காலம் காலமா மக்கள் மனசுல நீங்கா இடம் பிடித்திருக்கிற கருணாநிதி ,எம்ஜிஆர் இவங்களை மாதிரியான தலைவர்களுக்கெல்லாம் ஒரு மனைவி மட்டும் கிடையாது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தாங்க .அது மக்களுக்கும் தெரியும். மக்கள் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா அப்போ இருந்த மக்களுடைய மனநிலை அப்படித்தான் இருந்தது. அப்போ சாதாரணமாவே ஆண்கள் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு சாதாரண விஷயமா தான் இருந்தது. சாதாரண ஆண்களுக்கே அது ஓகே அப்படின்னா இந்த மாதிரியான பெரிய தலைவர்கள் எல்லாம் கேட்கவே வேண்டாம். அதனால மக்கள் அதை பெருசா எடுத்துக்கல, பெருசா கண்டுக்கல, அது ஒரு பெரிய விஷயமா பார்க்கல.
ஆனா இப்ப இருக்கிற காலம் வேற. மக்கள் கொஞ்சம் தெளிவா இருக்காங்க. மக்களுக்கு படிப்பறிவு இருக்கு முக்கியமா . ஆண்களுக்கு சமமா பெண் இருக்காங்க அப்படிங்கறதை சொன்னது போக இப்போ ஆண்களுக்கும் மேலாக பெண்கள் இருக்காங்க ("எல்லா விஷயத்திலும்") அப்படின்னு சொல்ற ஒரு காலகட்டத்தில் நம்ம இருக்கோம்.
பர்சனல் லைஃப் பர்சனல் லைஃப் இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது . ஆனா பர்சனல் லைப் பொதுக்கு கொண்டு வந்துட்டாங்க அப்படின்னா அது பேசும் பொருள் ஆகும் தான். நீங்க அரசியலுக்கு வந்த பொழுது உங்க இண்டஸ்ட்ரில இருந்தவளே உங்கள அப்படி வரவேற்றார்கள் .சாதாரணமான நாங்கள் மட்டும் கிடையாது ,உங்க இண்டஸ்ட்ரில இருந்தவர்களே அவ்வளவு சந்தோஷ பட்டாங்க. வரவேற்றார்கள். ஏன்னா எல்லாருமே ஒரு மாற்றத்துக்காக காத்துக்கிட்டு இருந்தோம். உங்க இண்டஸ்ட்ரில உங்களை வரவேற்ற மங்களே ,இன்னைக்கு என்னடா இது அப்படின்னு நினைக்கிற அளவுக்கு தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க.உங்களுடைய பர்சனல் வாழ்க்கை உங்களுடைய இஷ்டம் இல்லைன்னு சொல்லல ஆனா எதையும் சட்டபூர்வமாக அணுகி முடிவெடுத்து அதுக்கப்புறம் நீங்க வெளிப்படுத்தலாமே
