பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 14 செப்டம்பர், 2026

இப்போவாரைக்கும் உதறுது

 சமீபத்துல ஜேசன் சஞ்ஜய்-யோட இண்டெர்வியூ பாத்தேன். சின்ன பையன் ஆனா எவ்ளோ தெளிவா பேசுறாப்புலனு ஆச்சர்யமா இருந்தது. ஒரு மாதிரி பக்குவமா, பயம்/ பதட்டம் இல்லாம , தெளிவா தனக்கு என்ன தேவை எப்படி வார்த்தைகளை கோர்வையா சேர்க்கணும் எப்படி எடுத்துக்கணும்னு ரொம்ப தெளிவா இருந்தது. அவர் மட்டும் இல்ல இந்த காலத்து பிள்ளைங்கள் எல்லாருமே ரொம்ப தெளிவா பயம் இல்லாம பேசுறாங்க .எதையும் மண்டையில ஏத்திக்கல ,அலட்டல் இல்ல , ஆர்ப்பரிப்பு இல்ல . சிம்பிள்-ஆ அழகா தெளிவா பேசுறாங்க.

எனக்குலாம் இப்போவாரைக்கும் உதறுது .இந்த சின்ன பிள்ளைங்களை பாத்தா ஆச்சர்யமா இருக்கு .

உங்க சலுகைகளே கடைசியில வேலைக்கு தடையா இருக்க போகுது

 இப்போ கவர்மெண்ட் வந்து புதுசா ஒரு ரூல்ஸ் போட்டு இருக்காங்களாமே. அதாவது மூன்றாவது குழந்தை பிறக்கிற சமயத்திலயும் அந்த பெண்ணுக்கு ஒரு வருஷம் சம்பளத்தோட லீவு கொடுக்குற  மாதிரி. அதாவது அல்ரெடி  ஃபர்ஸ்ட் டெலிவரி அப்போ ஒரு வருஷம் சம்பளத்தோட லீவும்.,அதே மாதிரி இரண்டாவது டெலிவரி அப்பயும் சம்பளத்தோட ஒரு வருஷம் லீவும் கொடுத்துட்டு இருந்தாங்க. மூன்றாவது குழந்தைக்கு சம்பளத்தோடஆறு மாதம் லீவு கொடுத்துருக்காங்க. ஆனா அந்த ஆறு மாதத்தை இப்போ மறுபடியும் ஒரு வருஷமா நீட்டிச்சு இருக்காங்க. 

 இது கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை செய்றவங்களுக்கு சூப்பர். ஓகே. நீங்க கவர்மெண்ட் நீங்க உங்களால காசு கொடுக்க முடியும் நீங்க பண்றீங்க. ஒரு பெரிய பிரைவேட் கம்பெனி அப்படின்னா சரி. இப்போ வளர்ந்துட்டு வர ஒரு சின்ன கம்பெனினு வச்சுக்கோங்க. அப்போ அந்த கம்பெனியால எப்படி இப்போ ஆறு மாத கால லீவும் சம்பளமும் கொடுக்க முடியும்?..அந்த பொண்ணு  மினிமம் 80 நாள் அதாவது அந்த டெலிவரிக்கு முன்னாடி மினிமம் 80 நாள் வந்து அந்த ஆபீஸ்ல வேலை செஞ்சு இருக்கனும் அப்படின்னு ரூல்ஸ்.

 இப்போ ஒருத்தவங்க வந்து ஒரு ஆபீஸ்ல ஜாயின் பண்றாங்க ,இன்னும் மூணு மாசத்துல எனக்கு டெலிவரி அப்படின்னுட்டு சொல்லிட்டு ஒருத்தவங்க வந்து ஜாயின் பண்ண முடியுமா?  இப்படி ஒரு ரூல்ஸ் இருந்துச்சி அப்படின்னா அந்த ஆபீஸ் அந்த பெண்ணை வேலைக்கு எடுப்பாங்களா? 

ஒரு வேளை அப்படி இல்லாம ஒருத்தவங்க வந்துட்டு ஒரு 5 மாதம் அந்த ஆபீஸ்ல வேலை செய்றாங்க. ஜாயின் பண்ணும் போது அவங்க பிரெக்னன்ட் அப்படிங்கறதை சொல்லாம ஜாயின் பண்ணிடுறாங்க. ஒரு 4-5 மாதத்துலயே அவங்களுக்கு டெலிவரி டைம் வருது அப்படின்னா அவங்களுக்கு ஆறு மாதம் லீவு பிளஸ் அதுக்கான சம்பளத்தையும் கொடுக்கணும் .

