பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 20 நவம்பர், 2015

இப்படி பொறந்துருக்கலாமோ ..

நாயா பொறந்தாலும் நல்ல நேரத்துல பொறக்கனும்னு சொல்வாங்களே ...
எங்க வீட்லயும் ஒரு அஞ்சறிவு ஜீவன் ஷானு வளருது பாக்க டெரர் , கொடுக்குறதுல பாரி வள்ளல் , சாப்பிடுறதுல சாப்பாட்டு ராமன் சாரி ராமி, தூங்குறதுல கும்பகர்ணன் சாரி கும்பகர்ணி ...
பாக்க டெரர் : பின்ன , வீட்டுக்கு யாரும் வரக்கூடாது, வந்தா அவங்க அமைதியா உக்காந்து பேசணும், எந்த பொருளையும் தொடக்கூடாது , ரொம்ப அசையக்கூடாது,எங்க யாரையும் தொட்டோ அடிச்சோ பேசிடக்கூடாது..முக்கியமா யாரும் சண்டைபோட்டுக்க கூடாது...

கொடுக்குறதுல பாரி வள்ளல் : பசினு வேற ஜீவராசிகள் வீட்டுக்கு வந்துட்டா தான் கிண்ணத்துல இருக்குற சாப்பாடோ ,பாலோ எத சாப்டாலும் வேடிக்க பாக்கும், குரங்கு பட்டாளம் வீட்டுக்குள்ள வந்து அலேக்கா ஒரு சீப்பு வாழைப்பழத்தை தூக்கிட்டு போனாலும் ,இல்ல முருக்கு சிப்ஸ்னு இருக்குற டப்பாக்கள தூக்கிட்டு போனாலும் ,அண்ணே வேற ஏதாவது வேணுமா இல்ல போதுமானு கேக்கும் அதுங்ககிட்ட..பாம்ப பாத்தாக்கூட அதும் ஒரு ஜீவன் தானேனு அமைதியா வேடிக்கப் பாக்கும்.
சாப்பிடுறதுல சாப்பாட்டு ராமன் சாரி ராமி : உலகத்துலையே இதுக்கு பிடிச்ச வார்த்த 'சாப்பிட்ற ஐட்டம்' ..அது வெஜ் ஆக இருந்தாலும் சரி இல்ல நான்-வெஜ் ஆக இருந்தாலும் சரி ஒரு பிடி பிடிக்கும். இது ஒரு ஸ்வீட் பைத்தியம்..எல்லா விதமான ஸ்வீட்டும் சாப்பிடும்..அதுக்காக கார ஐட்டம் பிடிக்காதுன்னு இல்ல அதையும் விட்டு வைக்காது, என்ன விட அதிகமா பச்சை காய்கரி சாப்பிடும்..கேரட்,புடலங்காய்,பூசணிக்காய்,தேங்காய் எப்பயாவது புளிக்காத மாங்காய் இது எல்லாம் பச்சையா சாப்பிடும்னா சாம்பார் முள்ளங்கி,வேகவச்ச பீட்ரூட்டும் சாப்பிடும்...பழம்: ஆப்பிள் ,திராட்சையை தவிர அத்தனை பழமும் இஷ்டமா சாப்பிடும்..அதுவும் வாழைப்பழம்னா ரொம்ப இஷ்டம்..பஜ்ஜி போண்டா வடை அப்பளம் ஏதாவது விட்டுவைக்குமா கிடையவே கிடையாது..பாயாசம் ரொம்ப பிடிக்கும்.ஐஸ்கிரீம்,கேக் சாக்லேட் அதும் ஒரு கை சாரி ஒரு வாய் பாக்கும்...தெருவுல ஐஸ்கிரீம் வண்டி போச்சுனா போதும் , அந்த அண்ணனை சத்தம் போட்டு வண்டிய நிறுத்த வச்சு எங்கள வந்து சத்தம் போட்டு கூப்பிட்டு போகும் , எங்க ஐஸ்கிரீம் வண்டி போயிடுமோனு வீட்டுக்கும் தெருவுக்கும் புலி பாய்ச்சல்ல ஓடும்,4 நாள் அந்த அண்ணன் பாத்தார் 5வது நாள்ல இருந்து இது அவரோட ரெகுலர் கஸ்டமர் ஆகிடுச்சு..அதே மாதிரி காய்கறி வண்டி ....

செவ்வாய், 17 நவம்பர், 2015

‪‎மழையால்பாதிக்கப்பட்ட‬ மக்கள் தங்களது ‪#‎பிரச்சினைகளை‬ கூற..

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (‪#‎தாசில்தார்‬ ) செல் எண்கள் :- 1 Fort-1.Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488

2 திருவள்ளூர் மாவட்டம்

6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496

3 காஞ்சிபுரம் மாவட்டம்

14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504

4 வேலூர் மாவட்டம்

22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512

தெரிஞ்சுப்போமே,

-உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டம் ஆப்பிரிக்கா.

-உலகின் மிக நீளமான நதியான நைல் நதி இந்தக் கண்டத்தில்தான் ஓடுகிறது.

-சாய்ரே, நைஜர், சாம்பேசி என மூன்று பெரிய நதிகளும் இந்தக் கண்டத்தில்தான் இருக்கின்றன.

-உலகின் மிகப் பெரிய பாலைவனமான சகாரா இங்குதான் உள்ளது. கலஹாரி, நமீபியா ஆகிய இரு பெரிய பாலைவனங்களும் ஆப்பிரிக்காவிலேயே உள்ளன.

- 14,300 வெவ்வேறு மொழி பேசும் மக்கள் ஆப்பிரிக்காவில் வசிக்கின்றனர்.

- இந்தக் கண்டத்தில் இஸ்லாம், கிறிஸ்தவ மக்களே அதிகம் உள்ளனர்.

- ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய சிகரம் ‘கிளிமாஞ்சரோ’. இதன் உயரம் 5,895 மீட்டர்.

- இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய ஏரி ‘விக்டோரியா’. இதன் பரப்பு 68,800 சதுர கிலோமீட்டர்.

-மக்கள்தொகை அடிப்படையில் இந்தக் கண்டத்தில் உள்ள பெரிய நாடு ‘ நைஜீரியா’. 11 கோடியே 50 லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள்.

- ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர் யானை போன்ற அரிய வகை விலங்குகள் இக்கண்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன.