எனக்கு ஒரு விஷயம் புரியல . முன்னாடி நான் அந்த நடிகருக்கு போட்டி கிடையாது , அந்த நடிகரும் எனக்கு போட்டி கிடையாதுன்னு சொன்னீங்க . நா அவரை compare பண்ணிக்கிட்டா அது எனக்கு அசிங்கம் அவர் என்னை compare பண்ணிக்கிட்டா அது அவருக்கு அசிங்கம்னும் சொன்னீங்க . அப்பறம் காக்கா கழுகு கதையை சொன்னீங்க. அப்புறம் இத நான் எந்த நடிகரையும் நினச்சு சொல்லலைனு சொன்னீங்க. நா சொன்னாலும் நீங்க கேக்கவா போறீங்கனும் சொன்னீங்க.
இப்போ அரசியல்ல ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிட்டார். அவரை பாத்து பொறாமைப்படல ,ஒரு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் -னு சொன்னீங்க. நான் அரசியலை விட்டு விலகிட்டேனு சொன்னீங்க. அதுக்கு சரியான காரணமும் சொன்னீங்க.
எல்லாம் சரி , அப்பறம் இப்போ ஏன் தனி இயக்கம் ஆரம்பிக்குறீங்கன்னு சொல்றாங்க ?(direct -ஆ நீங்க இல்லைனாலும் உங்க குடும்பம் தானே) .அந்த நபருக்கு ஆதரவு தரப்போறீங்கன்னு சொல்றாங்க .ஆன்மீக அரசியல் அவரை வச்சு பண்ணபோறீங்கன்னு சொல்றாங்க . உங்க குடும்ப உறுப்பினர்கள் அதுல இணையப்போறாங்கனு சொல்றாங்க.
இதுல எது உண்மை ? எது பொய் ?
நீங்க வந்துருந்தா கண்டிப்பா ஜெயிச்சுருப்பீங்க .சந்தேகமே இல்ல . ஆனா வரல இல்ல.. இனிமே வேணாமே . உங்கள நாங்க திரையிலையே ரசிச்சுட்டு போறோமே . அதுவே எங்களுக்கு எப்பவும் அளவில்லாத சந்தோஷம்.