பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 4 ஜூலை, 2025

ரிவியூ பண்றவங்களே உங்ககிட்ட இருக்குற சக்தியை நல்லதுக்கு மட்டும். யூஸ் பண்ணுங்க.

சமீபத்துல வெளிவந்த தக்  லைஃப் -படம் வெளிவந்ததும் பலவிதமான விமர்சனங்கள் . என்ன என்னவோ சொன்னாங்க.

மணிரத்னம் படமா இது .கமலும் சிம்புவும் த்ரிஷாவுக்காக அடிச்சுக்குறாங்க .த்ரிஷாவோட ஒரு டயலாக் "நான் ஒரு அழுக்கு பிண்டம் , நா வேணாம் உங்களுக்கு" - இந்த டயலாக் வச்சு அவ்ளோ மீம்ஸ் .இப்படி படத்தை பத்தி நெகடிவ் -ஆ சொல்லி சொல்லி சொல்லி அந்த படத்தை பத்தி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவச்சிருந்தாங்க.

எப்படி இருந்தாலும் அந்த படத்தை பாக்கணும்னு முடிவு பண்ணி பாத்தோம் . அட பாவிங்களா உங்களுக்கு ஏன்யா இவ்ளோ காண்டு .. யாரை அழிக்கணும்னு முடிவு பண்ணி இத செஞ்சீங்கன்னு தெரியல .

படம் இவங்க எல்லாம் ரிவியூ பண்ணதுக்கு சம்மந்தமே இல்ல . படம் நால்லாத்தான் எடுத்துருந்தாங்க , நடிச்சிருந்தாங்க . ஒரே ஒரு விஷயம் தான் எனக்கு தோணுச்சு. கிராபிக்ஸ் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்னு தோணிச்சு.

இந்த படத்துல யாரும் திரிஷாவுக்காகலாம் சண்டைபோட்டுக்கல. ஒரு கேங்ஸ்டர்ஸ்க்குள்ல சின்ன சந்தேகம் வந்தாலும் அது எப்படி மாறும், யாரு யாரை அழிச்சு அந்த டாப் இடத்துல இருக்கணும்னு நினைபாங்கனு தான் படத்துல காட்டிருக்காங்க.

ஆனா review பண்ற மக்களே உங்களுக்கு ஏன் இந்த காண்டு , ஏன் இப்படி படத்தை பத்தி மோசமா கழுவி ஊத்தினீங்கன்னு தான் இப்போ வரைக்கும் புரியல. நெஜமாவே படம் பாத்துதான் ரிவியூ பண்ணினாங்களா இல்ல ஒருத்தர் சொன்னதை வச்சு கேட்டு கேட்டு ரிவியூ பண்ணினாங்களானு தெரில.ஆனா ஒன்னு நீங்க நினச்சா யாரையும் அழிச்சிட முடியும் .. 

இது ஒரு பெரிய பொறுப்பு , பெரிய ஷக்தி உங்ககிட்ட இருக்கு .நல்லதுக்கு மட்டும் யூஸ் பண்ணுங்க .



சனி, 24 மே, 2025

நாம ஒன்னும் முட்டாளுங்க இல்ல

சமீபத்துல எனக வீட்ல ஒரு conversation நடந்தது.இந்தியன் ஸ்கூல் எல்லாம் ரொம்ப மோசம் , அமெரிக்கன் ஸ்கூல் எல்லாம் செம்ம அப்படீன்னு .

என்னால இத ஏத்துக்கவே முடியல .ஆமா அமெரிக்கன் ஸ்கூல் -ல நம்ம நாட்டு ஸ்கூல் மாதிரி அதிகமான சுமையை குடுக்கமாட்டாங்க .அதிகமா எழுதுறதை குடுக்கமாட்டாங்க .கையெழுத்து பத்தி கவலை படமாட்டாங்க .பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கணும்னு சொல்லமாட்டாங்க . Theraritical -ஆ மட்டும் இல்லாம practical -ஆ ரொம்ப அழகா பழக்குவாங்க.பிள்ளைங்களுக்கு  எது பிடிக்குது எது பிடிக்கலைனு எதுல அதிகமா ஆர்வமா இருக்காங்கனு ஸ்கூல்-ளையும் பாப்பாங்க.அங்க வீட்லயும் அப்பா அம்மாவும் பாப்பாங்க.அதுக்கு தகுந்த மாதிரி அவங்கள அவங்களுக்கு பிடிச்சதை படிக்க வைப்பாங்க .நம்மள மாதிரி நீ படிச்சே ஆகணும் டாக்டர் ஆகியே தீரணும், இல்ல கவுரவக்குறைச்சல் , அசிங்கமாகிடும் இதுலாம் இல்ல ..ஒத்துக்குறேன்.அதுக்காக இந்த நாட்டுல படிச்சவங்க ஆஹா ஓகோனு இருக்காங்கனு சொல்லமுடியுமா?

நம்ம நாட்டுல இருந்து இந்த நாட்டுக்கு வந்து வேல செய்யுறவங்க எவ்வளவு பேர் இருக்காங்க .நம்ம நாட்டுடைய education சிஸ்டம் சூப்பர்னு ஒரு நாளும் நா சொல்லமாட்டேன்  இப்போவரைக்கும் ,அதுக்காக அங்க படிச்சாங்களாம் முட்டாளுங்க இல்ல , புக் தவிர வேற எதுவும் செய்யத்தெரியாதவங்க இல்ல ,அத தாண்டி யோசிக்க தெரியாதவங்க இல்ல . அப்டி எல்லாம் இருந்தா நம்மாளுங்கஎப்படி  இங்க இருக்குற பெரிய கம்பெனி எல்லாத்துலயும் டாப் இடத்துல இருப்பாங்க.எத்தனை டாக்டர்ஸ் எத்தனை சாப்ட்வேர் டெவெலப்பர்ஸ் நம்ம நாட்டுல இருந்து இந்த நாட்டுல வேல செய்யுறாங்க .வட்டத்தை தாண்டி யோசிக்க தெரியாதவங்கனா எப்படி இங்க வந்து வேல செய்வாங்க?

