேச சொல்லும்னு திட்றீங்க..

25 வயசுல எதிர்த்து பேசினா எல்லாம் படிச்சுட்டு வேலைக்கு போய் சம்பாதிக்குற திமிர் அதான் எதிர்த்து பேசுறன்னு திட்றீங்க..

30+ வயசுல எதிர்த்து பேசினா குழந்தைங்கல வச்சுக்கிட்டு யார் சப்போர்ட்டும் இல்லாம உன்னால இருக்கமுடியுமா ? அவங்களுக்காகவாவது அனுசரிச்சு பேசுன்னு திட்றீங்க..

பெத்தப்புள்ளைங்க வேலைக்கு போய் சம்பாதிக்கும் போதாவது நாங்க உங்கள எதிர்த்து பேசினா , என்ன பசங்க சம்பாதிக்குறாங்கனு திமிர்ல பேசுறியானு திட்றீங்க ...

பேரன் பேத்திகளை பாத்ததுக்கு அப்பறமாவது உங்கள எதிர்த்து பேசினா பேரப் புள்ளைகளோட விளையாடறத விட்டுட்டு இந்த வயசுல பதிலுக்கு பதில் எதிர்த்து பேசுறன்னு திட்றீங்க..

அப்போ எப்போதான் நாங்க உங்கள எதிர்த்து பேசுறது...

​சொல்லுங்க பாஸ் சொல்லுங்க ​

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

பேஸ்புக் அக்கவுண்டை பிறர் பயன்படுத்தாமல் இருக்க என்ன செய்யலாம்!

நம் பேஸ்புக் அக்கவுண்டை பிறர் பயன்படுத்தாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்!

நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணினி யில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணினியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா....?


அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய மறந்து விட்டால், அல்லது திடீர் என மின் துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் ...

இந்த சந்தர்பத்தில் என்ன செய்யலாம் .......

வியாழன், 26 செப்டம்பர், 2013

சென்னை எக்ஸ்பிரஸ் படம் எனக்குப் பிடிச்சதுக்கான காரணம்

சென்னை எக்ஸ்பிரஸ் படம் எனக்குப் பிடிச்சதுக்கான காரணம்


-முதல்ல, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோயின் தீபிகாவின் பெயரை முதல்லயும் தன்னோட பெயரை இரண்டாவதுமாக டைட்டில் கார்ட்ல போட சம்மதிச்சது

-ஹாலிவுட்க்கு நிகரா எல்லா 'ஸீனு'ம் பாலிவுட்ல சர்வ சாதாரணமா எடுத்துக்கிட்டு இருக்குற இந்த சமயத்துல , ஒரு சின்ன அருவருப்பு காட்சியோ ,முகம் சுழிக்குற காட்சியோ இல்ல தலைகுனியுற காட்சியோ இல்லாம இந்த படத்தை எடுத்திருக்குற விதம் .( அட ஒரு 'கிஸ்' ஸீன் கூட இந்த படத்துல இல்லைனா பாத்துக்கோங்க )

-இது ஒரு சாதாரண கமர்ஷியல் மசாலா படம் தான்....ஆனா ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்து படத்தை எடுக்காம ஹீரோவுக்கு நிகரா ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் குடுத்து காட்சிகளையும் குடுத்துருக்குறது.

புதன், 25 செப்டம்பர், 2013

இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் நம்ம பெயர்

இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரில் நம்ம பெயர் வரவைக்க முடியும்...

1. முதல்ல start -> Run கிளிக் பண்ணுங்க

2. அடுத்து RegEdit -னு டைப் பண்ணி ok குடுங்க..

3. இப்போ registry ஓபன் ஆகும்..

4. அதுல HIKEYCURRENTUSER \Software \Microsoft \InternetExplorer \Main  -க்கு போங்க.

5..இப்போ ,வலதுபக்கதுல 'Window Title' - னு இருக்கானு பாருங்க..இருந்தா அதை ரைட் கிளிக் செஞ்சு நாம மாத்த நினைக்குற பெயரை Modify Data என்ற பகுதில குடுங்க..


6. ஒரு வேளை ,  'Window Title'-னு இல்லைனா ,வலது பக்கத்துல வெற்றிடத்துல
ரைட் கிளிக் செஞ்சு 'new' -> 'Key' கிளிக் செஞ்சு அதுல   'Window Title'-னு கொடுங்க..