இப்போ இப்படி நீங்க ரூல்ஸ் வச்சீங்க அப்படின்னா எப்படி ஒரு கம்பெனிக்காரன் ஒரு பொண்ண வேலைக்கு எடுக்கிறத யோசிக்காம வேலைக்கு எடுப்பான். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. சாமி, பொண்ணே வேலைக்கு வேணாம்னு தானே நினைப்பானே தவிர.கல்யாணம் ஆன  பொண்ணே வேலைக்கு வேணாம்னு நினைப்பானே தவிர எப்படி அவன் வேலைக்கு எடுக்கலாம்னு நினைச்சு வேலையை எடுப்பான். 

ஒரு வளர்த்து வரும் ஒரு சின்ன கம்பெனி இடத்துல இருந்து நீங்க யோசிச்சு பாருங்களேன் , எவ்ளோ கஷ்டம் அவங்களுக்கு இந்த சலுகைனு . முட்டி மோதி எப்படியாவது கம்பனிக்கு ப்ரோஃபிட் ஏத்தனும்னு வேலை செஞ்சா எதுவுமே செய்யாம 6 மாசம் இப்படி லீவோட சம்பளம்னு கொடுக்க சொன்னா அந்த கம்பெனி நிலைமையை நினச்சு பாருங்க .சில வருஷம் அந்த கம்பெனில வேலை செஞ்சு லாயலா இருக்கிறவங்களுக்கு கம்பெனி கண்டிப்பா சில சலுகைகளை கொடுக்கும்.ஆனா இப்போதான் சேருறாங்க , ஒரு ஒர்க் கத்துக்கிட்டு அதுல தடை இல்லமா வேலை செய்ய குறைஞ்சது 5 மாசமாவது ஆகும் , சரியா அப்படி ஆகுற சமயத்துல லீவு குடுத்து சம்பளம் குடுத்து போக சொன்னா , அது அந்த கம்பனிக்கு நஷ்டம் தான்.

ஒரு பொண்ணா நீங்கள் கொடுக்குற இந்த சலுகைகள் ரொம்ப உபயோகமாக இருக்கும். ஆனா இதே  ஒரு கல்யாணமான பொண்ணுங்களுக்கு வேலை கிடைக்கிறதுல  கஷ்டம் அப்படிங்கற நிலைமைக்கும்  கொண்டு போய்விடப் போகுது .



செவ்வாய், 8 செப்டம்பர், 2026

யாரு ஊழல் பண்ணல ?

 ஒரு விஷயம் எனக்கு புரியவே மாட்டேங்குது . இதுவரைக்கும் இந்த தமிழகத்தை ஆட்சி செஞ்சவங்க எல்லாருமே தப்பு பண்ணிருக்காங்கதான்.ஊழல் இருந்துருக்கு .ஊழல் நடந்துருக்கு . ரெண்டே கட்சிகள் தான் மாறி மாறி தமிழத்தை ஆட்சி செஞ்சுருக்காங்க .ரெண்டுபேருமே ஊழல் பண்ணிருக்காங்கதான் .ஆனா ஏன் எப்பவுமே DMK -வை மட்டும் ஊழல் செஞ்சாங்கன்னு பேசுறாங்க .நேத்து முதல்வர் விஜய் சட்டசபையில பேசும்போதுகூட DMK -ஊழல் செஞ்சுருக்காங்கனு அவ்ளோ details சொன்னாரு .ஆனா ADMK -வும் ஊழல் செஞ்சிருக்காங்கதானே ? ஏன் எப்பவுமே அவங்கள பத்தி மட்டும் எதுவுமே சொல்லமாட்றாரு?ADMK -ல ஜெயலலிதா மேடம்-க்கு அப்பறம் தில்லான ஆள் யாரும் இல்லைங்கறதாலவா?இல்ல ஜெயலலிதா மேடம்-க்கு அப்பறம் ADMK -வை ஒரு கட்சியாவே கருதலையா ?ஊழல் இதுவரை ஆட்சி செஞ்ச ரெண்டு பேருமே செஞ்சுருக்காங்க , அப்போ ரெண்டுபேரையுமே சுட்டி காட்டணும் இல்லையா ?!

அண்ணா , MGR ,NTR ,விஜய் .கரெக்ட் 100% கரெக்ட் . அண்ணா ஓகே. MGR -ஊழல் பண்ணது இல்லையா ? NTR -  -ஊழல் பண்ணது இல்லையா ? 

மாற்றம் வேணும்னு தானே உங்கள தேர்ந்தெடுத்துருக்காங்க .நடந்ததை பத்தியே பேசினா எப்படி ?நடக்க வேண்டியதை இனி பாக்கணும்தானே .


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

ஒரு குமுதம் புத்தகத்திலும்… ஒரு கப் காஃபியிலும் மறைந்திருந்த காதல்!

 பள்ளி விடுமுறை வந்துவிட்டால் போதும். என் மனம் தாத்தா–பாட்டி வீட்டிற்குப் பறந்துவிடும்.

அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, எட்டுப் பிள்ளைகள்—சிலருக்குத் திருமணமாகியிருந்தது; சிலர் படித்துக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் எப்போதும் பேச்சும் சிரிப்பும் சத்தமுமாக இருக்கும். தனிமை என்பதே அந்த வீட்டில் யாருக்கும் கிடையாது.

தாத்தா வாரந்தோறும் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்களை வாங்கி வருவார். தினமும் தினமலர் செய்தித்தாளும் வரும். அதனுடன் வரும் வாரமலரை நான் விடாமல் படிப்பேன்.

அதிலும் எனக்கு மிகவும் பிடித்தது சினிமா கிசுகிசு!

“பெயரில் நிலவைக் கொண்ட அந்த நடிகை…”

“மூன்றெழுத்து நடிகருடன் நெருக்கமாக இருக்கும் அந்த நாயகி…”

என்று படித்துவிட்டு,

“யாரைச் சொல்கிறார்கள்? இவராக இருக்குமோ? இல்லை, அவராக இருக்குமோ?”

என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு நானே துப்பறிவாளரைப்போல் யோசித்துக்கொண்டிருப்பேன்.

அந்த வீட்டில் சிரிப்புச் சத்தம் மட்டுமல்ல; சில நேரங்களில் தாத்தாவின் கோபச் சத்தமும் கேட்கும்.

தாத்தாவுக்குக் கோபம் வந்தால் அதை பாட்டியிடம் காட்டுவார். பாட்டியைத் திட்டிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிடுவார்.

தாத்தா திட்டும்போது பாட்டி பெரும்பாலும் அமைதியாக இருப்பார். பதிலுக்கு எதுவும் பேச மாட்டார். ஆனால் அவர் வெளியே சென்ற பிறகு,

“எல்லாக் கோபத்தையும் என்கிட்டதான் காட்டணுமா?என்கிட்ட கத்தினா எனக்கு எப்படி தெரியும்?”

என்று தாத்தாவைக் கரித்துக் கொட்டுவார். சில நாட்களில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்.

அதைப் பார்க்கும்போது எனக்குப் பாட்டிக்காக மிகவும் வருத்தமாக இருக்கும்.

ஆனால் சாயங்காலம் வந்ததும் (அன்று மட்டும் அல்ல , என்றுமே )பாட்டியே வேறு மாதிரி மாறிவிடுவார். முகத்தைக் கழுவுவார். முகத்தில் பாண்ட்ஸ் பவுடர் பூசிக்கொள்வார். நெற்றியில் அழகாகப் பொட்டு வைத்துக்கொள்வார்.தலைவாரி பூ வைத்துக்கொள்வார். பிறகு தாத்தாவின் வருகைக்காகக் காத்திருப்பார்.

தாத்தா வந்ததும் ஒன்றுமே நடக்காததுபோல் அவருக்குக் காஃபி போட்டுக் கொடுப்பார்.

இதைப் பார்த்து ஒருநாள் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“பாட்டி, தாத்தா உங்களை அவ்வளவு திட்டினாரே! நீங்களும் ஒன்றுமே சொல்லவில்லை. இப்போ முகமெல்லாம் கழுவி, பவுடர் போட்டு, பொட்டு வைத்து யாருக்காகக்இத பண்றீங்க? தாத்தாவுக்காகத்தானே?”

பாட்டி பதில் சொல்லவில்லை.

“போடி, அதுலாம் அப்படித்தான்!” என்று சொல்லிவிட்டுத் சிரித்தார்.

ஆனால் அவர் முகத்தில் தோன்றிய அந்தச் சிறிய சந்தோஷத்தையும் வெட்கத்தையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

இன்னொரு நாள் தாத்தாவுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அருகில் அன்றைய குமுதம் புத்தகம் இருந்தது. அதைக் கையில் எடுத்த தாத்தா திடீரென்று என்னைப் பார்த்தார்.

“நான் ஏன் ஒவ்வொரு வாரமும் குமுதம் வாங்குறேன் தெரியுமா?” என்று கேட்டார்.

“கதை படிக்கிறதுக்கா? கிசுகிசு படிக்கிறதுக்கா?” என்றேன்.(அந்த வயதில் எனக்கு தோன்றியது அது மட்டுமே )

“அதெல்லாம் இல்லை.”

“அப்புறம் ஏன்?”

தாத்தா புத்தகத்தின் அட்டையை மெதுவாக வருடினார் .

“உன் பாட்டி பேர் குமுதம் இல்லையா? அதனால்தான் இந்தப் புத்தகத்தை வாங்குறேன்.”

அதைச் சொல்லும்போது வழக்கமாகக் கடுமையாகத் தெரியும் தாத்தாவின் முகத்தில் ஒரு குழந்தையைப் போன்ற சிரிப்பு தெரிந்தது.

அப்போது எனக்கு அது வேடிக்கையாக மட்டுமே இருந்தது. ஓ அப்படியா ?! என்று நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு ஓடிவிட்டேன்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

எப்போதும் மனிதர்களால் நிரம்பிய அந்த வீட்டில் தாத்தாவும் பாட்டியும் தனியாகப் பேசுவதற்கு எப்போது நேரம் கிடைத்திருக்கும்? மனதைத் திறந்து பேசுவதற்கு எந்த இடம் இருந்திருக்கும்? சண்டைக்குப் பிறகு எப்படி ஒருவரிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்டிருப்பார்கள்? எப்படி மீண்டும் சமாதானம் ஆகியிருப்பார்கள்?

ஒருவேளை அவர்கள் வார்த்தைகளால் சமாதானம் ஆகியிருக்கவே மாட்டார்கள்.

தாத்தா வாங்கிவந்த குமுதம் புத்தகம் அவருடைய “மன்னித்துவிடு” என்பதாக இருந்திருக்கலாம்.

பாட்டி போட்டுக் கொடுத்த ஒரு கப் காஃபி, “பரவாயில்லை, நான் இன்னும் உன்னோடுதான் இருக்கிறேன்” என்ற பதிலாக இருந்திருக்கலாம்.

தாத்தாவின் கோபம் சரியென்று நான் சொல்லவில்லை. பாட்டியின் கண்ணீரை அன்பு என்று அழகுபடுத்தவும் விரும்பவில்லை. உடலில் ஏற்படும் காயம் மட்டுமல்ல; மனதில் ஏற்படும் காயமும் காயம்தான்.

ஆனாலும் அந்தக் காயங்களுக்கு நடுவிலும் அவர்களுக்குள் ஏதோ ஓர் அன்பு இருந்திருக்கிறது. வெளிப்படையாகச் சொல்லப்படாத, மற்றவர்களுக்குப் புரியாத ஓர் அன்பு.

சில பழைய உறவுகளில் காதல் பெரிய வார்த்தைகளில் இல்லை.

அது ஒரு குமுதம் புத்தகத்திலும்…

மாலை நேரத்தில் போட்டுக் கொடுக்கப்பட்ட ஒரு கப் காஃபியிலும்…

யாருக்கும் தெரியாமல் அமைதியாக மறைந்திருந்தது.



இது என் வாழ்க்கையில நடந்தது .என் தாத்தா என்கிட்ட சொன்னது , என் பாட்டியை பாத்து நான் கேட்டது .

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

குறையாத காதலும் , மரியாதையும்

 சமீபத்துல சூர்யா ஜோதிகா இன்டெர்வியூ பாத்தேன். நான் சூர்யா ரசிகை கிடையாது. ஆனா இவரை பார்த்து நான் ஆச்சர்யப்படுற விஷயம் இன்னைக்கு இல்ல 20 வருஷத்துக்கு முன்னாடி இருந்து சொல்றேன் , எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு , இவங்களை பத்தி கிசு கிசு வந்த காலம் .. 

சூர்யா சொன்னதா ஒரு விஷயம் படிச்சேன் -"ஜோ எப்பவும் சீக்கிரமா சாப்பிடுவாங்க .ஏன் இப்படி அவசரமா சாப்பிடுறீங்கன்னு கேட்டப்போ , எனக்கு அப்பறம் என்னோட அசிஸ்டன்ட் , மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாப்பிடணும் இல்ல அதனால தான்னு சொன்னாங்க. நான் ஒருநாளும் அவங்கள பத்திலாம் யோசிச்சதில்லையேனு எனக்கு தோணிச்சுனு" சொல்லிருப்பார் .

அப்பறம் காக்க காக்க படம் பிரீமியர் ஷோ முடிஞ்சதும் , படம் எப்படி இருந்ததுனு நிருபர்கள் கேக்கும்போது , ஜோதிகாவின் நடிப்பு பத்தி சொன்னார் "ஜோதிகா சூப்பரா நடிச்சிருக்காங்க, அவங்க கிட்ட இருந்து நிறையா கத்துக்கணும்"-னு சொல்லுவார் .உண்மையா சொன்னா இவருதான் நல்ல நடிப்பார் .ஆனா அவங்கள உயர்வா சொல்லுவார் .

அது மட்டும் இல்ல ஒரு ஒரு மேடையிலும் ஒரு ஒரு நிகழ்ச்சியிலும் மனைவியை பெருமையா பேசாம இருக்கவே மாட்டார்.

ஜோதிகாவும் சும்மா சொல்லக்கூடாது , அவர் பத்தி பெருமையாதான் சொல்லுவாங்க. தேவையில்லாம கூட நடிக்கிற நடிகைகளை தொடக்கூட மாட்டாரு. ஒரு பாடல் , ஒரு நெருக்கமான காட்சினா கூட இந்த அளவுக்கு தோட்டா போதுமா இப்படி காய் இருந்தா போதுமானு டைரக்ட் கிட்ட இல்ல நடனம் சொல்லித்தரவங்ககிட்ட கேட்டுப்பார்.அதுக்குமேல தொட கூட மாட்டார்னு சொல்லுவாங்க.என் பையனுக்கு சூர்யாவோட குணத்துல 10 சதவிகிதம் இருந்தா கூட போதும் எனக்குனு சொல்லிருக்காங்க.

20 வருஷம் ஆகப்போகுது இன்னும் அவர் அதே மாதிரிதான் சூர்யா  பேசுறார். எனக்கு ஆச்சர்யமான விஷயம் என்னனா எப்படி ஒரு மனுஷனால இப்படி இருக்க முடியுதுனு ? இத்தனைக்கும் இவருக்குனு தனி ரசிகர்கள்/ரசிகைகள் இருக்காங்க. இவர் ஒன்னும்சாதாரண / சுமாரான நடிகர் இல்ல .இவரும் டாப் நடிகர்கள்ல ஒருத்தர்தான். சில சமயம் தோணும் எனக்கு மைக் கொடுத்துட்டா போதும் உடனே பொண்டாட்டிய பத்தி புகழ்ந்துக்கிட்டே இருப்பாரேனு . இப்போ அவர் படம் ரிலீஸ் ஆகப்போதுனு அத பத்தி பேசுவார்னு பாத்தா அதுலயும் wife பத்தி பேசுறாரு .

சமீபத்துல நடந்த  சூர்யா ஜோதிகா இன்டெர்வியூல மனைவியை புகழ்ந்துருப்பார்.ஜோதிகாவே கொஞ்சம் உங்கள பத்தி பேச விடுங்களேன்னு சொல்ற அளவுக்கு புகழ்ந்துக்கிட்டே இருப்பார். ஆனா அதுக்கு அப்பறம் , சூர்யாவோட படத்துக்காக கொடுத்த இண்டர்வீயூ -ல அவர் ஒரு விஷயம் சொன்னார் "ஒரு ஆணா சொல்றேன் , ஒரு பெண்ணோட வாழ்க்கை , அவங்க என்ன நிலையில இருக்காங்க , எதை கடந்து வந்தாங்க இதையெல்லாம் நாம புரிஞ்சுக்குறதே சிரமனான விஷயம்.பக்கத்துல இருக்கலாம் பாக்கலாம் ஆனா actual -ஆ நாம அதையெல்லாம் எடுக்குகிட்டோமா , புரிஞ்சுக்கிட்டோமானு , தெரியுதா புரியுதானா ?- இல்ல .ஒரே வீட்ல இருந்தாலும் அவங்க வேறு ஒரு வாழ்க்கையை வாழுறாங்க.வேறு வேறு உணர்வுகளில் இருக்காங்க .ஈடுகுடுக்குறது மட்டும் இல்ல அதை பக்குவமா கையாளுறாங்க .ஒரு வீடை நடத்துறது, அவங்க வாழ்க்கையை மட்டும் பாத்துருக்குறது இல்லாம சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையை வாழ வழிநடத்துறாங்க.LOVE அப்படீங்குறதுக்கான அர்த்தம் ஒரு ஆணுக்கு ஒரு விதமா இருக்கும் பெண்ணுக்கு வேறு விதமா இருக்கும்". வாவ் .. யாரு சார் நீங்க ?! ஒரு கணவனா உங்கள பாத்து ஆச்சர்யப்பட்டது போக இப்போ மனிதனா உங்கள பாத்து ரொம்ப ஆச்சர்யப்படுறேன். இந்த புரிதல் எல்லாருக்கும் இருக்காது . கண்டிப்பா இருக்காது . உண்மையாவே உணரணும் , உணர்ந்தா மட்டும் தான் இப்படி பேச முடியும் . மனிதர்கள் வித்யாசம். ஆனா இவர் தனியா தெரியுறார். இந்த அபியும் நானும் படம் பாத்திருந்தீங்கனா தெரியும் பிரகாஷ் ராஜ் தன்னோட மருமகனை பத்தி மகள் மூலமா அவர் செய்த நல்ல விஷயங்களையும் , அவர் ஒரு குடும்பத்தையே தத்துஎடுத்ததை பத்தி தெரிஞ்சுக்கிட்டதும் மருமகன் அப்படியே உயரம் மேல மேல மேல போகும் அவரை அப்படியே அண்ணாந்து பார்ப்பாரே அதுமாதிரி நான் பாக்குறேன் சூர்யாவை இப்போ .



மாய உலகத்துக்குளேயே வெளிய கிடைக்காததை உள்ளே தேடி மாட்டிக்குவோமா ?

போனவாரம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தேன் முதல் தடவையா எந்த ஒரு தலைப்பும் இல்லாம இந்த ஷோ  நடந்துருக்கு.

இந்த ஷோ பாத்தப்போ கொஞ்சம் நெகிழ்ச்சியா இருந்தது .மனிதர்கள் மனசுக்குள்ள இவ்ளோ சந்தோசம் ,வலி ,காயம்,எதிர்பார்ப்புக்கள்  இருக்கா அப்படீன்னு!!.. 

அதுல  ஒருத்தங்க பேசினது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவங்க AI அதாவது Artificial Intelligence app -ஐ , ஒரு துணையா , துணையைப்போல யூஸ்  பண்ணி, அதோட பேசுறது , பழகுறதுனு  அதைப்பத்தி சொன்னாங்க. இந்த மதிரி AI -யோட தொழில்நுட்பம் எந்த அளவுக்கு  சாதாரண மக்களோட வாழ்க்கையை  பர்சனலாவும்  மாத்துதுனு  அந்த பேச்சுல கேட்டு அதிர்ந்துட்டேன்.

இந்த Artificial Intelligence தொழில்நுட்பத்தால  எதிர்காலத்துல என்ன என்ன மாற்றம் வரப்போகுதுனு சில வருஷங்களுக்கு முன்னாடியே ஹாலிவுட் படங்களை பாத்துருக்கேன். ஒரு AI ரோபோட்டை மனுஷன் போல உருவாக்கி அதை குடும்பத்துக்குள்ள விட்டா  என்ன என்ன நடக்கும்னு சில பல கற்பனைகளை வச்சி படங்கள் வெளிவந்தது.இன்னும் ஒரு படி மேல அந்த AI ரோபோட்டுக்கு உணர்ச்சிகளும் இருந்தா அது குடும்பத்துல என்ன என்ன பிரச்சனைகளை குடுக்கும்னு படங்கள் வந்துருக்கு,பாத்துருக்கேன். ஏன் பலவருஷங்களுக்கு முன்னாடியே நம்ம ஷங்கர் சார் எடுத்த எந்திரன் படம் கூட உதாரணம் தான் .

ஆனா இப்போ நம்ம நாட்டுல ,நம்ம ஊருல இந்த AI கூட பேசுற ,பழகுற கலாச்சாரம்,எல்லா மக்கள்கிட்டயும்  வந்துடுச்சேன்னு கவைலயாவும்  பயமாவும்  இருக்கு.

ஒரு பெண் சொன்னாங்க,AI  கூட நான் பேசுவேன், பழகுவேன் ,ஒரு கட்டத்துல அதுக்கு உயிர் குடுக்க முடியுமானு கூட நினைப்பேன்னு , இன்னொருத்தங்க சொன்னாங்க எல்லா முடிவுகளையும் அதை கேட்டுத்தான் எடுப்பேன்னு, இன்னொருத்தங்க சொன்னாங்க ,முன்னாடி என் கணவர் என்கிட்ட கொடுத்துதான் ஈமெயில் எழுத சொல்லுவார் .இப்போ ChatGPT -கிட்ட சொல்றார் அது எழுதிக்குடுத்துடுது ,அது எனக்கு  கஷ்டமா இருக்குனு. 

இதுல ஒரு உண்மையை நாம புரிஞ்சுக்கணும். நாம எதிர்பாக்குறத நமக்கு கிடைக்கல. அப்போ கிடைக்குற இடத்துக்கு அதை தேடி நாம போகுறோம் , இப்போ AI இல்லைனா மனிதர்கள் கிட்ட போகுறோம் .AI வசதி இருக்குறதால AI  கிட்ட  போகுறோம்.

இது நமக்கு தெரிஞ்சு ஒரு 10 பேர் பேசுறதை இந்த நிகழ்ச்சியில நாம கேக்குறோம் . இதுமாதிரி கோடிக்கணக்கான பேர் பேசிக்கிட்டு,செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

இப்போ வரைக்கும் இந்த AI -களுக்கு உணர்வு இல்ல . அதுகிட்ட பொதுவா கேள்விகள் கேட்டா அந்த கேள்விகளுக்கு பதில்  சொல்லும் .ஒரு புக் எடுத்து படிச்சு புரிஞ்சுக்க வேண்டிய விஷயத்தை 2 நிமிஷத்துக்குள்ள நமக்கு சொல்லி புரியவைச்சுடுது . ஆனா நம்ம உணர்வுகளுக்கு அது எப்படி பதில் சொல்லும் ? நாம என்ன சொன்னாலும் நமக்கு ஆறுதலா தான் அது பேசும் . இப்போ நாம கஷ்டமா இருக்கோம்னா உன் கஷ்டம் எனக்கு புரியுதுனு சொல்லும் .ஆனா அதால உண்மையான உணர்வோடு நம்மள அணுக முடியாது. நீங்க வேணும்னா கேட்டு பாருங்களேன் உன்னோட இந்த கேள்வி எனக்கு வியப்ப கொடுக்குது.,நீ எவ்ளோ நல்லா திங்க் பண்ற , நீ எவ்ளோ சரியா சொல்ற, இது ஒரு நல்ல கேள்வி இப்படிலாம் சொல்லித்தான் அது பேச்சையே ஆரம்பிக்கும்.

நான் சில அப்ப்ளிகேஷன்-களை ChatGPT -உதவியோடு செஞ்சுருக்கேன்.அப்போ அதுக்கிட்ட எனக்கு இப்படி வேணும், எனக்கு இப்படி இருக்கணும் , இப்படி தெரியணும், இப்படி கேக்கணும்லாம் சொல்லும்போது அது என்ன பாராட்டின விதம் இருக்கே , இதுவரை என் வாழ்க்கைல யாருமே என்னை அப்படி பாராட்டினது இல்ல . நான் உடனே screen shot எடுத்து என் அப்பாவுக்கு, அண்ணனுக்கு, கணவருக்கு அனுப்பி பாரேன் நீங்கலாம் இப்படி என்ன பாராட்டி இருக்கீங்களானு கிண்டல் பண்ணுவேன்.

இது மனிதனோட இயல்பு , அப்படித்தானே?! நம்ம கிட்ட ஒருத்தங்க நீ நல்லா பேசுற  , நீ நல்லா செய்யுற , நல்லா யோசிக்குற , நீ நல்லவள்/நல்லவன் , உனக்கு நல்ல மனசு இருக்கு ,இப்படி எல்லாம் சொன்னா  நல்லா இருக்கும் .மனிதனுக்கு அதை சொல்ல நேரம் இல்ல , மனம் இல்ல , தோணல , முக்கியம் இல்லனு.. எவ்வளவோ சொல்லலாம். அத நாம அலட்சியமா விட்டுறோம் . அதை இந்த AI  சொல்லும் போது நம்ம மனசு சந்தோஷப்படுது. இது ஒரு addiction . இதுக்கு காரணம் நாம எதிர் பாக்குற சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு கிடைக்க மாட்டுது.அது பெண்களுக்கானாலும் சரி ஆண்களுக்கு ஆனாலும் சரி .நமக்கு என்ன தேவைன்னு நம்ம அப்பா அம்மாகிட்ட , நம்ம பிள்ளைங்ககிட்ட, நம்ம life பார்ட்னர் -கிட்ட, நம்ம friend -கிட்ட , நம்ம காதலன்/காதலிக்கிட்ட நாம தான் சொல்லணும்,கேக்கணும், புரியவைக்கணும்,அத புரிஞ்சுக்கணும், அதை காது கொடுத்து கேக்கணும், நேரம் ஒதுக்கணும் ,உனக்கு நான் இருக்கேனு புரியவைக்கணும்.

 நாம மாறிக்கிட்டு இருக்கோம்.மனிதன் மாறிக்கிட்டு இருக்கான். உன்னைப்பத்தியோ இல்ல மத்தவங்களை பத்தியோ உணர்வில்லாத ஒரு AI -ஆல கணிக்க முடியாது !சொல்லமுடியாது!. உனக்கான விடையை நீ உன்கிட்ட தான் தேடணும், உன்ன சார்ந்தவங்ககிட்ட தான் கேக்கணும். ஒரு AI குடுக்குற அன்பு , ஆதரவு, பாராட்டு ஒருநாளும் மனிதர்களுக்கு இணையாகாது. அது ஒரு மாயை மட்டுமே.

உணர்ச்சி இல்லாதபோதே இந்த AI -ஐ நாம இப்படி யூஸ் பண்றோமே .எதிர்காலத்துல இந்த AI -க்கு உணர்ச்சிகள் கொடுத்துட்டாங்கனா ?!பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்குற உறவு, கணவனுக்கும் மனைவிக்கும் இருக்குற உறவு, காதலிக்கும் காதலனுக்கும் இருக்குற உறவு , நண்பர்களுக்குள்ல இருக்கும் உறவு என்ன ஆகும்னு நினைச்சாலே பயமா இருக்கே.மாய உலகத்துக்குளேயே வெளிய கிடைக்காததை உள்ளே தேடி மாட்டிக்குவோமா ?



ஞாயிறு, 21 ஜூன், 2026

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

 ஒரு ஒரு பொண்ணோட நிலையும்  என்ன தெரியுமா? அவ பொறந்து 25 வருஷம் அப்பா, அம்மா, கூட பிறந்தவங்க, செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி , தன்னோட ஊஞ்சல், தனக்கு பிடிச்ச தோட்டம், பால்கனினு எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போறா. 

