பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 29 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - மன்னவனே என் மன்னவனே - இரண்டாம் உலகம்

படம் : இரண்டாம் உலகம் 
பாடல் :  மன்னவனே என் மன்னவனே
பாடியவர்கள் : சத்யஸ்ரீ  கோபாலன்,கோபால் ராவ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து 
மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்

உன் இணைக் கிள்ளி வரும்வரை
ஒரு துணை கிளி நானடி
இதை உறவென்பதா பரிவென்பதா
பெயரே இல்லாத துயரமா

மன்னவனே என் மன்னவனே
நீ போன பாதை தேடி தேடி வருவேன்
பனியிலே வெண் பனியிலே
வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்

செவ்வாய், 26 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - பனங்கள்ளா விஷமுள்ளா - இரண்டாம் உலகம்

படம் : இரண்டாம் உலகம் 
பாடல் :  பனங்கள்ளா விஷமுள்ளா
பாடியவர்கள் : தனுஷ் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வைரமுத்து 

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு  எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

பனங்கள்ளா விஷமுள்ளா
ஒரு கூத காத்து கிள்ள
உன் கோபம் என்னக் கொல்ல
அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும்
பாவி நெஞ்சு எரியும்
ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு
மேகத்த கிழிச்சு எரியும்

வியாழன், 21 நவம்பர், 2013

சினிமா இன்டஸ்ட்ரி இனி இப்படி மாறுமா ?


இரண்டாம் உலகம் படத்தப்பத்தியான விஷயங்கள் பாத்துக்கிட்டு/படிச்சுக்கிட்டு இருந்தப்போ காஃபி வித் DD ப்ரோக்ராம் பாக்க நேர்ந்தது..அதுல ஆர்யாவும் அனுஷ்காவும் இரண்டாம் உலகம் படத்தோட ஷூட்டிங் பத்தி சிலது  சொன்னாங்க...

ஜார்ஜியால 90 நாட்கள் ஷூட்டிங்  நடந்துருக்கு..அப்போ ஆர்யா சொன்ன விஷயம், அங்க டோட்லோன்ங்குற இடத்துல ஷூட்டிங் பண்ணினோம் .மலை மேல சின்ன சின்ன குடிசை மொத்தமா ஒரு 13 குடிசை இருக்கும் .ஒரு குடிசைக்கு 8 படுக்கை (பெட்) .ஒரு  குடிசைக்கு ஒரு காமன் பாத்ரூம் தான்னு சொன்னார்..எங்களுக்குள்ல ஹீரோ டைரக்டர்னு  எந்த பேதமும் இல்ல .யார் முன்னாடி வராங்களோ அவங்க தான் பாத்ரூம் முதல்ல யூஸ் பண்ணிகமுடியும்..இதுனால எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரல..ஸ்போட்டிவா எடுத்துகிட்டோம்னு சொன்னார்..

புதன், 20 நவம்பர், 2013

டோல் ஃப்ரீ நம்பர்கள்

இந்தியாவிலுள்ள டோல் ஃப்ரீ நம்பர்கள்

Airlines

Indian Airlines - (1800 180 1407)
Jet Airways - (1800 22 5522)
Spice Jet - (1800 180 3333)
Air India -- (1800 22 7722)
Kingfisher - (1800 180 0101)

Banks

ABN AMRO - (1800 11 2224)
Canara Bank - (1800 44 6000)
Citibank - (1800 44 2265)
Corporation Bank - (1800 443 555)
Development Credit Bank - (1800 22 5769)
HDFC Bank - (1800 227 227)
ICICI Bank - (1800 333 499)
ICICI Bank NRI - (1800 22 4848)
IDBI Bank - (1800 11 6999)
Indian Bank - (1800 425 1400)
ING Vysya - (1800 44 9900)
Kotak Mahindra Bank - (1800 22 6022)
Lord Krishna Bank - (1800 11 2300)
Punjab National Bank - (1800 122 222)
State Bank of India - (1800 44 1955)
Syndicate Bank - (1800 44 6655)

Automobiles

Mahindra Scorpio - (1800 22 6006)

திங்கள், 18 நவம்பர், 2013

ஒரு சகாப்தத்தின் பிரியாவிடை -சச்சின்


கிரிக்கெட் விட்டு விடை பெறுவதுக்கு முன்னாடி சச்சின் அவர்கள் பேசின வார்த்தைகள்.தன் வாழ்க்கைல யார் யாருக்கு நன்றி சொல்லனும்னு நினச்சாரோ அத்தனை பேருக்கும் சொன்னார்.வேற என்ன சொல்ல நான் :((  .
அந்த ஃபேர்வெல்  ஸ்பீச்  இங்க ...



அவரைப்பத்தி உலகத்துக்கே தெரியும் புதுசா என்னத்த சொல்ல...ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா இந்த படத்தை பாருங்க..


பிரபஞ்சம் எப்படி தோன்றியது?

விஞ்ஞான உலகத்தின் மிகப் பெரிய சாதனை, நாம் வாழும் பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற கோட்பாட்டை விஞ்ஞானிகள் கண்டறிந்ததுதான் என்று பலர் அறிவர்.
அதிசயமும், ஆச்சர்யமும் கொண்ட அந்த கோட்பாடு கூறியது என்னவென்றால் சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மிக மிக அதிக வெப்பமும், மிக மிக அதிக அடர்த்தியும் கொண்ட அணு அளவு சிறிய வடிவிலிருந்து ('பிக் பேங்' என்றழைக்கப்படும்') ஒரு 'மா வெடிப்பின்', விரிவாக்கத்தினால்தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது என்பதாகும்.

'காலமும்', 'வெளியும்' அந்த மாவெடிப்பிலிருந்துதான் உருவாகின என்று நாம் கற்பனையிலும் நினைக்கமுடியாத உண்மையினை அந்த கோட்பாடு கூறியது.

galaxy_380உலகத்தை உலுக்கிய அந்த கோட்பாடு கூறியது என்னவென்று சுருங்கச் சொல்வதென்றால் 'from nothing the universe appeared' அதாவது ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இந்த பிரபஞ்சம் உருவாகியது என்பதுதான். மேலும் குறிபிடத்தக்க ஒன்று என்னவென்றால், ஓர் அசுர வேகத்தில் நடந்த அந்த வெடிப்பிலிருந்து ஒரு சீரான, பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்ட பிரபஞ்சம் தோன்றியதாகவும் அக்கோட்பாடு கூறியது. ஒரு பெரும் வெடிப்பு எப்போதும் ஒரு சீரான விஞ்ஞானத்திற்கு கட்டப்பட்ட ஓர் அமைப்பை உண்டாக்குவது என்பது இயல்பன்று.

சனி, 16 நவம்பர், 2013

படத்த பத்தி - பாண்டிய நாடு

பாண்டிய நாடு படத்தை பற்றி -படத்த பத்தி தலைப்பின் கீழ் படிக்க
இந்த லிங்க் http://srivalaipakkam.blogspot.in/p/4.html போங்க


டெங்கு காய்ச்சலை தடுக்கும் ஆயில் பந்து

டெங்கு காய்ச்சலை தடுக்கும்  ஆயில் பந்து .இத எப்படி தயாரிக்குறதுன்னு ஒரு வார இதழ்ல படிச்சப்போ அதை எல்லாருக்கும் தெரியபடுத்தனும்னு தோணிச்சு எனக்கு .அத இப்போ எப்படி தயாரிக்குறதுன்னு  பாப்போம் ..
இரு சக்கரம் இல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்ப்படுதக்கூடிய 'கழிவு ஆயில்' (இது எல்லா மெக்கானிக் கடைலயும் கிடைக்குமாம்) ,எத்தன பந்து தயாரிக்கப்போறோம்ங்குறதை பொருத்து ரெண்டு லிட்டர் இல்ல அஞ்சு லிட்டர் கழிவு ஆயில் வாங்கிக்கணும்.

ஒரு கர்ச்சீப் அளவுக்கு வெள்ளை நிறக்காட்டன் துணி எடுத்து அதுல மரத்தூள் (எல்லா மரக்கடைலையும் கிடைக்குமாம்) கொட்டி ,கிரிக்கெட் பந்து அளவுக்கு உருண்டையா கட்டிக்கனுமாம்.அந்த உருண்டைகளை கழிவு ஆயிலில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனுமாம்.

கைல உறையை மாட்டிகிட்டோ இல்ல கிடுக்கி பயன்படுத்தியோ இந்த உருண்டைகளை எடுத்து தண்ணீர் தேங்கி இருக்குற நீர்நிலைகளில மிதக்க விடனுமாம் ..

நல்ல ஐடியா ,தயவுசெஞ்சு நீங்க இருக்குற இடத்துல இப்படி தண்ணி தேங்கி இருந்தா இந்த வழியை ட்ரை பனி பாருங்க..

                                                      ---நன்றி வார இதழ் 

பாடலின் வரிகள் - ஏலே ஏலே தோஸ்துடா - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : ஏலே ஏலே தோஸ்துடா 
பாடியவர்கள் : க்ரிஷ் ,நரேஷ் அய்யர்  
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : விவேகா  



ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு 

ஏலே ஏலே தோஸ்துடா
நாட்கள் புதுசாச்சே  
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்டா  
கேளு என் பேச்சு 

சிடுமூஞ்சு வாத்தியாரு 
செல போல டீச்சர் யாரு 
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு 
எங்க ரேங்க்கு கார்ட் பாரு 
அதில் அப்பா சைன் அ தப்பா போட்டோமே

வெள்ளி, 15 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - என்னத்த சொல்ல - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : என்னத்த சொல்ல
பாடியவர்கள் : கார்த்திக்,ஹரிசரண்,வேல்முருகன்,ரமேஷ் விநாயகம் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : விவேகா 



ரொம்ப நேரம் இதே போய்ட்ருக்குதுடா
மச்சான் எடுத்து விடு 

என்னத்த சொல்ல இன்னும் என்னத்த சொல்ல 
சொல்ல வார்த்தையே இல்ல 
நிம்மதி இல்ல இனி நிம்மதி இல்ல 
பொண்ணு லைஃப் லாங் தொல்ல   

மயில் போல வருவா 
புது போத தருவா 
நீ பொண்ணோட சேந்தாலே 
மண்ணாவ மாமா 

ஆதார் அடையாள அட்டை


ஆதார் அட்டைக்கு இதுவரைக்கும் வின்னப்பிக்காதவங்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் :

 http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம். ​

விண்ணப்பிச்சவங்க விண்ணப்பத்தோட நிலையை தெரிஞ்சுக்க ​:

 https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLink இந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60 முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.

வியாழன், 14 நவம்பர், 2013

Google + கவர் போட்டோ,ப்ரோஃபைல் போட்டோவின் புது வடிவம்

Google + தன்னோட வாடிக்கையாளர் பக்கத்துல , யூசரோட கவர் போட்டோவின் அளவை கம்மி செஞ்சு ,ப்ரோஃபைல் போட்டோ கவர் போட்டோ  ஒன்னா சேந்து  ப்ரோஃபைல் போட்டோவுக்கு கீழேயே யூசர் பேர் /யூசரோட பேஜ்ஜின் பேர்  வரமாதிரி இது ரெண்டும் ஒன்னு சேந்து  ஒரே அளவா தெரியுறமாதிரி மாத்தி  இருக்காங்க..பாக்க ரொம்ப அழகா இருக்கு..


பாடலின் வரிகள் - பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை

படம் :மூன்றாம் பிறை 
பாடல் :  பூங்காற்று புதிதானது 
பாடியவர் : K.J .ஜேசுதாஸ்  
இசை : இளையராஜா  
பாடலாசிரியர் :கண்ணதாசன் 


பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்

பூங்காற்று புதிரானது
புதுவாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்
மரகதக்கிள்ளை மொழிபேசும்
பூவானில் பொன்மேகமும் உன்னை போலே
நாளெல்லாம் விளையாடும்

புதன், 13 நவம்பர், 2013

டிரைவ் பண்ணும் போது தயவு செஞ்சு இப்படி செய்யாதீங்க ...


தயவு செஞ்சு டிரைவ் பண்ணும்போது செல்போன்ல பேசாதீங்க..

மெசேஜ் அனுப்பிக்கிட்டே டிரைவ் பண்ணாதீங்க ..

பின்னாடி உக்காந்து இருக்குறவங்கள திரும்பி திரும்பி பாத்து பேசிக்கிட்டே டிரைவ் பண்ணாதீங்க..

பாடலின் வரிகள் - ஏன் என்றால் - இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

படம் :இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  
பாடல் : ஏன் என்றால் உன் பிறந்தநாள்
பாடியவர் : ஹரிஹரன் ,மாளவிகா மனோஜ்,விஷ்ணு ப்ரியா   
இசை : சித்தார்த் விப்பின்  
பாடலாசிரியர் : மதன் கார்க்கி 
உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறைப்பிடிப்பேன்
உலர்ந்த மேகத்தை கொண்டு
நிலவின் கரை துடைப்பேன்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

இலை ஒன்றில் மேடை அமைத்து
ஒளிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாடச்செய்வேன்
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை
உன்காதில் கூவச் செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட கட்டளை இடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்..

செவ்வாய், 12 நவம்பர், 2013

வாத்து மடையன்னு சொல்வியா இனி ?!?

வழக்கமாக துப்புத் துலக்க மோப்ப நாய்களைப் பயன்படுத்துவாங்க . நாய்களை குற்றவாளிகள் எளிதில் ஏமாத்திடுறாங்கனு  நாய்களைவிட மோப்ப சக்தியில் அதிக ஆற்றல் உள்ள வாத்துக்களை தங்கள் பணிகளுக்குப் பயன்படுத்தி வராங்களாம்  சீனக் காவல்துறை.


சீனாவின் - ஜின்ஜியாங் மாகாணத்தின் கிராமப்புறப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் குற்றவாளிகளைத் துப்பறியவும், காவல் நிலையத்தைப் பாதுகாக்கவும் வாத்துக்களைப் பயன்படுத்துறாங்க .

காவல் நிலையத்தில் குற்றச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதியிலிருந்து, இரு சக்கர வாகனம் ஒன்றை நள்ளிரவில் திருட முயன்ற திருடனை சத்தம் போட்டே காட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அக்குற்றச் சம்பவத்தை ஒரு வாத்து தடுத்துள்ளதாகவும்சொல்றாங்களாம் இந்த காவலர்கள்.

பாடலின் வரிகள் - ஒத்தையிலே - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : ஒத்தையிலே 
பாடியவர்கள் : திப்பு,அபி ஜோத்புர்கர் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : கபிலன் 


ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த
நட்பு மீண்டும் வருமா

. அரட்டைகள் அடித்தோமே குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யார் அதை அறிவாரோ
அவன் தொலைவினில் தொடர்கதையோ
இவன் விழிகளில் விடுகதையோ
இனிமேல் நானே தனியாள் ஆனேன் நட்பு என்ன நடிப்போ

திங்கள், 11 நவம்பர், 2013

பழந்தமிழரின் அளவை முறைகள்

ஃபேஸ்புக்கில் world wide tamil people என்ற ஒரு பக்கத்தை படித்தேன் .அதுல இருந்த இந்த நியூஸ் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது.அத அப்டியே உங்க கிட்ட ஷேர் பண்றேன் பழந்தமிழரின் அளவை முறைகள்

முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

ஞாயிறு, 10 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - வான் எங்கும் நீ மின்ன - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : வான் எங்கும்  நீ மின்ன 
பாடியவர்கள் : ஆலப் ராஜ் ,ஹரிணி 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : மதன் கார்கி 



My love its all for you
The moon and the stars
Shine on you

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்

வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்

சனி, 9 நவம்பர், 2013

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 8

விஜய் டிவியின் ஜோடி No 1 நிகழ்ச்சியில சிவகார்த்திகேயன் பங்கேற்பாளராவும் இருந்துருக்காரு நிகழ்ச்சி தொகுப்பாளராவும் இருந்துருக்காரு வேற வேற சீசன்ல ..

அவர் நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்த சீசன்ல ,பாவம் இவர அங்க இருந்த அத்தனைபேரும் ஒரு காமெடி பீஸ்ஸாவே நினச்சு கலாய்க்க ,அவர் எத பத்தியும் கவலைப்படாம யார் என்ன மாதிரி நடிக்க சொன்னாலும் பேச சொன்னாலும் எல்லாத்தையும் செஞ்சாரு அதனாலதான் இன்னைக்கு லச்சக்கணக்கான ரசிகர்களோட சப்போர்ட்டோட   ஒரு நல்ல நிலைமைக்கு வந்துருக்காரு.. அதுவும்   அவரோட காமெடிஸ் அந்த டைமிங் சென்ஸ் , அபாரம்....சான்ஸ்யே இல்ல...அந்த எபிசோட் இங்க ...




பாடலின் வரிகள் - இறகை போலே - நான் மகான் அல்ல

படம் : நான் மகான் அல்ல 
பாடல்:இறகை போலே 
பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா
இசை:யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் :நா.முத்துக்குமார்


இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தைபோலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அணியாயக்காதல் வந்தது
அடங்காத ஆசை தந்தது
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே
தொட்டுச்சென்றது

வியாழன், 7 நவம்பர், 2013

என்ன ஒரு திறமை -60 நொடி ஆர் யு ரெடி - விஜய் டிவி

பொதுவா எல்லா சேன்னல்களும் ஒரு நிகழ்ச்சியின் ஒரு சீசன் முடிஞ்சதுக்கு அப்பறம் , அந்த சீசன்ல அந்த நிகழ்சியில நடந்த குலருபடிகள்,உளறல்கள்,தவறுகள் எல்லாத்தையும் தொகுத்து ஒரு காமெடி எபிசோடா ஒரு நாள் ஒளிபரப்புவாங்க இல்லையா..அப்படி '60 நொடி ஆர் யு ரெ'டி நிகழ்சியில் நடந்த குலருபடிகள்,உளறல்கள்,தவறுகள் எல்லாத்தையும் தொகுத்து ஒரு காமெடி எபிசோட்ல  'படவா கோபி ' சாரின் மிமிக்ரி பாத்து அசந்துபோயிட்டேன்..மனுஷன் என்னமா அசத்துறாரு..இந்த சின்ன உடம்புக்குள்ள இவ்ளோ திறமைகளானு ரசிச்ச அந்த பார்ட் இங்க வீடியோல பாருங்க..

0:37:07 to 0:49:00 வரைக்கும் 'படவா கோபி ' சாரின் அசத்தல் மிமிக்ரி ...




புதன், 6 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - என்னை சாய்தாலே - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : என்னை சாய்தாலே
பாடியவர்கள் : ஹரிஹரன் ,ஸ்ரேயா கோஷல் 
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமரை 


என்னை சாய்தாலே உயிர் தேய்த்தாலே
இனி வாழ்வேனோ இனிதாக..
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழோரத்தில் நகை பூத்தாளே
என்  பாவங்கள் தீர்த்தேன்
மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேரத்தான் பார்த்தேன்

செவ்வாய், 5 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - கடல் நான் தான் - என்றென்றும் புன்னகை

படம் : என்றென்றும் புன்னகை
பாடல் : கடல் நான் தான்
பாடியவர்கள் : M.K பாலாஜி ,சுதா ரகுநாதன்
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : வாலி



கடல் நான் தான்
அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான்
தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது
பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கேட்டு தான்
கண்ணும்  தேடும் உன்னை


கொஞ்சம் சிரிங்க பாஸ் -விஜய் டிவி தீபாவளி கொண்டாட்டம்

விஜய் டிவி நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்னு ஒரு ப்ரோக்ராம் தீபாவளி ஸ்பெஷலா டெலிகாஸ்ட் பண்ணினாங்க..அதுல 'அது இது எது 'நிகழ்ச்சியில் 'சிரிச்சா போச்சு' ரவுண்டுல பெர்ஃபாம் பண்றவங்க வந்து , விஜய் டிவியின் தொகுப்பாளர்களையே கிண்டல் செஞ்சு , போதும் போதும்னு சொல்ற அளவுக்கு சிரிக்க வச்சுட்ட்டாங்க..அந்த வீடியோ பாருங்க.........எல்லா கவலையும் மறந்து சிரிங்க...



முழு நிகழ்ச்சியையும் பாக்க இந்த லிங்க் போங்க...
விஜய் டிவி நட்சத்திரங்களின் தீபாவளி கொண்டாட்டம்

திங்கள், 4 நவம்பர், 2013

சிறுநீரக கற்கள்

இந்தியாவுல 100 % பேர்ல 1% பேர் இந்த பிரச்சனையால பாதிக்கப்படுறாங்க.வெப்பநிலை ,ஈரப்பதம் ரெண்டும் அதிகமாகுறதும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம்.