7. இப்போ இதை ரைட் கிளிக் செஞ்சு  Modify Data பகுதில  நாம மாத்த நினைக்குற பெயரை குடுத்தா ,விண்டோஸ் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரரில அந்த பெயரும் சேந்து வரும்

எலட்ரிக்சிட்டி பில் ஆன்லைன்ல தெரிஞ்சுக்க

நம்ம வீட்டு எலட்ரிக்சிட்டி பில்  எவ்ளோ வந்துருக்குனு தெரிஞ்சுக்க 

http://tneb.tnebnet.org/newlt/menu3.html

இந்த லிங்க் போங்க ..அதுல நம்மோட மாவட்டத்தை செலக்ட் பண்ணிக்கணும் அடுத்து நம்மோட EB சர்வீஸ் நம்பர் குடுக்கணும் ..அவ்ளோதான்


செவ்வாய், 24 செப்டம்பர், 2013

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

வாழை இலையின் மகத்துவத்தை பத்தி ஏற்கனவே ஒரு போஸ்ட்ல படிச்சிருப்பீங்க..வாழை இலையில் உணவு பரிமாறும் விதத்தை பத்தியும் அதற்க்கான காரணத்தை பத்தியும் இப்போ பாப்போம்..




1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.


                                            -- நன்றி FB 

திங்கள், 23 செப்டம்பர், 2013

ரொம்ப சோதிக்குறாங்க பாஸ்....

எங்க ஏரியால ஒரு பெண்மணி இருக்காங்க...அவங்க பிச்ச எடுக்குறவங்களும் இல்ல ,வீடு குடும்பம்னு வாழுறவங்களும் இல்ல...ரொம்ப வயசானவங்களும் இல்ல, ரொம்ப இளமையானவங்களும் இல்ல...அவங்கள முழுசா பைத்தியமோனு நினச்சுடவும் முடியாது...கணிக்கவும் முடியாது..

சாப்பாடு கேட்டு வீட்டு கேட்டை தட்டினாங்க ..என் அம்மா கோவமா ஏதும் இல்லமா போ-னு சொல்லி அனுப்பினாங்க..எனக்கு செம கோவம்..பொறுமையா சொல்லாம் இல்ல , பாவம் தானே, ஏன் இப்படி கோவமா சொல்றீங்கனு கோவிச்சுகிட்டேன் ..வேற யாரும் இவங்களுக்கு சாப்பாடு குடுக்கமாட்டாங்க ..சில பல சமயம் தண்ணி கூட தரமாட்டாங்கனு சொன்னாங்க என் அம்மா ..ச்ச ..இப்படி இருக்காங்களே ஜனங்க , கொஞ்சம் கூட மனசே இல்லாமனு முனுமுனுத்துக்கிட்டு இருந்தேன் ..உனக்கு தெரியாது ,பேசாம வாய மூடிக்கிட்டு உன்வேலைய பாருன்னு சொன்னாங்க என் அம்மா ...

இன்னோர் நாள் அதே மாதிரி சாப்பாடு கேட்டு வீட்டு கேட்டை தட்டினாங்க .. அய்யோ பாவம் பசியால இருக்காங்கலேன்னு சாப்பாடு குடுத்து , எப்படி கவுண்ட்டர் வாங்கினேன் தெரியுமா?

- இதுதான் இருக்கா?ஏன் இன்னைக்கு வேற எதுவும் சமைக்கலையா?
  (முகத்தை சுழிச்சுகிட்டு)

என் அம்மாவை திரும்பி பாத்தேன்..பெருசா எங்கிட்ட சத்தம் போட்ட,நல்லா வாங்குன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க..

பாவம்ன்னு நினச்சு பராவாஇல்ல பேசட்டும் , போகட்டும்னு சாப்பாடையும் கொடுத்துட்டு , இப்படி ஒரு ஒரு நாளும் என்ன என்ன கவுண்ட்டர் வாங்கி இருக்கேன் தெரியுமா?

- சாதம் சூடா இல்லையா?

-இட்லிக்கு தொட்டுக்க ஏதும் இல்லையா?

-அப்பா...இவ்வளவு காரத்தையா போடுவீங்க...எப்படித்தான் சாப்புடுறீங்களோ ?

-கத்தரிக்கா கொழம்பா ?எனக்கு பிடிக்காதே....சொல்லிட்டு ஊத்தி இருக்கலாம் இல்ல சாப்பாட்டுல...

