பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 19 ஆகஸ்ட், 2017

கார் பத்தி சில விஷயங்கள் தெரிஞ்சுப்போமே..

கார் பத்தி சில விஷயங்கள் தெரிஞ்சுப்போமே..

# ஆரம்ப காலக் கார்களில் ஸ்டியரிங் வீல் இல்லை. காரை ஓட்ட ஓட்டுநர்கள் நெம்புகோலையே பயன்படுத்தினர்.

# உலகில் தற்போது ஓடும் கார்களின் எண்ணிக்கை 100 கோடி. 1986-ல் 50 கோடிக் கார்களே ஓடிக்கொண்டிருந்தன.

# உலகில் ஒவ்வொரு நாளும் புதிதாக 1,65,000 கார்கள் உற்பத்தியாகின்றன.

# புது காரில் வரும் வாசம் உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா? அதற்காக 50 நறுமணப் பொருள்கள் கலக்கப்படுகின்றன.

# சராசரியாக ஒரு காரில் 30,000 உதிரி பாகங்கள் இருக்கின்றன. இதில் சின்னஞ்சிறிய பாகங்களும் அடக்கம்.

# பிரிட்டிஷ் போக்குவரத்து போலீஸார் எப்போதும் கைகளில் பொம்மைக் கரடிகளை வைத்திருப்பார்கள். சாலை விபத்துகளில் சிக்கும் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட அவர்கள் இதை வைத்திருக்கிறார்கள்.

# ஹெச்.பி. எனப்படும் ஹார்ஸ் பவர் என்ற அளவுக்கும், குதிரை ஓடும் அளவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஓர் இயந்திரம் ஓடும் அளவைக் குறிப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல் அது, அவ்வளவுதான்.

# மும்பையைச் சேர்ந்த கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஃபாஸ்டர், 1897-ல் இந்தியாவில் முதன் முதலில் கார் வாங்கினார்.

# 1769-ல் உலகின் முதல் மோட்டார் வாகன விபத்து நடந்தது. அந்தக் கார் இப்போதும் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள தேசிய கலை, கைவினை காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

# முதன் முதலில் கார் வாங்கிய இந்தியர் ஜம்ஷெட்ஜி டாட்டா, 1901-ம் ஆண்டில் அவர் அதை வாங்கினார்.

# உலகின் முதல் எலெக்ட்ரானிக் போக்குவரத்து சிக்னல், இங்கிலாந்தில் உள்ள வோல்வர்ஹாம்ப்டனில் 1927-ல் நிறுவப்பட்டது.

# 1965-ம் ஆண்டில், ஒரே ஆண்டில் 10 லட்சம் கார்கள் விற்றது செவ்ரோலே இம்பாலா. இந்தச் சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

# ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்த கார்களில் 75 சதவீதம் இன்றைக்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

# சாலை நெருக்கடிகள் காரணமாக இந்தியாவில் ஓர் ஆண்டில் ரூ. 54 கோடி மதிப்புள்ள எரிபொருள் வீணாகிறது.

# ஒரு காரில் 95 கி.மீ. வேகத்தில் பயணித்தால் நிலவை அடைய 6 மாதங்கள் ஆகும். --- படித்ததில் பிடித்தது

திங்கள், 24 ஜூலை, 2017

அதிசயிக்க வைக்கும் அலாஸ்கா வளைகுடா




மத்தியதரைக் கடல் மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய இரு சமுத்திரங்களும் சந்திக்கும் இடம் இது . ஆனால் ஒன்றுடன் ஒன்று கலக்காது..

 இதற்கு பின் உள்ள அறிவியல் உண்மை என்னவென்றால்.. இரண்டு சமுந்திரங்களுக்கும் வெவ்வேறு அடர்த்தி, உப்புத்தன்மை,வெப்பநிலை உள்ளது. இருந்த போதிலும் இரண்டு சமுதிரங்களும் கலக்க வாய்ப்பு உள்ளது ஆனால் உப்புதன்மை காரணமாக அந்த மாற்றமானது அதிகமாக வெளிப்பட வாய்ப்பில்லை, மத்தியதரைக் கடல் ஜிப்ரால்டர் நீரணை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலில் பாய்கிறது, இங்கு மத்தியதரைக் கடலின் உப்புத்தன்மை அதிகமாக இருப்பதாலும் அங்கு உள்ள பனிப்பாறைகள் உருகுவதாலும் இந்த அற்புதம் நிகழ்கிறது. 

புதன், 19 ஜூலை, 2017

தெரிஞ்சுப்போமே, ..

இத்தாலி நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களைத்தான் ரோமானியர்கள் என்கிறோம். ரோமானிய மொழியில் விரலுக்கு டிஜிட்டஸ் (digitus) என்று பெயர். அந்த வார்த்தைதான் இன்று நாம் பயன்படுத்துகிற டிஜிட் (digit) எனும் வார்த்தையை நமக்குப் பெற்றுத் தந்துள்ளது.

விறைப்பான விரல்கள்

2500 வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்த ரோமானியர்கள் பயன்படுத்திய எண் உருவங்கள் எல்லாம் விரல்களே. ரோமன் எண்கள் நீட்டவாக்கில் விறைத்தபடி இருக்கும் விரல்கள். காலப்போக்கில் அவற்றில் மேலேயும் கீழேயும் சிறுகோடுகள் உருவாகி உள்ளன. அவை கூட்டு எண்களாகவும் மாறி உள்ளன. அவற்றில் ஒன்று முதல் நான்கு வரையான எண் உருவங்கள் வெறும் நான்கு விரல்களாகவே ஆரம்பத்தில் இருந்தன.

விரிந்த கை

ரோமானிய எண்களில் ஐந்து எனும் எண்ணின் உருவம் ஆங்கில எழுத்தான V போல இருப்பதாக, இப்போது நாம் புரிந்துகொள்கிறோம் இருக்கும். ஆனால் உண்மையில் ஐந்து விரல்களையும் விரித்தபடி இருக்கும் கையின் கட்டைவிரலும் அதற்கு அருகில் இருக்கும் முதல்விரலும் இணைந்த உருவமாகத்தான் (அது ஆங்கில எழுத்து V போல தெரிகிறது) இருக்கிறது. ஒரு விரிந்த கையின் மொத்த விரல்களையும் குறிக்கும் உருவம்தான் அது.

இரு கைகளின் இணைவு

10 என்ற எண்ணிக்கைக்கான எண் உருவமான X என்பது இரண்டு கைகளின் இணைந்த உருவமாகவே உருவாகி உள்ளது. பெரிய எண்களை குறிக்க தங்களது மொழியின் எழுத்துக்களை ரோமானியர்கள் பயன்படுத்தினார்கள். L என்றால் 50. C என்றால் 100. D என்றால் 500. M என்றால் 1000. என்பதாக ஆரம்பகால ரோமானிய எண்கள் அமைந்தன.

ரோமானியர்கள் தங்களின் கடிகாரங்களில் பயன்படுத்திய அத்தகைய எண்களைத்தான் இன்னமும் பல கடிகாரங்களில் நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

ஐரிஷ் குடியிருப்பு :

உங்களோட தாத்தா அல்லது பாட்டி ரெண்டுபேர்ல யாராவது ஒருத்தங்க ஐரிஷ் நாட்டை சேர்த்தவங்களா இருந்தா போதும் நீங்க எந்த நாட்டவரா இருந்தாலும் எங்க பொறந்து வளந்திருந்தாலும் உங்களுக்கு ஐரிஷ் குடியுரிமை கிடைக்கும் .

கணினி மௌஸ் :

டொகுலாஸ் எங்கல்பர்ட் என்பவர் தான் முதன் முதல்ல மவுசை கண்டுபிடிச்சார்.இது 1973ல Xerox Alto computer system-ல தான் முதன் முதல்ல உபயோகப்படுத்தப்பட்டது .

செவ்வாய், 11 ஜூலை, 2017

பக்கத்து பக்கத்து நாடுகள் !!













ஹேஷ்டேக்

ட்விட்டர் ஹேஷ்டேக்

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல சோஷியல் மீடியாக்களில் இந்த ஹேஷ்டேக்ஸ்தான் பயன்படுகிறது. இந்த குறியீடு எதற்காக எல்லாம் பயன்பட்டது தெரியுமா?

1. 1960-களுக்கு முன்பு இந்த குறியீடு, எந்தவித தனிப்பட்ட பயன்பாடும் இல்லாமல்தான் உலகம் முழுக்கவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

2. பிறகு 1960-களில் இந்த குறியீடு, தொலைபேசி எண்களை குறிக்கப் பயன்பட்டது. லேண்ட்லைன் டெலிபோன்களின் டயலர்களில் கூட, இந்த குறியீட்டை நீங்கள் பார்த்திருக்கலாம். உதாரணமாக #7 என்றால், ஆங்கிலத்தில் 'Number 7' என அர்த்தம். இதற்கு பெல் ஆய்வகம் 'Octothrope' எனப் பெயரிட்டது. இதற்கு காரணம், # குறியீட்டில் இருக்கும் எட்டு முனைகள்தான்!

3. பள்ளிகளில் , கல்லூரிகளில்  C புரோகிராமை எழுதியவர்களுக்கு நிச்சயம் இந்த குறியீட்டை மறந்திருக்க முடியாது. #include எனத் துவங்கும் அந்த புரோகிராம்களில் 1978-ல்தான் பயன்படுத்தப்பட்டது. அதற்கு பின்பு பல்வேறு புரோகிராமிங் மொழிகளிலும் இதன் பயன்பாடு விரிந்தது.

4. 1993-ம் ஆண்டு முதல் Internet Relay Chat (IRC) எனப்படும் ஆன்லைன் தகவல் தொடர்பு பரிமாற்ற முறையில், குறிப்பிட்ட சில தலைப்புகளை குறிக்க இந்த குறியீடு பயன்படுத்தப்பட்டது.

5. 2007-ம் ஆண்டு இதனை ட்விட்டரில் அறிமுகம் செய்வது பற்றி அறிவித்தார் கிரிஸ் மெஸ்ஸினா.

how do you feel about using # (pound) for groups. As in #barcamp [msg]?

— Chris Messina (@chrismessina) August 23, 2007

இவர்தான் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர். இதற்கு காப்புரிமை கூட வாங்கவில்லை கிரிஸ். அதற்கு அவர் சொன்ன காரணம், 'காப்புரிமை வாங்கினால், இதனை அனைவரும் பயன்படுத்த முடியாது. எனவே காப்புரிமை என்பது 'இதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும்' என நினைக்கும் என்னுடைய நோக்கத்திற்கே எதிரானது" என்றார் கிரிஸ். இதனை பவுண்ட் குறியீடு என அழைத்தவர்கள், இதன் பிறகே ஹேஷ்டேக் என அழைத்தார்கள். இப்படித்தான் உருவானது நாம் இன்று பயன்படுத்தும் ஹேஷ்டேக்குகள்.

6.'#' குறியீட்டை ஹேஷ்டேக் என பெயரிட்டு முதன்முதலில் அழைத்தவர் ஸ்டவ் பாய்ட். 2007-ம் ஆண்டில் சான் டியாகோ நகரில் தீ விபத்து நடந்த போது, அது தொடர்பான செய்திகளை ட்விட்டரில் தேடினர் நெட்டிசன்ஸ். அப்போது அவர்களுக்கு உதவ, #sandiegofires என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கொடுத்தார் கிரிஸ் மெஸ்ஸினா.

7. 2009-ல் ட்விட்டர் இந்த ஹேஷ்டேக்கை அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்தது. அப்போது 2009 மற்றும் 2010­ ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஈரானில் தேர்தல் நடந்த சமயம், மக்களிடையே இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தும் பழக்கமும், அதற்கேற்றபடி ட்வீட் செய்யும் வழக்கமும் அதிகரித்தது. பிறகு ட்விட்டர் 'Trending' ஆப்ஷனை கொண்டுவர பிறகு இந்த ஹேஷ்டேக் வெகுவிரைவில் பிரபலமடைந்தது.

8.ட்விட்டர்  இப்போது முழுக்க முழுக்க ஹேஷ்டேக்குகளாலேயே இயங்கி வருகிறது . சமூக விழிப்புணர்வு, கொண்டாட்டங்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள், எச்சரிக்கை, செய்தி, விளையாட்டு என இந்த ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு பிரச்சார வடிவமாகவே மாறிவிட்டது.

9. ட்விட்டர் மூலம் பிரபலம் அடைந்தாலும், ஹேஷ்டேக் ஆனது ட்விட்டரில் மட்டுமே பயன்பாட்டில் இல்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட், ரெட்டிட், வைன், விமியோ, சவுன்ட் கிளவுட், கூகுள் ப்ளஸ் என பல சமூக வலைதளங்களில் இந்த ஹேஷ்டேக்தான் ட்ரென்ட்டிங் கிங்.

10. இந்த ஹேஷ்டேக்கின் சிறப்பம்சம் இதனை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். யார் வேண்டுமானாலும் உரையாடலை, விவாதத்தை துவக்க முடியும்.

                                                       -- நன்றி சமூகவலைத்தளம் 

திங்கள், 3 ஜூலை, 2017

சேஷாத்திரி மலை -பெயர் காரணம்

திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஏழு மலைகளுக்கு அதிபதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார். ஏழு மலைகளைக்கொண்டு இருப்பதால், ஏழுமலை என்றும் அழைப்பார்கள். இது ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிப்பதாக ஐதீகம். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்ரி, நாராயணாத்திரி, வேங்கடாத்திரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். சேஷாத்திரி மலை, சேஷாசலம் என்று பல பெயர்களில் திருப்பதி மலையை அழைக்கின்றோம். திருப்பதிக்கு `சேஷாத்திர மலை' என்று பெயர் வந்த காரணம் ரொம்பவே சுவாரஸ்யமானது. யுகங்கள் பலவாகியும் சேஷாத்திரி மலை என்ற புகழுடன் திகழ்கின்றது.

பெயர் காரணம் :

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஒரு வாதம் ஏற்பட்டது. ஒருவரைவிட மற்றவர் பலசாலி என அவ்விருவரும் வாதிட்டுக்கொண்டனர். அச்சமயத்தில் கடவுளின் திருநாமத்தை ஜபித்துக்கொண்டு நாரதர் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர்களின் சண்டையை அவர் கேட்டு,

'அன்பர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறீர்கள். நீங்கள் இருவருமே பலசாலிகள். உங்களில் யார் மிகப் பலசாலி என்ற விஷயத்தை அறிய ஆவலானால், நான் உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன் கேளுங்கள்: 'ஆதிசேஷனே! நீ மேரு பர்வதத்தின் குமாரரான ஆனந்த பர்வதத்தை வலம் வருவாயாக! வாயு தேவனே! ஆதிசேஷன் வலம்கொண்ட ஆனந்தபர்வதத்தை உனது வலிமையால் அசைப்பாயாக! உன்னால் அசைக்க முடியுமானால் நீதான் பலசாலி, இல்லையேல், ஆதிசேஷன் பலசாலி” என்றார். நாரதர் சொன்ன இந்த யோசனை அவ்விருவர்களுக்கும் பிடித்தது. உடனே ஆதிசேஷன் ஆனந்த பர்வதத்தை வலமாகச் சுற்றிக் கொண்டார். வாயுதேவன் தனது வலிமையையும், முழுமையையும் காட்டி அந்தப் பர்வதத்தை அசைக்க முயன்றார்; ஆயினும் அசைக்க முடியவில்லை. இரவும் பகலுமாக புயல் காற்றாக வீசிக்கொண்டிருந்தான் வாயுதேவன். ஆதிசேஷனும் விடாப்பிடியாக இருந்து பருவதத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டான்.

திங்கள், 19 ஜூன், 2017

வளைகாப்பு

வளைகாப்பு! கர்ப்பிணிப் பெண்களுக்குகாகச் செய்யப்படும் ஒரு சடங்கு. இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். வளைகாப்பு நிகழ்வானது பெரும்பாலும் கருவுற்ற 7-வது மாதத்தில் செய்யப்படுகிறது.

