பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 30 ஜனவரி, 2017

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்...!!


1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுபஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.

9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

நம்ம தோனி !!


கூல் கேப்டன் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக்கிட்டாருனு படிச்சதும் எனக்கு அவரோட 2011 உலகக்கோப்பை போட்டி தான் நியாபகத்துக்கு வந்தது..கிரிக்கெட் பத்தி எனக்கு ரொம்ப தெரியாது.ஆனாலும் பேசிக் தெரியும் அதனால பாப்பேன்..2011 உலகக்கோப்பை முழுசா பாத்தேன்.தோனியை பத்தி நிறையா படிச்சிருக்கேன்.ஆனா அந்த மனுஷன் உசிரைக்கொடுத்து உழச்சதை அந்த மேட்ச் அப்போதான் பாத்தேன்..



2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான  கடைசி போட்டி.

நான் ,அண்ணா, அம்மா ஆர்வமா பாக்க உக்காந்தோம்..இந்தியா பேட்டிங் பண்ணினப்போ ஆரம்பத்துல பொறுமையை சோதிக்குற அளவுக்கு இருந்தது , எப்போ சச்சின் அவுட் ஆனாரோ என் அண்ணனுக்கு நம்பிக்கை போய்டுச்சு..அட போங்கையா ... இனி இந்தியா ஜெயிக்காதுன்னு முடிவு பண்ணி தூங்க ஆரம்பிச்சுட்டாங்க..

ஆனாலும் நான் விடாம பாத்துக்கிட்டு இருந்தேன் .என்னால வேற வழியே இல்லாம என் அம்மாவும்  பாத்தாங்க ..