நம்முடைய நாட்டுல கல்வி காசாகிடுச்சு . எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்குறது இல்ல . அதுக்காக அங்க படிக்குற , படிச்ச, நாமெல்லாம் முட்டாள்கள் இல்ல.

நம்ம நாட்டுல இன்னோர் பிரச்சனை என்ன தெரியுமா , ஒரு குழந்தை நல்லா படிக்குதுனு தெரிஞ்சா அந்த குழந்தையை இன்னும் கொஞ்சம் அதிகமா மெனக்கெட்டு இன்னும் நல்லா படிக்க ட்ரைனிங் தருவாங்க. அந்த குழந்தை நல்ல மார்க் எடுத்தா நம்ம ஸ்கூலுக்கு பெருமைனு போட்டி போடுவாங்க அந்த குழந்தையை படிக்க வைக்க.

ஆனா இங்க அமெரிக்காவுல ஸ்பெஷல் குழந்தைகளுக்குதான் முதல் முக்கியத்துவம் குடுத்து அவங்கள இன்னும் ஸ்பெஷல்ஆ ட்ரீட் பண்ணி அந்த குழந்தைபோக்குலயே போகவிட்டு படிக்க வைப்பாங்க .அப்படிதான் ஆட்டிசம் குழந்தைங்களுக்கு அவ்ளோ அழகா கல்வி கொடுக்குறாங்க.நம்ம நாட்டுல அவ்ளோதான் அந்த குழந்தை ஸ்பெஷல் குழந்தை அந்த குழந்தைக்கு கல்வி வராதுனு முடிவு பண்ணிடுவாங்க.

இவ்ளோ நல்லா education  சிஸ்டம் இருக்குற இந்த நாட்டுல படிச்ச எல்லாரும் செய்மையான பொஷிஷன்-ல இருக்காங்களா என்ன?

இனக்ளுக்கு தானே நம்ம நாட்டுல கால் சென்டர்-னு ஒன்னு வச்சு இவங்களுக்கு வேணுங்குற உதவிகளை தானே செய்றாங்க .எத்தனை பேருக்கு செக் fill பண்ண தெரியாம customer care -க்கு கால் பண்ணி கேப்பாங்க, எத்தனை பேர் வாஷிங் மெஷின்ல இத எப்படி operate -பண்றதுனு கேப்பாங்க .எத்தனை பேர் இந்த ஸ்வீப்பர் எப்படி remove பண்ணி clean பண்றதுனு கேப்பாங்க.அட இவ்ளோ எதுக்கு ,  நானும் இங்க இந்த நாட்டுல இந்த நாட்டுகாரங்களோட வேலை செஞ்சுருக்கேன்.அஞ்சு வருஷம் பத்துவருஷமா வேல செய்யுறேன்னு சொல்லுவாங்க ,ஒரு Team -ல இன்னோர் பேரை எப்படி சேக்குறதுனு கூட தெரியாது. இத பண்ணுங்க இத கிளிக் பண்ணுங்கன்னு சொன்னா  கூட தெரியாது. அப்டித்தான் வேல செய்யுறாங்க. ஏன்னா இவங்க தான் அந்த வட்டத்தை தாண்டி யோசிக்கமாட்டாங்க .தனக்கு குடுத்த வேலை மட்டும்தான் பாப்பாங்க .50 பேர் வேல செஞ்சா அதுல 45 பேர் இப்படி தான் இருக்குப்பாங்க.செம சூப்பர்-ஆ வேல செய்யுறவங்களும் இருக்காங்க .அந்த சதவிகிதம் குறைவுன்னு தான் நான் சொல்றேன்.

yes , நம்ம நாட்டுல கல்வியும் கால் சம்மந்தமான விஷயங்களை improve பண்ணனும் நிறையவே , improve பண்ணனும் .எல்லாரும் நல்ல கல்வி கிடைக்க செய்யணும் .உலகத்துக்கே நாம எடுத்துக்காட்டா இருக்கலாம் அப்படியெல்லாம் செஞ்சா. நம்ம குழந்தைங்க உலககத்துல எல்லா நாட்டுலையும் எல்லா பெரிய பொசிஷன்லயும் இருப்பாங்க.

மனக்குமுறல் தான் இதுலாம் .

சனி, 14 செப்டம்பர், 2024

பாடலின் வரிகள் - நெஞ்சமே நெஞ்சமே , மாமன்னன்

படம் : மாமன்னன் (2023)
பாடியவர்கள்  : விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் 
பாடல் எழுதியவர் : யுகபாரதி
இசை : A.R.ரகுமான்




நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ... ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


கண்ணோரம்
கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே
பாடல் நீ..யே.. ஓஓ ஓஓ ஓ...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ... என்னிலே
வண்ணமாய்... பொங்குதே
ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..


நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததால்
திக்கெல்லாம் வெள்ளிமீனே
நீ... தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லைத் தேனே


ஓ ஓ ஓ ஓ செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
தித்திப்பு முத்தமே கொஞ்சம் தாயேன்


செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டிப்போயேன்..
காட்டுக்கே கூட்டிப்போயேன்


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..