நோக்கம்:

குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படும்போது கருவுற்ற பெண்ணுக்கு ஒரு மன தைரியம் உண்டாகிறது. மேலும் வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில் 'கண்ணாடி வளையல்' அணிவிக்கப்படுகிறது. அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்.

மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

நன்மைகள்:

வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதால் கருவுற்ற பெண்ணுக்கு பிரசவம் பற்றிய பயம் நீங்கி மன தைரியம் பிறக்கிறது.

இதனால் பிறக்கும் குழந்தையும் மன தைரியத்துடன் பிறக்கும்.

வியாழன், 8 ஜூன், 2017

இதுதான் ஆண்மையா?






இவ்வளவு கேவளமானவங்களா?எங்க போய்க்கிட்டு இருக்கோம் நாம.?

"பெண்ணைவிட ஆணை வலுவா ஆண்டவன் படச்சது அவள பாதுகாக்கதானே தவிர பலாத்காரம் பண்ண இல்ல "
இது ஏதோ சினிமாவுல வர வசனமா இருக்கலாம் .ஆனா சிந்திக்கவேண்டிய ,உண்மையான வசனம்..

விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை கட்டாய படுத்துறதோ இல்ல வற்புருத்துறதோ இல்ல பலாத்காரம் செய்யுறதோ இல்ல பலாத்காரம் செஞ்சு கருவை கொடுக்குறதோ இல்ல அவ மேல ஆசிட் ஊத்துறது பேர் தான் ஆண்மையா?

உண்மையான ஆண்மைக்கு அர்த்தம் தெரியுமா? 

வியாழன், 1 ஜூன், 2017

கொசுத்தொல்லைக்கு எளியவழி!!

* கற்பூரவல்லி, கற்றாழைச் சாறு இரண்டையும் தண்ணீருடன் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்ப்ரே செய்தால் கொசுக்கள் ஓடிப்போகும்.

* புதினா, கற்பூரவல்லி, காட்டுத் துளசி, கற்றாழை, செவ்வந்தி போன்ற செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இந்தச் செடிகள் இருக்கும் இடத்தை கொசுக்கள் நெருங்காது.

* காலை, மாலை வேளைகளில் கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போடலாம் அல்லது யூகலிப்டஸ் இலைகளை உலரவைத்து, அதைக்கொண்டு வீடு முழுக்கப் புகைபோடலாம். இந்தப் புகை கொசுக்களிடம் இருந்து காக்கும். ஆஸ்துமா நோயாளிகள் இருக்கும் வீடுகளில் மட்டும் புகை போடுவதைத் தவிர்க்கவும்.

* பூண்டு எண்ணெய் மற்றும் தண்ணீரை 1:5 என்ற விகிதத்தில் கலந்து வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு ஓரங்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் அண்டாது.

* எலுமிச்சைப் பழத்தைப் பாதியாக நறுக்கி, அதில் கிராம்பை நட்டு வைக்கவும். இதன் வாசனை அவற்றை நெருங்கவிடாமல் செய்யும்..

* புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுக்க தெளிக்கவும். இந்த வாசனைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கொசுக்கள் பறந்துவிடும்.

* தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில துளிகள் லாவண்டர் எண்ணெயுடன் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். இதனால், கொசுக்கள் கிட்டே வராது; சுகந்தமான வாசனையும் கிடைக்கும்.

* கற்பூரத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் மிதக்கவிடவும். இதன் மணம் கொசுக்களை விரட்டும்.

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். வேப்ப எண்ணெய், யூக்கலிப்டஸ் ஆயில், கிராம்பு எண்ணெய் மூன்றையும் கலந்து வீடு முழுக்கத் தெளிக்கவும். கொசுக்கள் வாசல் தாண்டி உள்ளே வராது.

* வேப்ப இலை, நொச்சி, ஆடுதொடா, குப்பைமேனி போன்ற இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சி தைலமாக்கவும். இந்தத் தைலத்தைத் தேய்த்துக்கொண்டால், கொசுக்கள் நம்மை நெருங்காது.

* வேப்ப எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் 1:1 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். இது, கொசுக்களிடம் இருந்து நம்மைக் காப்பதோடு, சருமத்தையும் பாதுகாக்கும். இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்தும்கூட.

* யூகலிப்டஸையும் எலுமிச்சை எண்ணெயையும் சமஅளவில் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளவும். கொசுக்கள் கிட்டே வராது.

* கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு, அறையின் உள்ளே கற்பூரத்தை ஏற்றிவைக்கலாம். 20 நிமிடங்களில் அவை இல்லாமல் போய்விடும்.

* வீட்டின் உள்ளேயும் ஜன்னல் ஓரங்களிலும் துளசிச் செடியை வளர்க்கலாம். துளசிச் செடிக்கு கொசுக்களை விரட்டும் ஆற்றல் உண்டு.

வெள்ளி, 26 மே, 2017

அக்பரும் பீர்பாலும் - பொறாமை

அரசர் அக்பரிடம், பீர்பாலுக்கு மிக்க செல்வாக்கு இருப்பதைக் கண்ட அரசவை அமைச்சர்களுக்கு மிகுந்த பொறாமையாக இருந்தது. அதனால் எப்படியாவது அரசரிடமிருந்து பீர்பாலை பிரித்துவிட வேண்டும் அல்லது ஒழத்து விட வேண்டும் என சதி திட்டம் தீட்டினார்.

இந்த திட்டம் நிறைவேற வேண்டுமானால் அரசருக்கு நெருங்கிய ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு யாரை பயன்படுத்துவது என்று யோசித்து அரசருக்கு முடி திருத்தும் ஒரு பணியாளரைத் தேர்ந்தெடுத்தனர்.

அவனுக்கு பொன்னும் – பொருளும் அளிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி அவரை சம்மதிக்க வைத்து, அதற்கான இரகசிய திட்டத்தையும் கூறி, அதனை நிறைவேற்றினால் மேலும் பொன்னும் – பொருளும் அளிப்பதாகக் கூறினார்.

ஒரு நாள் அரசருக்கு முடி திருத்தம் செய்வதற்காக நிரந்தரமாக தம்மிடமுள்ள முடித்திருத்தம் செய்யும் பணியாளருக்கு அழைப்பு வந்தது.

அரசரின் அழைப்புக்காகவே காத்திருந்த அந்த முடி திருத்தும் பணியாளர். அமைச்சர்கள் சொல்லிக் கொடுத்தபடி தம் சதித்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலானார்.

அரச பெருமானே, தங்கள் முடியும், தங்களின் தந்தையாரின் முடிக்கு நிகரான அழகு பொருந்தியது என்று தான் சொல்ல வேண்டும் என்றார் முடி திருத்துபவர்.

அவ்வளவு அழகானதா? அது எப்படி தங்களுக்குத் தெரியும் என்றார் அரசர். எனக்குத் தெரியும் அரசே, ஆனால் தாங்கள் தங்களின் தந்தையின் மீது அக்கரை காட்டுவதில்லை போல் தோன்றுகிறது. பாவம் மாமன்னரின் முடி வளர்ந்து அவருடைய கம்பீரத்தையே கெடுத்து விட்டது என்றார் முடி திருத்துபவர்.

என்ன பணியாளரே, உமக்கு புத்தி பேதலித்து விட்டதா? என்ன பேசுகிறாய்? என் தந்தை இறந்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்பது உனக்கு தெரியாதா? இறந்து போன ஒருவரை எப்படி நலம் விசாரித்து வரமுடியும்? என்றார் அவர்.

முடியும் அரசே, முடியாதது என்று எதுவும் இல்லை, தாங்கள் மனது வைத்தால் அரசே, என்றார் முடி திருத்துபவர்.

அது எப்படி சாத்தியமாகும்? என்றார் அரசர்.

எனக்கு நன்கு பழக்கப்பட்ட மந்திரவாதி ஒருவர் இருக்கிறார். அவர் உயிருடன் ஒருவரை பாடையில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்று சக்தியுள்ள மந்திரங்களை ஓதி உடலை எரிப்பார்.

ஆனால் தீ அந்த உடலை எரிக்காது. எரிப்பது போல் நமக்குத் தோன்றும். ஆதலால் உயிருடன் நேராக சொர்க்கத்திற்குச் சென்று நம்முடைய சொந்தக்காரரைச் சந்தித்துவிட்டு வரலாம். இதற்கு நல்ல நம்பிக்கையான ஆள் ஒருவர் இருக்க வேண்டும் என்றார் முடி திருத்துபவர்.