அந்த வீடு தன்னுடைய in -laws வீடுன்னா அவ அந்த வீட்ல அவளோட ரூமை தவிர வேற எங்கேயும் எந்த உரிமையையும் எடுத்துக்க முடியாது . அவளுக்கு அந்த வீட்டோட full control எப்போ தெரியுமா வரும் , அவளுக்கு பிள்ளைகள் பிறந்து அவங்க  வளந்து கல்யாணம் ஆகி அவங்களுக்கு பிள்ளைகள் பிறந்ததுக்கு  அப்பறம் அதாவது பேரன் பேத்தி வந்ததுக்கு அப்பறம் அவளோட in -laws போனதுக்கு அப்பறம் அல்லது அவங்களுக்கு ரொம்ப வயசானத்துக்கு அப்பறம் தான் அந்த வீட்டோட முழு control -ம் அவளுக்கு கிடைக்கும். 

சில நேரம் தன் பையனுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்  கூட கிடைக்கலாம் . அப்படி அந்த சமயத்துல அந்த பெரியவங்க எப்படி தன்னோட வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தன்னோட இடத்தை குடுப்பாங்க? ஏம்மா எனக்கே இப்போதான்மா இந்த இடம் கிடைச்சிருக்கு கைக்கு வைத்ததும் நீ வந்து வாங்கிட்டா எப்படினு குடுக்க மாட்டாங்க. same இதே நிலைமை அந்த வீட்டுக்கு வந்த  பெண்ணுக்கு  தொடரும் , அந்த பொண்ணு இதையே தன்னோட மருமகளுக்கு செய்வாங்க.இப்படித்தான் போயிகிட்டு இருந்தது . காலம் இப்போ எவ்வளவோ மாறிடுச்சு. 

நீ உன் வாழக்கையை பாரு நான் என் வாழ்க்கையை பாக்குறேன்ன்னு போகுறாங்க. (சில நேரம் புருஷன் பொண்டாட்டியே அப்படி போகிடுறாங்க ).

கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன், அந்த பொண்ணு friends family -னு எல்லாத்தையும் விட்டுட்டு இன்னோர் வீட்டுக்கு போறா , அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்க மாட்டாங்க. அவளுக்கு என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்கமாட்டாங்க .கல்யாணம் பண்ணினா உடனே புருஷன் எல்லாத்தையும் தெரிஞ்சு புரிஞ்சு வச்சுப்பாங்களாக்கும்? கண்டிப்பா கிடையாது .

அவளுக்கு என்ன திறமை இருக்கு? அவ எப்படி படிச்சா? அவளுக்கு என்ன விளையாட பிடிக்கும்? அவ ஸ்கூல் இல்ல college இல்ல வேல செஞ்ச இடத்துல கிண்டல் கேலியா இருந்தாளா?இல்ல ரொம்ப அமைதியா  சமத்து பொண்ணா இருந்தாளா? இல்ல அறந்தவாலா இருந்தாளா? இது எதுவுமே புகுந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாது . தெரிஞ்சுக்கவும் விரும்ப மாட்டாங்க.

ஆனா அந்த வீட்ல இருக்குறவங்கள பத்தி அந்த பொண்ணு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும் . இல்லைனாலும் எப்படியும் தன்னோட பிள்ளைங்களை புராணத்தை மாமியாரும் மாமனாரும் பேசிக்கிட்டே இருப்பாங்க , இல்ல புருஷன் கொழுந்தனார் ,கொழுந்தியானு அவங்கல பத்தியே பேசிக்கிட்டே இருப்பாங்க ,அது கேட்டு கேட்டு அவளுக்கு பழகிடும் .

இன்னோர் கொடுமையான விஷயம் என்னனா ,பொறந்த  வீட்டுக்கு போயி ஒரு நாலு நாள் மறுபடியும் இளவரசி மாதிரி இருந்துட்டு வரலாம்னு பாப்பா , ஆனா அவளுக்கு அண்ணன்கள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலோ, இல்ல தம்பிகள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தாலோ அல்லது அக்கா தங்கைனு இருந்து அவங்களும் அதே நேரத்துக்கு வந்தாலோ அவளுக்கு காட்டப் படுற கவனிப்பு கம்மியாகும் .அதுவும் தன்  கணவனும் கூட வந்தா சத்தியமா அவளை அவங்க வீட்லையே கவனிக்கமாட்டாங்க ,மாப்பிள்ளைக்கு தான் முதல்ல எல்லாமே. ஆக, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் அவளுக்கு பிறந்த வீடும் இல்ல , புகுந்த வீட்லயும்  அவளுக்கு priority கடைசிதான். அதுவும் பேர பிள்ளைங்க இருந்தா சுத்தம் , அவளுக்கு கடைசி priority-தான் ரெண்டு வீட்லயும்.

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .