பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 7 ஜனவரி, 2022

விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

அன்பான அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,


         நம்ம ஊர் விருதாச்சலத்துல இருக்குற பெரிய கோவில் என்று அழைக்கப்படுற 'விருத்தகிரீஸ்வரர்' ஆலயத்துடைய  கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாசம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கு. இதுக்காக கோவிலை சுத்தப்படுத்திகிட்டு இருக்காங்க.கோவிலை பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு. 

        எல்லா கோபுரங்களுக்கும் புதுசா பெயிண்ட் நடிச்சிருக்காங்க. கோபுரத்துல ரொம்பவே அழகா எல்லா  லைட்டும்  எரியுது. [கோபுரம் என்பதை"கோ+புரம்' -னு பிரிக்கணும் . "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியுற  அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுறாங்க . இதனால தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்'னு  சொல்லுற  வழக்கம் வந்தது]

சிவன் சன்னதி,விருத்தாம்பிகை சன்னதியை சுத்தி அவ்வளவு அழகா சுத்தப்படுத்தி இருக்காங்க.என்னை பசை, விளக்கு தீபங்களுடைய கரி துகள்கள் எல்லாம் இல்லமா அவ்வளவு அழகா இருக்கு கோவிலை பாக்கவே. இப்படி தான் நம்ம ஊரு கோவில் எப்பவுமே  இருக்கணும்னு நினச்சேன். 

இப்படி நம்ம கோவிலை  சுத்தமாவும், அழகாவும் வச்சுக்குறது நம்முடைய கடமை. ஊரு உலகமே பாத்து ஆச்சர்யப்படுற நம்ம கோவிலை தூய்மையா வச்சுக்குறது நம்முடைய கடமை. எல்லா இடங்களையும் தீபத்தையும் கற்பூரத்தையும் ஏற்றாம அதற்கான ஒரு இடத்துல மட்டும் எல்லா விளக்குகளையும் ஏத்துறமாதிரி அமைக்கணும், ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போடணும். அதை மக்களும் கேட்டு,ஏத்துக்கிட்டு  நடந்துக்கணும். ஒரு பெரிய கோவிலை சுத்தப்படுத்துறதுங்குறது ரொம்ப பெரிய விஷயம். நம்மால செய்ய முடியல அட்லீஸ்ட் செஞ்சதையாவது பத்திரமா பாத்துப்போமே . 


அனைவரும் கும்பாபிஷேகத்துக்கு வாங்க. இறைவனின் அருள் பெறுக