பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 5 ஜூன், 2014

யானைகள் - நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி


* நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி யானைதான்.

* யானைகள் ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் வாழ்கின்றன.

* யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.

* ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.

* பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.



* யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.

* யானைகளுக்குப் பெரிய, மெல்லிய காதுகள். யானையின் காதுகளில் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் அவற்றின் உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன. உஷ்ணமான தட்ப வெட்ப நிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம் அதன் உடலைக் குளிர்விக்கிறது.

* பொதுவாக யானைகளை எந்தப் பிராணியும் உணவாகக் கொள்வதில்லை. இருப்பினும் ஆப்பிரிக்கச் சிங்கங்கள், குட்டி யானைகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள யானைகளை வேட்டையாடித் தின்னும். யானைகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மனிதர்களே. வேட்டையாடுவது, வாழ்விடத்தை ஆக்கிரமிப்பது ஆகியவற்றால் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

* யானையின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்பநிலையை உணர முடியும். உணவைத் தூக்கவும், தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் தும்பிக்கை பயன்படுகிறது.

* யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக்கூடியது. தும்பிக்கையின் கனம் 140 கிலோகிராம். ஒரு லட்சம் தசை நாண்களால் உருவாக்கப்பட்டது அது. ஆனால் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.

* பெண் யானைகள் சேர்ந்து வாழக்கூடியவை. ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து செல்கின்றன. அந்த வயதிலிருந்து ஒரு ஆண் யானை தனியாகவே வாழத் தொடங்குகிறது.

* யானைகள் அருமையாக நீச்சல் அடிக்கக்கூடியவை. தும்பிக்கையை சுவாசக் குழாய் போலப் பயன்படுத்தி ஆழமான நீர்பகுதிகளிலும் யானைகளால் இருக்க முடியும்.

* யானைகள் தாவர உண்ணிகள். இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்பகுதிகளை உணவாக கொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக