பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 5 செப்டம்பர், 2023

எங்க இருந்தாலும் நாம அப்டியே இருந்தா எப்படி ?

     சமீபத்துல அமெரிக்கால இருக்குற ஒரு இந்து கோவிலுக்கு போயிருந்தோம். அந்த கோவில்ல குழந்தைகள் விளையாடுறதுக்கு சின்ன பழைய ஏரியா (பார்க் மாதிரின்னு வச்சுக்கோங்களேன் ) இருக்கு. அந்த கோவில் ரொம்ப சுத்தமா இருந்தது. கோவில் சுற்றுப்புறமும் சுத்தமாத்தான் இருந்தது.ஆனா அந்த குழந்தைகள் விளையாடுற பார்க்ல பேப்பர் கப்புகள், பிளாஸ்டிக் தட்டு, தண்ணி பாட்டில் இதுலாம் கிடந்தது.ஹிந்து கோவிலுக்கு நம்ம இந்தியர்களை தவிர யாரு வரப்போறாங்க?

    இந்த நாட்டுல இருக்குற பார்க்குகள்ல பாத்தோம்னா அவ்ளோ சுத்தமா இருக்கும்.நீங்க எங்கப்பாதாலும் குப்பைகளை பாக்க முடியாது. 98% சுத்தமா தான் இருக்கும் எல்லா இடங்களும் முக்கியமா  இந்த மாதிரி பார்க்குகள். இந்த நாட்டுல நான் பாத்து ரொம்ப ஆச்சர்யப்பட்ட விஷயம் இது. எவ்ளோ கோட்டம் இருந்தாலும் எவ்ளோ குலாண்டகிகள் ஒன்னு கூடினாலும் அங்க நாம கீழ குப்பைகளை பாக்க முடியாது. அது ரூல்ஸ் -ஆள இப்படி பழகிருக்கங்களா இல்ல இயற்கையாவே இப்படி  இருக்காங்களான்னு தெரியல. தன் வீடு எப்படி இருக்குமோ தெரியாது ஆனா பொது இடம் சுத்தமா இருக்கும்.

     ஆனா நம்ம கோவில்ல இந்த பார்க்குல அவ்ளோ குப்பைகள் இருந்தது.இத்தனைக்கும் பக்கத்துல ஒரு குப்பை தூட்டி இருந்தது ஒரு 50 ஆதி தள்ளி ஒரு குப்பை தொட்டி இருந்தது. நமக்கு பழக்கம் வரமாட்டுதோனு நினைக்க தோணிச்சு. போன தலைமுறை எப்படி இருந்தாங்களோ போகட்டும் . இந்த தலைமுறை சரியா இருந்தாத்தானே அடுத்த தலைமுறைக்கு நாம அத சரியா கொண்டுபோகமுடியும்.நாமே இப்படி அலட்சியத்தால இருந்தோம்னா நம்ம பாத்து வளருற நம்ம குழந்தைகள் எப்படி சரியா வளருவாங்க? 

    அங்க இன்னொரு விஷயமும் நடந்தது, பிள்ளைகள் ஒரு வளைவுல ஏறி போயி ஸ்லைடு-ல(சறுக்குமரம்) விளையாடுவாங்க . ஒரு பொண்ணு அந்த வளைவுல ஏறிகிட்டு இருந்தப்போ ஒரு பல்பு எங்கயோ இருந்து கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு. நல்ல வேல அது அந்த பொண்ணு தலையில விழல . பார்க்ல எப்பவும் கீழ மல்ச்-னு சொல்லப்படுற மர தூள் அல்லது துகள்களை போட்ருப்பாங்க. குழந்தைகள் விழுந்தா அடி  படாம இருக்க. இந்த பல்பு அதுல விழுந்து உடைஞ்சிடுச்சு. உடனே அந்த பொண்ணோட அம்மா பல்பு விழுந்துடுச்சு இந்த பக்கம் வா இறங்குனு அந்த பொண்ணை கூப்பிடுறாங்க. இன்னோர் அம்மா தன் பிள்ளையை அந்த பக்கம் போகாதனு சொல்றாங்க. ஆனா யாரும் அந்த உடைஞ்ச பல்ப்பை எடுக்க முன்வரல. அந்த கொஞ்சம் வளைந்த பொண்ணை விட சின்ன குழந்தைகள் அங்க விளையாடிகிட்டு இருந்தாங்க. இன்னும் எதனை குழந்தைகள் வந்து விளையாடுவாங்களோ? எப்படி நம்மால அதை பாத்து நம்மக்கு என்ன வந்ததுன்னு நினைக்கவோ இல்ல நம்ம பிள்ளை மட்டும் பத்திரமா இருந்தா போதும்னு நினைக்கவோ முடியுது? நானும் இன்னோர் gentle man -ம் சேர்ந்து அதை சுத்தம் பண்ணிட்டோம்.ஆண்களை இந்த விஷயத்துல ரொம்ப பாராட்டணும், அவங்க எப்பவும் கொஞ்சம் broad -ஆ தான் யோசிப்பாங்க.

இத நான் இப்போ ஒரு குறையா சொல்லல. நம்ம பாத்து வளருற குழந்தைகள். நாமதான் அவங்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரணும். நாமே இப்படி இருந்தா எப்படி. 


திங்கள், 31 ஜூலை, 2023

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்

    கொஞ்சநாளா சூப்பர் ஸ்டார் அப்படீங்குற பட்டத்தை பத்தி நிறைய பேச்சு போய்கிட்டே இருக்கு . ஆனா சந்தானம் சொல்ற மாதிரி , அந்த காலத்து கிழவி வாயும் இந்த யூடியூபும் ஒன்னு .யாரையாவது பத்தி பேசிக்கிட்டே தான் இருக்காங்க.அந்த காலத்துல பாவம் அந்த பாட்டிகளுக்கு பொழுது போக்கு இல்ல . ஊரு கதை பேசுறது மட்டும் தான் பொழுது போக்கா இருந்தது.இப்போதான் ஏக்கப்பட்ட பொழுதுபோக்கு விஷயம் இருக்கே .அதுலாம் பண்ணலாம் இல்ல .அது விட்டுட்டுட்டு அடுத்தவனை பத்தி பேசுறதே ஒரு பொழுதுபோக்கா வச்சிருந்தா என்ன பண்றது.

    அப்போ அது நடந்தது பாரு இப்போ இது நடந்தது பாரு ,அதுக்கு அது அர்த்தம் இதுக்கு இது அர்த்தம்-னு சிலபேர் கிசுகிசு சொல்லியே காசு சம்பாதிக்குறாங்க.பிரபலம் ஆகுறாங்க. சம்மந்தம் பட்டவங்க என்னவோ சும்மா தான் இருக்காங்க. ஆனா அவங்க செய்றாங்களோ இல்லையோ நீங்க நல்லா செய்றீங்கய்யா .காசுக்காக என்ன வேணும்னாலும் நீங்கதான் செய்வீங்க போல.

    ஆனானப்பட்ட ஜாக்கி ஜானும் , டாம் க்ரூஸும் கூட பேருக்கு முன்னாடி பட்டப் பேர் வச்சுக்க ஆசைப்படல இப்போவாரைக்கும். ரஜினி சார் தான் சொல்றாரே , எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன் , கேக்க மாட்றாங்கனு .நம்மள மாதிரி ஆளுங்க ரசிகர் அப்படீங்குற பேர்ல பண்ற டார்ச்சர் தான். அவர அப்டியே கூப்பிட்டு பழகிட்டோம் . அவரு அப்டியே இருக்கட்டுமே. அது ஏன் அடுத்த .. அப்டீன்னு சண்டைபோடனும். 

    விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம்,சிம்பு,தனுஷ்,சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதினு இவங்க எல்லாருக்கும் முன்னாடி வந்தவரு ரஜினி சார். இவங்க எல்லார்கிட்டயும் இல்லாத நடிப்பு அவர்கிட்ட இருக்குதோ இல்லையோ ஆனா ஸ்டைல் இருக்கு.இந்த வயசுலயும். அந்த ஸ்டைலுக்காக கொடுத்த பட்டம் தான் அது. அது அவருக்கு மட்டும் தான் பொருந்தும். வேற எந்த நடிகர்களும் நான் தான் அடுத்துனு சொல்லிகல .ஏன்னா இந்த எல்லாருமே அவருடைய ரசிகர்களா தான் இருந்துருப்பாங்க.இன்னமும் இருப்பாங்க.ஏன்னா அவர ,கமல் சார்-ஐ-லாம் பாத்துதான் வளந்துருப்பாங்க.நடிக்க வரணும்னு ஆசைப்பட்டுருப்பாங்க. அவர் மாதிரி பேரும் புகழும் ரசிகர்களோடு ஆதரவும் ஆர்பரிப்பும் தனக்கும்  இருக்கணும்னு நினைப்பாங்கதான் . நாம அந்த இடத்துல இருந்தாலும் அப்டித்தான் நினைப்போம்.அது மனிதனுடைய இயல்பு.இயற்கை . ஆனா எனக்கு அந்த பட்டம் குடுங்கனு அவங்க கேக்கல. ஆனா அவங்க பேர் சொல்லி ஜால்றா போடுற சிலபேர் பத்த வைக்குறது, அது தீயா , இந்த காலத்து ஆயாக்கள் வாயில விழுந்து வேற மாதிரி மத்தவங்க காதுகளுக்கு வந்துகிட்டு இருக்கு.

    ஒரே  ஐயின்ஸ்ட்டின் தான்,ஒரே எடிசன் தான் ,சரி ஏன் அவ்ளோதூரம் போகணும்?  ஒரே  அறிஞர் அண்ணா அவர்கள் தான்,ஒரே கர்மவீரர்  காமராஜர் அவர்கள் தான்,ஒரே கலைஞர்  கருணாநிதி அய்யா தான் ,ஒரே புரட்சித் தலைவி  ஜெயலலிதா அம்மா தான், ஒரே நடிகர் திலகம்  சிவாஜி சார் தான், ஒரே புரட்சித் தலைவர் MGR அவர்கள் தான், ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி சார் தான் . நமக்கு வேணும்னா நமக்கு பிடிச்ச மத்த நடிகர்களுக்கு வேற வேற பட்டப் பெயர் வச்சுப்போம். மத்தவங்களுடையது வேண்டாம்.

    அவருக்கு இருக்குற ஆயிரம் பிரச்சனைல இவங்க வேற எதையாவது சொல்லி அவரை கொடஞ்சுக்கிட்டே இருக்குறது எப்ப பாத்தாலும்.. இந்த மாதிரி பிரச்சனை-லாம் வேணாம்னுதான் அவரு இமயமலைக்கு கிளம்பிடுறாரு.



    சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் அட்வைஸ் "குடிப்பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட எங்கோ உயரத்தில் இருந்துருப்பேன் "-னு சொல்லி குடிக்காதீங்கடானு சொன்னீங்களே சார் , இது.. இது..இதுமாதிரி தான் சார் எதிர் பாக்குறோம். நீங்க சிகரெட் பிடிக்கிற ஸ்டைல் பாத்து சிகரெட் பிடிச்சவங்க அல்லது பிடிக்க ஆரம்பிச்சவங்க எவ்ளோபேர் இருந்திருப்பாங்க. அவங்க உடலும் வீணாக்கிருக்கும்.அவங்களுக்கு இப்போகூட நீங்க அட்வைஸ் சொல்ல முடியும். ஏன்னா நீங்க உணருறீங்க இப்போ ,அது உங்க உடல் நலனை கெடுத்துருச்சுனு. உணருறதுதானே வாழ்க்கை.