நீங்கள் கூறுவது போல் செய்ய நம்பிக்கைக் குரியவர் எவர் இருக்கின்றார்? என அரசரி யோசனையில் ஆழ்ந்தார்.

அரச பெருமானே, இதற்காக ஏன் யோசிக்கின்றீர்கள்? தங்களின் வாக்கை வேதமாக ஏற்று செயல்படுவதற்கு திறமையான நமது அமைச்சர் பீர்பால் இருக்கின்றாரே, அவரை விட சிறந்த நம்பிக்கைக்குரியவர்கள் எவரும் கிடையாது என்றார் முடி திருத்துபவர்.அரசருக்கு முடி திருத்துபவர் சொல்வது சரியென நினைத்து இதற்கு பீர்பால் ஏற்றவர் அவரையே அனுப்பி வைக்கலாம் என்றார் அரசர்.

மறுநாள் காலை அரசவை கூடியது பீர்பால் உட்பட எல்லா அமைச்சர்களும் வந்திருந்தனர். அரசர் பீர்பாலை அழைத்து தன் விருப்பத்தைக் கூறினார். இக்காரியத்தைச் செய்ய தங்களை விட சிறந்தவர் வேறு எவரும் இல்லை. ஆதலின் தாங்கள் சொர்க்கத்திற்குச் சென்று என் தந்தையாரின் நிலையை அறிந்து வர வேண்டும் என்றார் அரசர்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

தூங்கா நகரம்

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? "The World's only living civilization" உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன.

மிகப் பழமையான கிரேக்க,ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது.


ஆனால் சுமார்6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் "மதுரை "தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ். மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம்.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

படித்ததில் பிடித்தது

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது அங்கு சாதாரணமாக  தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார்.அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ-ரூமை  பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.


அப்பொழுது ஷோ-ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல் ஒரு ஏழை இந்திய குடிமகன் என நினைத்து  அடித்து விரட்டினர் இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார்.பிறகு சில மணி நேரம் கழித்து தனது முழு  அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் . ஷோ-ரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர்.ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

102 வருட பனை மரம்

பனை மரமும் தென்னை மரமும் தனது 102 வருட நிறைவுக்குபின் இப்படி பூக்கும்.. இதோடு இதன் வாழ்வு முடிந்துவிடும் .. இதை காண்பது அபூர்வம்..


திங்கள், 30 ஜனவரி, 2017

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்...!!


1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுபஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.

9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

நம்ம தோனி !!


கூல் கேப்டன் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக்கிட்டாருனு படிச்சதும் எனக்கு அவரோட 2011 உலகக்கோப்பை போட்டி தான் நியாபகத்துக்கு வந்தது..கிரிக்கெட் பத்தி எனக்கு ரொம்ப தெரியாது.ஆனாலும் பேசிக் தெரியும் அதனால பாப்பேன்..2011 உலகக்கோப்பை முழுசா பாத்தேன்.தோனியை பத்தி நிறையா படிச்சிருக்கேன்.ஆனா அந்த மனுஷன் உசிரைக்கொடுத்து உழச்சதை அந்த மேட்ச் அப்போதான் பாத்தேன்..



2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான  கடைசி போட்டி.

நான் ,அண்ணா, அம்மா ஆர்வமா பாக்க உக்காந்தோம்..இந்தியா பேட்டிங் பண்ணினப்போ ஆரம்பத்துல பொறுமையை சோதிக்குற அளவுக்கு இருந்தது , எப்போ சச்சின் அவுட் ஆனாரோ என் அண்ணனுக்கு நம்பிக்கை போய்டுச்சு..அட போங்கையா ... இனி இந்தியா ஜெயிக்காதுன்னு முடிவு பண்ணி தூங்க ஆரம்பிச்சுட்டாங்க..

ஆனாலும் நான் விடாம பாத்துக்கிட்டு இருந்தேன் .என்னால வேற வழியே இல்லாம என் அம்மாவும்  பாத்தாங்க ..