சில சமயம் ஏதும் இல்லைனா/இல்ல சாப்பிட்டு முடிச்சுருந்தோம்னா ,இல்லைன்னு அவங்க கிட்ட சொன்னா..

- ஏன் இன்னைக்கு ஏதும் சமைக்கலையா?சமைக்காம என்னதான் பண்ணுவீங்களோ அப்படி?!?

-ஏன் தண்ணி பாட்டில்ல தான் குடுப்பீங்களா ?சொம்புல குடுத்தா என்ன?ஏன் உங்க வீட்ல சொம்பே இல்லையா?

வடிவேல் சார் டயலாக் மாதிரி ,இந்த அவமானம் உனக்கு தேவையான்னு என்ன நானே கேட்டுக்குறேன் ..


என்ன கொடுமைங்க இது... இதுமாதிரி பேசினா எப்படிங்க செய்ய மனசுவரும்...

ஒரு நாள் கோவம் வந்து நாங்களும் இந்த பாட்டில்ல தான் தண்ணிகுடிக்குறோம் , உங்களுக்கு குடுக்குறதுக்கு எனக்கு இதுலாம் தேவைதான்னு சத்தமே போட்டேன்..

ரொம்ப சோதிக்குறாங்க பாஸ்....

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஆன்லைன் மூலம் இருப்பிடம்,சாதி,வருமானச் சான்றிதழ்கள்

ஆன்லைன் மூலம் இருப்பிடம்,சாதி,வருமானச் சான்றிதழ்களை பெறலாம்.

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதழ்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்,வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச் சான்றிதழ்களை பெற முடியும்.

இணைய முகவரி: http://edistrict.tn.gov.in/




(அப்போ இனிமே இத எல்லாம் வாங்க லஞ்சம் குடுக்கவேண்டியதில்லையா?அப்பாடா...)

சனி, 21 செப்டம்பர், 2013

பூஜைகளும் அர்த்தங்களும்

நித்திய பூஜை - தினமும் கோயில்களில் செய்வது

காமிய பூஜை - ஏதாவது வேண்டுதலுக்காக செய்வது


நைமித்திக பூஜை - திருவிழாக்களில் செய்வது

பஞ்சாயதன பூஜை - பஞ்சமூர்த்திகளை (5 தெய்வங்கள்) எழுந்தருளச் செய்து பூஜிப்பது

விஷ்ணு பஞ்சாயதன பூஜை -நடுவில் பெருமாளும் சுற்றிலும் விஸ்வஷேனர் ,வைஷ்ணவி , துர்க்கை ,மகாலட்சுமி ,கருடன் ஆகியோரை அமர்த்தி பூஜிப்பது

சிவபஞ்சாயதன பூஜை - நடுவில் சிவலிங்கமும் சுற்றிலும் சூரியன்,விநாயகர்,அம்பாள்,பெருமாளை அமர்த்தி பூஜிப்பது

தமிழில் எண்கள்

1-0  எண்களை தமிழ்ல எப்படி சொல்றதுனு தெரியுமா உங்களுக்கு..

1-க   2-உ   3-ங   4-ச    5-ரு   6-சா    7-எ      8-அ      9-கூ    0 - ஓ .


இதை ஈஸியா நியாபகம் வச்சுக்க ஒருவாக்கியமாக்கி குடுத்து இருந்ததை படிச்சப்போ ரொம்ப நல்லா  இருந்தது..அதை உங்களுக்கும் சொல்றேன்...

''டுகு  ''ளுந்து ''னச்சு  ''மைச்சு 'ரு'சிச்சு 'சா'ப்பிட்டேன்  ''ன ''வன் 'கூ'றினான் ..'' என்றாள்.


என்ன ஈஸியா  இருக்கா?நல்லா இருக்குல்ல ......


                                       ஒரு வார இதழில்  இருந்து 

வியாழன், 19 செப்டம்பர், 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 5 & 6

விநாயகர் சதுர்த்தி அப்போ,விஜய் டிவியில் ஃகாபி வித் DD நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் மற்றும் சத்தியராஜ் அவர்களின் இன்டர்வியூ ...






6.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இமான் அவர்கள் மற்றும் சிவகார்த்திகேயன்  கலந்துகிட்ட இந்த எபிசோட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்ச அழகேசன் சார் + மா கா பா + சிவகார்த்திகேயயின் காமெடி



புதன், 18 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - பேருந்தில் நீ எனக்கு - பொறி

படம் :பொறி 
பாடல் : பேருந்தில்  நீ  எனக்கு 
பாடியவர் : மது பாலகிரிஷ்ணன் ,மதுஸ்ரீ 
இசை : தீனா 

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
ஆள் இல்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

விர்ர்... விர்ர் ... வீராங்கனை அலீஷா ...

கார்,பைக் ரேஸில் பட்டையை கிளப்பிக்கிட்டு இருக்கும் அலீஷா அப்துல்லா , இவர் இந்தியாவின் ஒரே பெண் ரேஸர்  ..
இவரின் அப்பா அப்துல்லாவும் ஒரு சிறந்த பைக் ரேஸர்..அவரை பார்த்து பார்த்து ரேஸிங் மேல அலாதி ஈர்ப்பு வந்துடுச்சுன்னு சொல்ற இவர்  தன்னோட 8 வயசுல இருந்து பைக் ஓட்ட ஆரம்பிச்சுருக்காங்க .
தன்னோட அப்பாவைதான் தனக்கு  ரோல் மாடல்னு  அலீஷா  சொல்றாங்க.

திங்கள், 16 செப்டம்பர், 2013

அனுப்பின மெயிலை திரும்பப்பெற ...

நீங்கள் ஜிமெயிலில் மின்னஞ்சல் அனுப்பும் போது தவறுதலாக ஏதோ பிழையோட  அனுப்பிட்டா  உடனே உங்கள் மின்னஞ்சலை திரும்ப பெற்றுக் கொள்ள வசதிஇருக்கு .


1. உங்கள் ஜிமெயில வலது பக்கத்துல  “Mail settings” கிளிக் பண்ணுங்க .

2. பிறகு “Settings” ல “Labs” கிளிக்பண்ணுங்க .


3.”Available labs” கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Undo Send” பக்கத்துல இருக்குற “Enable”பட்டன் கிளிக்பண்ணுங்க .அவ்ளோதான்..


இப்போ நீங்க மெயில் அனுப்பினதும்  Your message has been sent -னு மெசேஜ் வரும் இல்லையா  பக்கத்துலையே Undo -னும் வரும்..அத கிளிக் செஞ்ஜீங்கனா நாம அனுப்பின மெயில் நமக்கு திரும்ப வந்துடும் ...(பலமணிநேரத்துக்கு அப்பறம்  இல்ல பல நாளுக்கு அப்பறம் எல்லாம் திரும்ப வாங்க முடியாது..)

(அட! அட!  அட!  இது தெரியாம பயப்புள்ள எத்தனை தரம் திட்டுவாங்கி இருக்கேன்னு ஃபீல் பண்றவங்களா நீங்க ....... நீ என் இனமடா !!!!) 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

உங்களுக்கு வேண்டிய ஃபைல் தானாக ஓப்பன் ஆக...

இப்போ நீங்க logon ஆனதும் எதாவது ஒரு ஃபைல் தானா ஓப்பன் ஆகனும்னு நினச்சீங்கனா அதாவது நீங்க தினம் தினம் அந்த ஃபைல்   செக் பண்றீங்க ஆனா அது இருக்குற இடத்தை ஒரு ஒரு தரமும் ஒன்னொன்னா ஓப்பன் பண்ணி பாக்க நேரம் செலவாகுது..எதாவது வழி இருந்தா நல்லா  இருக்கும்னு நினச்சீங்கனா அதுக்கு ஒரு வழி இருக்கு  ...

இப்ப உதாரணமா temp போல்டர்ல இருக்குற ஒரு ஃபைல் உங்களுக்கு logon செஞ்சதும்  தானா ஓப்பன் ஆகணும்னு நினச்சீங்கனா ..

1. Start  - > Settings ->Control Panel -> Sheduled Task போங்க..

2. Add Sheduled Task -னு  இருக்கும் அத கிளிக் பண்ணுங்க..ஒரு டயலாக் பாக்ஸ் வரும் .


சனி, 14 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - போகாதே - தீபாவளி

படம் : தீபாவளி 
பாடல்:போகாதே 
பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா 
இசை:யுவன் ஷங்கர் ராஜா 
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார் 



போகாதே போகாதே
நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால் நான் இறப்பேன்

உன்னோடு வாழ்ந்த
காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும்
என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 4

விஜய் டி.வியின் ஜோடி நம்பர் 1 சீசன் 6-ல் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினரா கலந்துகிட்டார்..அவரோட 'வருத்தப்படாத வாலிப சங்கம் ' படத்தோட சிறப்பு நிகழ்ச்சி ...

அந்த படத்துல 'ஊதா கலரு ரிப்பன் ..உனக்கு யாரு அப்பன் '-னு ஒரு பாட்டு இருக்கும்..அதோட டான்ஸ் நல்லா  இருக்கும் அதை , ஜோடி நம்பர் 1 சீசன் 6-ன் சில போட்டியாளருக்கு கத்துக்குடுக்குராறு பாருங்க ..அதுல ரோபோ ஷங்கரும் சிவகார்த்திகேயனும் பண்ற கலாட்டா இருக்கே.....அதப் பாத்து சிரிச்சு சிரிச்சு போதும்னு ஆகிடுச்சு....

யாரையும் புண்படுத்தாம அதே நேரம் எல்லாரையும் சிரிக்க வைக்குறது சாதாரண காரியம் இல்ல..அது சிவகார்த்திகேயன்கிட்ட நிறையாவே இருக்கு...

திறமை,உழைப்பு,அதிஷ்டம் எல்லாமே  இருக்கணும் அப்போதான் வாழ்க்கைல முன்னேற முடியும்..அதுக்கு இவரும் ஒரு உதாரணம்


சனி, 7 செப்டம்பர், 2013

உலகின் முதல் ஆம்புலன்ஸ்

ஃபேஸ்புக்ல ஒரு  பக்கத்தோட  போஸ்ட் படிச்சேன்  .அதுல இருந்த இந்த நியூஸ் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது...அத அப்டியே உங்க கிட்ட ஷேர் பண்றேன்.


உலகின் முதல் ஆம்புலன்ஸ் !!!

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்). இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.





வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - என்ன புள்ள செஞ்ச நீ - ராமன் தேடிய சீதை

படம் :ராமன் தேடிய சீதை 
பாடல் :என்ன புள்ள செஞ்ச நீ 
பாடியவர்கள் : வித்யாசாகர் 
பாடலாசிரியர் : ஜெயந்தா 
இசை:  வித்யாசாகர் 

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பய நெஞ்ச நீ

பாக்கையிலே சொக்க வச்ச
பறக்கத்தான் ரெக்க வச்ச
திக்க வச்ச தெணர வச்ச
திசையத்தான் உணர வச்ச
தெக்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச

இன்ஸ்டன்ட் மணியார்டர்

பத்தே நிமிடத்தில் பணம் அனுப்ப வசதியாக உடனடி மணியார்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது இந்திய தபால்துறை.. இச்சேவை ‘ஐ.எம்.ஓ.’ (Instant Money Order) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் எந்த ஐ.எம்.ஓ. தபால் அலுவலகத்திலும் பணம் அனுப்பவோ, பெறவோ முடியும் .


ஐ.எம்.ஓ. உள்ள தபால் அலுவலகத்தின் ஐ.எம்.ஓ கவுண்டரில் டி.ஆர்.பி-1 (To Remit Payment) என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு ரசீது ஒன்று கொடுப்பார்கள். அதில் 16 இலக்க ரகசிய எண் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த ரசீதைப் பிரித்து அதிலிருக்கும் 16 இலக்க எண்ணை யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவருக்கு SMS மூலமா அல்லது தொலைபேசிமூலமா அல்லது மெயில் மூலமாகவோ அனுப்பிடனும்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

பாடலின் வரிகள் - யார் இந்த சாலையோரம் - தலைவா

படம் :  தலைவா 
பாடல் :  யார் இந்த சாலையோரம்
பாடியவர்கள் :  G .V பிரகாஷ்,சைந்தவி 
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார் 
இசை:    G .V பிரகாஷ்
யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது
நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் நான் கொல்லுதே
எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் தூரானது வானிலே

மனிமெயில்

கூகுள் தன்னோட சேவையை அடுத்தகட்டத்துக்கு கொண்டுபோய் இருக்கு.அதுதான் ஜிமெயில் மூலம் பணம் அனுப்பும் சேவை.

முதல்ல நாம நம்மோட வங்கிக் கணக்கையோ அல்லது கிரெடிட் கார்டு எண்ணையோ இதில் பதிவு செய்யணும். அப்பறம் நமக்கு ஒரு conformation பதில் வரும். அதுக்கு அப்பறம் தான் இச்சேவையைப் நாம பயன்படுத்த முடியும். .

அடுத்து நாம் யாருக்கு பணம் அனுப்ப விரும்புறோமோ அவங்களுக்கு இ மெயில் கடிதம் எழுதி அதை பேப்பர் கிளிப் குறியுடனும், டாலர்($) குறியுடனும் இணைக்கணும். .

புதன், 4 செப்டம்பர், 2013

youtube வீடியோவை நேரடியாக டவுன்லோட் செய்ய

youtube -ல் பார்க்கும் வீடியோவை எந்த தனி சாப்ட்வேரும் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக டவுன்லோட் செய்யமுடியும்.

1. முதல்ல எந்த வீடியோ டவுன்லோட் செய்யணுமோ அந்த வீடியோவை செலக்ட் செஞ்சுக்கோங்க ..


2.அதோட அட்ரஸ்பாரில் ,அந்த வீடியோவுக்கான URL தெரியும்.



செவ்வாய், 3 செப்டம்பர், 2013

லெண்டிங் லைப்ரரி


RENTMYTEXT.IN என்ற இணையதளம் மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை ஆன்லைன் மூலம் வாடகைக்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக பாடப் புத்தகங்களை ஆன்லைனில் வழங்கும் ஒரே நிறுவனமும் இதுதான்.அதன் நிறுவனர் விசேஷ் ஜெயாவந்த்

இந்த இணையதளம்  மூலம் ஒவ்வொரு செமஸ்டருக்கும் தேவைப்படும் புத்தகங்களை மாணவர்கள் RENTMYTEXT.IN ‡ தளத்தில் LOG ON/IN செய்து, தேவையான புத்தகங்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பாக ஒரு மாணவர் எத்தனை புத்தகத்தை வேண்டுமானாலும் வாடகைக்குப் பெறலாம். இந்தியாவிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் சர்வதேச அளவிலான அறிஞர்கள் எழுதிய புத்தங்கங்கள் இந்தத் தளத்தில் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்திற்கும் வாடகையாக அந்தந்தப் புத்தகத்தின் அடக்க விலையை செலுத்த வேண்டும். வாடகைத் தொகையை மாணவர்கள் புத்தகங்கள் டெலிவரியாகும் போது செலுத்தும் வசதியும் (CASH ON DELIVERY)இதிலுள்ளது. புத்தகங்கள் ஆர்டர் செய்த 3 முதல் 5 தினங்களுக்குள் மாணவர்களுக்கு கிடைத்து விடுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

பட்ஜெட்

வீட்டின் வரவு, செலவுக் கணக்குகளை எளிதாகக் கையாள்வதற்கு, ஸ்பெண்ட்ஃபுல் (Spendful) என்கிற இணையதளம் இலவசமாக உதவுது . இந்த தளத்துல நம்ம மின்னஞ்சல் கணக்கைக் கொடுத்து நுழைந்ததும் , பட்ஜெட் செட்டிங் வரும். அதுல பட்ஜெட் பெயர், நாணயம், கையிருப்புத் தொகை ஆகிய விவரங்களைப் பதிவு செய்யனும்.


இந்த இணையதளம் நமது பட்ஜெட் நடவடிக்கை குறித்த விவரங்களை மின்னஞ்சல் வழியாக அவ்வப்போது தெரிவிக்குது . அது வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் வேண்டுமா, தேவையில்லையா என்பதை நாம தான் குறிப்பிடணும் . இதைக் கொடுத்ததும் அடுத்து வரும் திரைல income, Expense இல் Add item என்பதை கிளிக் பண்ணி , வரவு மற்றும் செலவு குறித்த விவரங்களை தேதியுடன் கொடுத்துக்கொண்டே வரவேண்டியதுதான்.

வீட்டு வரவு, செலவுக் கணக்குகளுக்குப் பட்ஜெட் போட்டுப் பாக்க தேவையான மென்பொருள் www.home-budget-software.com என்கிற இணையதளத்திலும், அலுவலக வரவு, செலவுக் கணக்குகளுக்குப் பட்ஜெட் போட்டுப் பாக்க தேவையான அக்கவுண்ட்டிங் மென்பொருள் www.manager.io என்ற இணையதளத்திலும் இலவசமாகக் கிடைக்கின்றன. நீங்களே பட்ஜெட் போட்டுப்பார்க்க

இணையதள முகவரி : www.spendful.com