     இதுமாதிரி உங்கள follow பண்ற கோடிக்கணக்கான பேர், முக்கியமா இந்த இளைஞர்-களுக்கு வாழ்க்கைல முன்னுக்கு வர அட்வைஸ் பண்ணுங்க. சும்மா நடிகர்கள் பேர் வச்சு கண்ட சண்டை போடாதீங்கன்னு அட்வைஸ் பண்ணுங்க. வாழ்க்கைல செய்யவேண்டிய முக்கியமான விஷயங்கள்  இருக்குனு சொல்லுங்க.ஏன்னா உங்க ஒரு வார்த்தைக்கு எப்பவுமே மரியாதை அதிகம்.


உன் அலும்ப பார்த்தவன்..

உங்க அப்பன் விசில கேட்டவன்..
உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..
 
பேர தூக்க நாலும் பேரு..
அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு..
குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..
 
டைகர்கா ஹுக்கும்...
 


LOVE YOU ALWAYS   💖💖💖

சனி, 12 நவம்பர், 2022

ஏதாவது ஒரு வேல செய்யணும்.

     எல்லாருமே வாழ்க்கைல ஏதாவது ஒரு வேல செய்யணும். சும்மா அடுப்படில இருக்குறது மட்டுமே வேலையாகவோ இல்ல குழந்தைங்களை பாத்துக்குறது மட்டுமே அவங்களுக்காக எல்லாத்தையும் செய்யுறது வாழுறது மட்டுமே வாழ்க்கையா இருக்க கூடாது.

    எல்லா பெண்களுக்குமே கல்யாணத்துக்கு அப்பறம் குழந்தைங்கள்னு வரும்போது கண்டிப்பா தன்னுடைய கரியர்-ல இருந்து ஒரு பிரேக் விழும். அது பெண்களா பிறந்த அனைவருக்குமே பொதுவா இருக்க கூடிய வரக்கூடிய ஒரு விஷயம். நம்மள பலபேர் என்ன பண்ணுவோம்னா அதுக்கு  அப்பறம் நம்முடைய வாழ்க்கையை அப்படியே போறபோக்குல வாழ்ந்துடுவோம். நமக்குன்னு எதுவும் பண்ணிக்க மாட்டோம். நம்ம உள் அழகையோ  வெளி அழகையோ  பொருட்படுத்தமாட்டோம். பலபேருக்கு அதான் பிள்ளைங்களை பெத்தாச்சு இல்ல அப்பறம் என்ன இனி நமக்குனு தனியா பாத்துக்கனு இருந்துடுவோம். அதே வகையில தான் நம்முடைய கரியர்-யும் . பிள்ளைங்களை பாக்கணும் பிள்ளைங்களை பாக்கணும்னு நம்ம கரியர் அப்டியே போகிடும். அஞ்சு வருஷம் ஆறு வருஷம் கழிச்சு திரும்பி பாக்கும்போது நமக்கு யாரும் வேல குடுக்க முன் வரமாட்டாங்க.நம்ம படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.அதனால கூட பலபேர் லைஃப் அப்டியே போயிடும்.

    நான் கேக்குறது எல்லாம் , படிச்ச படிப்புக்கு மட்டும் தான் வேலை செய்வேன்னு நினைக்காம , சின்ன வேலையா இருந்தாலும் எதாவது ஒரு வேலைய செய்ய ஆரம்பிக்கணும். முதல் அடி எடுத்துவச்சா கண்டிப்பா நம்முடைய குறிக்கோளுக்கு நம்மை  கொண்டு சேக்கும் நம்முடைய முயற்சி. எந்த வேலைய செஞ்சாலும் திருப்தியோட சந்தோஷமா செய்யணும்.அதுல இருந்து அடுத்து படி ஏறி போகணும். இனிமே என்னனு சும்மா உக்காந்து இருக்குறதுக்கு ஒரு வேலனு ஒன்னு பண்ணினா நம்முடைய உடம்புக்கும் நல்லது மனசுக்கும் நல்லது. நம்ம மேல நமக்கே confident வரும். நம்ம மேல நமக்கே மரியாதை வரும்.    

    நான் blogger , youtuber ,என் friend -டோட நாவலுக்கு குரல் கொடுத்துக்கிட்டு இருக்கேன். painting கத்துக்கிறேன் , வீடு கணவன் ,home maker -ஆ இருக்கேன்(அது சாதாரண வேலை இல்ல) ஆனா அதுக்கும் மேல ஏதாவது சம்பாதிக்கிற மாதிரியான ஒரு வேலை பண்ணணுமே....

    இந்த மாதிரி யோசிச்சுதான் நான் இங்க டிரைவர் வேலைக்கு சேந்தேன். நம்ம ஊருல  ஊபர் மாதிரி இங்க வேற சில கம்பெனிகள் இருக்கு. என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணி உன்னால இத செய்ய முடியும் உனக்கும் பிடிச்ச வேல , எவ்வளவு நேரம் செய்யணும்னு நினைக்கிறியோ  அவ்வளவு நேரம் செய் உனக்கும் ரிலாக்ஸ் -ஆ இருக்கும். ஒரு experiance கிடைக்கும் அது இதுனு என்ன பிரைன் வாஷ் பண்ணி செய்யவச்சாரு. ஆரம்பத்துல எனக்கு நிறைய கேள்விகள் இருந்தது என் கிட்டையே , நிறைய சந்தேகங்கள் இருந்தது என் மேலையே.தயக்கங்கள் இருந்தது. என்னால முடியுமா? நான் ஏன் இத பண்ணனும்?நான் படிச்சது M.phil computer science , அமெரிக்காவுல இதுக்கு பேர் டபுள் மாஸ்டர்ஸ். இங்கலாம் எவ்வளவு சம்பாதிக்கலாம் தெரியுமா? அதுமட்டும் இல்லாம நம்ம ஊருலதான் கவுரவம் கவுரவம்-னு நாம எல்லாரும் காலை மதியம் இரவு உணவோட கவுரவத்தையும் சேத்து மூளைக்கு சாப்பாடா கொடுத்துக்கிட்டு இருக்கோமே. அந்த சூழ்நிலையிலதான் நானும் வளந்தேன். அப்போ எனக்கும் அது மண்டையில ஊறிபோயித்தானே இருக்கும். அப்போ நான் படிச்ச படிப்பை விட மத்த வேலை செய்ய எனக்கு மனசு வரல. யோசிக்குறேன், யோசிக்கிறேன், ரொம்ப யோசிக்கிறேன்.நம்ம ஏன் செய்யணும்னு முதல்ல  யோசிச்சேன், நம்ம செய்யணுமானு அப்பறம்  யோசிச்சேன், அப்பறம் நம்மால செய்ய முடியுமானு யோசிச்சேன். அடுத்து சரி போ செஞ்சிதான் பாப்போமேனு யோசிச்சேன்.

    முதல்ல டிரைவர் வேலை செய்ய ஆரம்பிச்சபோது நிறைய தடு மாற்றம் இருந்தது. ரூட் தெரியாது.தப்பான ரூட் போய்டுவேன். அந்தமாதிரிலாம் இருந்தது . அப்பறம் போக போக பிக்கப் பண்ணிக்கிட்டேன். இந்த வேலையில என்ன வசதினா எப்ப வேணும்னாலும் ஆன்லைன் போயிக்கிலாம்  , ride பிக்கப் பண்ணிக்கலாம். எப்போ வேணும்னாலும் offline  போயிக்கிலாம்.இவ்வளவு நேரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணனும்னு அவசியம் இல்ல அல்லது இத்தனை நாள் பண்ணனும்னு அவசியம் இல்ல. எல்லாமே நம்முடைய இஷ்டம் தான். அந்த வகையில எனக்கு ரொம்பவே வசதியா இருந்தது. 