* கோடைகாலத்துல இந்த பிரச்சனை 40 % அதிகமாகுது.வெப்பநிலை அதிகமாகுறத பொருத்து இந்த பிரச்சனையும் அதிகமாகுது.

*காரணம் உடல்ல நீர் சத்து கம்மியாகுறது.தண்ணீர் அதிகமா குடிக்காதது.

*இத தடுக்க என்ன பண்ணனும்.நிறையா தண்ணீர் குடிக்கணும்.
*எலுமிச்சை சாறு குடிக்கணும்.இதனால சிறுநீரகத்துல உருவாகும் கல்லானது 0.13 விகிதமா குறையுது.

*ஆக்ஸலேட் அதிகமா இருக்குற சோடா,ஐஸ் தேநீர்,சாக்லேட்,ஸ்டாபெரி,கொழுப்புச்சத்து அதிகமா இருக்குற பருப்புகள் இது எல்லாம் தவிர்க்கணும்.

*சாப்பாட்டுல அதிகமா உப்பு சேத்துக்கனும் .

*சிறுநீர்ல அமிலம்,காரம்,சிஸ்டைன் போன்றவை கட்டுப்பாடான அளவுல இருக்குறமாதிரி பாத்துக்கணும்.

* அதேமாதிரி இறைச்சி அளவா சாப்பிடனும்.ஏன்னா இந்த வகையான உணவுல ப்யூரின்கள் அப்டீங்குற இயற்க்கை பொருள் இருக்கு.இது வளர்சிதை மாற்றத்தை சிதச்சு யூரிக் அமிலம் ஏற்பட காரணம் ஆகுது.

*சாலட் அதிகமா சாப்பிடனும்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

பாடலின் வரிகள் - சில்லென்ற ஒரு மழைத்துளி - ராஜா ராணி

படம் : ராஜா ராணி 
பாடல் : சில்லென்ற  ஒரு மழைத்துளி 
பாடியவர் : அல்ஃபோன்  ஜோசப் ,க்ளிண்டன் ,G.V  பிரகாஷ் 
இசை : G.V  பிரகாஷ் 
பாடலாசிரியர் : நா .முத்துக்குமார் 


சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய் நான் மாறினேன் பெண்ணே

அட கருப்பட்டியே என் சீனி கெழங்கே
சிரிச்சி கவுத்தாத
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில் நீ
கப்பல் ஒட்டாதே
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா
கைபோட்டு போலாமா

சனி, 2 நவம்பர், 2013

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.




-நீங்க பட்டாசு வெடிக்கலைனா ரொம்ப சந்தோஷம்..

-பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டா ,மறக்காம காலில் செருப்பு போட்டுக்கோங்க.

-ராக்கெட் வெளில விடணும், உங்க வீட்டுகுள்லையோ இல்ல அடுத்தவங்க வீட்டுக்குள்லையோலாம் விடக்கூடாது ..

-புஸ்வானம்,சங்குசக்கரம்,மத்தாப்புன்னு எத உபயோகிச்சாலும் அது எரிஞ்சு முடிச்சதும் ஓரமா தள்ளிவிட்ருங்க..

-தீபாவளியை சந்தோஷமா ,நீங்க பத்திரமா கொண்டாடுங்க..

வெள்ளி, 1 நவம்பர், 2013

பென் டிரைவின் வேகத்தை அதிகப்படுத்த !!

பென் டிரைவ் எனும் ரிமூவ்வபள் டிவைஸ்-ஐ கம்ப்யூட்டர்ல பயன்படுத்தும் போது சில நேரம் ரொம்ப மெதுவா இயங்கும் ..இந்த பென் டிரைவின் வேகத்தை நாம அதிகப்படுத்தலாம் .


1. கம்ப்யூட்டர்ல பென் டிரைவ் இன்செர்ட் பண்ணுங்க .MyComputer போங்க .

2.இப்போ பென் டிரைவ்க்கான டிரைவை வலது கிளிக் பண்ணுங்க.'Properties' செலக்ட் பண்ணுங்க.

3.ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.அதுல 'HARDWARE' -tab செலக்ட் பண்ணுங்க.

4.இப்போ 'Name' -ங்குறதுக்கு கீழ இருக்குற உங்க பென் டிரைவை செலக்ட் பண்ணுங்க .