    நான் ஒரு நாளைக்கு குறைஞ்சது 1.30 மணி நேரம் ride எடுப்பேன். அதிகமா 3.30 மணி நேரம் ride எடுப்பேன். என் பொண்ணு எனக்காக காத்துக்கிட்டு இருப்பா வீட்ல அதனால 3.30 மணிநேரம் மேல நானும் வீட்டுக்கு வந்துடுவேன்.காலைல சமைச்சு வச்சுட்டு வேலைக்கு கிளம்புவேன். அப்படி இந்த வேலைய செய்ய ஆரம்பிச்சு 4 மாசம் ஆகுது.இன்றோடு என்னோட 200வது ரைடு முடிச்சிருக்கேன். இந்த வேலை செஞ்சாலும் என்னுடைய படிப்புக்கான வேலையும் தேடிக்கிட்டே தான் இருந்தேன். என்னுடைய friend உதவியால நான் படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சிருக்கு இப்போ. 

    இந்த 4 மாசத்துல 200 ride -கள்.எல்லாம் 5 ஸ்டார் review-ல். எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது. சில நாள் சூப்பர்-ஆ இருக்கும்.சில நாள் சுமாரா இருக்கும்.கிட்டத்தட்ட 220 புது மக்களை பாத்துருப்பேன்.220 புது மனுஷங்கக்கிட்ட பேசிருப்பேன் பழகிருப்பேன். ஒரு ஒருத்தங்களும் வித்யாசமானவங்க. சிலபேர் நல்லா பேசுவாங்க ,சிலபேர் ஒரு வார்த்தைகூட பேசமாட்டாங்க. சில பேர் கேள்வியெல்லாம் கேப்பாங்க, சில பேர் நா கேக்குற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுவாங்க. சில பேர் அவசர அவசரமா வேலைக்கு போவாங்க. சில பேர் அப்பாடா என் வீட்டுக்கு போய் என்னுடய சோஃபா-ல தலையை வைக்கணும்னு சொல்லி அவ்வளவு சோர்ந்து வருவாங்க. விடிய காலைல வேலைக்கு போறவங்களையும் கொண்டுபோய் விட்டுருக்கேன், லேட் நைட் வீட்டுக்கு வேலையில இருந்து திரும்பி வர்றவங்களையும் கொண்டு போய் வீட்ல விட்ருக்கேன். சில பேர் எனக்கு வேலைக்கு டிப்ஸ் கொடுப்பாங்க.சில பேருக்கு வேலைக்கு நான் டிப்ஸ் தந்துருக்கேன்.இங்க வேலை இருக்கு. இந்த கோர்ஸ் பண்ணு, இந்த வேலை ட்ரை பண்ணலாம்னு suggest பண்ணுவாங்க. சில பேர் சந்தோஷமா சிரிச்சுகிட்டே வருவாங்க.சில பேர் சோகமா வெளில வெறிக்க பாத்துக்கிட்டே வருவாங்க. சில பேர் சந்தோஷமா டிப்ஸ் (பணம்) குடுப்பாங்க. இப்படி எவ்வளவு வித்யாசமான மனுஷங்களை சந்திச்சேன், பேசினேன் .

    இந்த வேலை மூலமா தெரியாத ரூட் தெரிஞ்சுக்கிட்டேன், எத்தனையோ தெரு பேர்களை தெரிஞ்சுக்கிட்டேன். எத்தனையோ அழகான community -களை பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எவ்வளவோ அழகான வீடுகளையும் வீடு இருக்குற இடங்களையும் பாக்குற வாய்ப்பு கிடைச்சது. எந்த வேலையும் ஈஸி இல்லனு தெரிஞ்சுகிட்டேன். எந்த வேலையும் குறைவான வேலை இல்லனு தெரிஞ்சுக்கிட்டேன்.எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். இப்படி ஒரு அழகான புது அனுபவம் இந்த வேலை எனக்கு குடுத்தது. 

    இந்த அனுபவம் கிடைக்க காரணம் என்னுடைய கணவர் தான். என்னைவிட என் மேல நம்பிக்கை வச்சு உன்னால  முடியும் செய்னு என் பின்னாடி இருந்து என்ன எப்பவுமே முன்னாடி தள்ளுற இந்த மாதிரி ஒரு ஆண் எல்லா பெண்ணுக்கும் பின்னாடி ஒரு comrade -ஆ இருக்கணும்.