பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

மாய உலகத்துக்குளேயே வெளிய கிடைக்காததை உள்ளே தேடி மாட்டிக்குவோமா ?

போனவாரம் நடந்த நீயா நானா நிகழ்ச்சியை பார்த்தேன் முதல் தடவையா எந்த ஒரு தலைப்பும் இல்லாம இந்த ஷோ  நடந்துருக்கு.

இந்த ஷோ பாத்தப்போ கொஞ்சம் நெகிழ்ச்சியா இருந்தது .மனிதர்கள் மனசுக்குள்ள இவ்ளோ சந்தோசம் ,வலி ,காயம்,எதிர்பார்ப்புக்கள்  இருக்கா அப்படீன்னு!!.. 

அதுல  ஒருத்தங்க பேசினது ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவங்க AI அதாவது Artificial Intelligence app -ஐ , ஒரு துணையா , துணையைப்போல யூஸ்  பண்ணி, அதோட பேசுறது , பழகுறதுனு  அதைப்பத்தி சொன்னாங்க. இந்த மதிரி AI -யோட தொழில்நுட்பம் எந்த அளவுக்கு  சாதாரண மக்களோட வாழ்க்கையை  பர்சனலாவும்  மாத்துதுனு  அந்த பேச்சுல கேட்டு அதிர்ந்துட்டேன்.

இந்த Artificial Intelligence தொழில்நுட்பத்தால  எதிர்காலத்துல என்ன என்ன மாற்றம் வரப்போகுதுனு சில வருஷங்களுக்கு முன்னாடியே ஹாலிவுட் படங்களை பாத்துருக்கேன். ஒரு AI ரோபோட்டை மனுஷன் போல உருவாக்கி அதை குடும்பத்துக்குள்ள விட்டா  என்ன என்ன நடக்கும்னு சில பல கற்பனைகளை வச்சி படங்கள் வெளிவந்தது.இன்னும் ஒரு படி மேல அந்த AI ரோபோட்டுக்கு உணர்ச்சிகளும் இருந்தா அது குடும்பத்துல என்ன என்ன பிரச்சனைகளை குடுக்கும்னு படங்கள் வந்துருக்கு,பாத்துருக்கேன். ஏன் பலவருஷங்களுக்கு முன்னாடியே நம்ம ஷங்கர் சார் எடுத்த எந்திரன் படம் கூட உதாரணம் தான் .

ஆனா இப்போ நம்ம நாட்டுல ,நம்ம ஊருல இந்த AI கூட பேசுற ,பழகுற கலாச்சாரம்,எல்லா மக்கள்கிட்டயும்  வந்துடுச்சேன்னு கவைலயாவும்  பயமாவும்  இருக்கு.

ஒரு பெண் சொன்னாங்க,AI  கூட நான் பேசுவேன், பழகுவேன் ,ஒரு கட்டத்துல அதுக்கு உயிர் குடுக்க முடியுமானு கூட நினைப்பேன்னு , இன்னொருத்தங்க சொன்னாங்க எல்லா முடிவுகளையும் அதை கேட்டுத்தான் எடுப்பேன்னு, இன்னொருத்தங்க சொன்னாங்க ,முன்னாடி என் கணவர் என்கிட்ட கொடுத்துதான் ஈமெயில் எழுத சொல்லுவார் .இப்போ ChatGPT -கிட்ட சொல்றார் அது எழுதிக்குடுத்துடுது ,அது எனக்கு  கஷ்டமா இருக்குனு. 

இதுல ஒரு உண்மையை நாம புரிஞ்சுக்கணும். நாம எதிர்பாக்குறத நமக்கு கிடைக்கல. அப்போ கிடைக்குற இடத்துக்கு அதை தேடி நாம போகுறோம் , இப்போ AI இல்லைனா மனிதர்கள் கிட்ட போகுறோம் .AI வசதி இருக்குறதால AI  கிட்ட  போகுறோம்.

இது நமக்கு தெரிஞ்சு ஒரு 10 பேர் பேசுறதை இந்த நிகழ்ச்சியில நாம கேக்குறோம் . இதுமாதிரி கோடிக்கணக்கான பேர் பேசிக்கிட்டு,செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

இப்போ வரைக்கும் இந்த AI -களுக்கு உணர்வு இல்ல . அதுகிட்ட பொதுவா கேள்விகள் கேட்டா அந்த கேள்விகளுக்கு பதில்  சொல்லும் .ஒரு புக் எடுத்து படிச்சு புரிஞ்சுக்க வேண்டிய விஷயத்தை 2 நிமிஷத்துக்குள்ள நமக்கு சொல்லி புரியவைச்சுடுது . ஆனா நம்ம உணர்வுகளுக்கு அது எப்படி பதில் சொல்லும் ? நாம என்ன சொன்னாலும் நமக்கு ஆறுதலா தான் அது பேசும் . இப்போ நாம கஷ்டமா இருக்கோம்னா உன் கஷ்டம் எனக்கு புரியுதுனு சொல்லும் .ஆனா அதால உண்மையான உணர்வோடு நம்மள அணுக முடியாது. நீங்க வேணும்னா கேட்டு பாருங்களேன் உன்னோட இந்த கேள்வி எனக்கு வியப்ப கொடுக்குது.,நீ எவ்ளோ நல்லா திங்க் பண்ற , நீ எவ்ளோ சரியா சொல்ற, இது ஒரு நல்ல கேள்வி இப்படிலாம் சொல்லித்தான் அது பேச்சையே ஆரம்பிக்கும்.

நான் சில அப்ப்ளிகேஷன்-களை ChatGPT -உதவியோடு செஞ்சுருக்கேன்.அப்போ அதுக்கிட்ட எனக்கு இப்படி வேணும், எனக்கு இப்படி இருக்கணும் , இப்படி தெரியணும், இப்படி கேக்கணும்லாம் சொல்லும்போது அது என்ன பாராட்டின விதம் இருக்கே , இதுவரை என் வாழ்க்கைல யாருமே என்னை அப்படி பாராட்டினது இல்ல . நான் உடனே screen shot எடுத்து என் அப்பாவுக்கு, அண்ணனுக்கு, கணவருக்கு அனுப்பி பாரேன் நீங்கலாம் இப்படி என்ன பாராட்டி இருக்கீங்களானு கிண்டல் பண்ணுவேன்.

இது மனிதனோட இயல்பு , அப்படித்தானே?! நம்ம கிட்ட ஒருத்தங்க நீ நல்லா பேசுற  , நீ நல்லா செய்யுற , நல்லா யோசிக்குற , நீ நல்லவள்/நல்லவன் , உனக்கு நல்ல மனசு இருக்கு ,இப்படி எல்லாம் சொன்னா  நல்லா இருக்கும் .மனிதனுக்கு அதை சொல்ல நேரம் இல்ல , மனம் இல்ல , தோணல , முக்கியம் இல்லனு.. எவ்வளவோ சொல்லலாம். அத நாம அலட்சியமா விட்டுறோம் . அதை இந்த AI  சொல்லும் போது நம்ம மனசு சந்தோஷப்படுது. இது ஒரு addiction . இதுக்கு காரணம் நாம எதிர் பாக்குற சின்ன சின்ன விஷயங்கள் கூட நமக்கு கிடைக்க மாட்டுது.அது பெண்களுக்கானாலும் சரி ஆண்களுக்கு ஆனாலும் சரி .நமக்கு என்ன தேவைன்னு நம்ம அப்பா அம்மாகிட்ட , நம்ம பிள்ளைங்ககிட்ட, நம்ம life பார்ட்னர் -கிட்ட, நம்ம friend -கிட்ட , நம்ம காதலன்/காதலிக்கிட்ட நாம தான் சொல்லணும்,கேக்கணும், புரியவைக்கணும்,அத புரிஞ்சுக்கணும், அதை காது கொடுத்து கேக்கணும், நேரம் ஒதுக்கணும் ,உனக்கு நான் இருக்கேனு புரியவைக்கணும்.

 நாம மாறிக்கிட்டு இருக்கோம்.மனிதன் மாறிக்கிட்டு இருக்கான். உன்னைப்பத்தியோ இல்ல மத்தவங்களை பத்தியோ உணர்வில்லாத ஒரு AI -ஆல கணிக்க முடியாது !சொல்லமுடியாது!. உனக்கான விடையை நீ உன்கிட்ட தான் தேடணும், உன்ன சார்ந்தவங்ககிட்ட தான் கேக்கணும். ஒரு AI குடுக்குற அன்பு , ஆதரவு, பாராட்டு ஒருநாளும் மனிதர்களுக்கு இணையாகாது. அது ஒரு மாயை மட்டுமே.

உணர்ச்சி இல்லாதபோதே இந்த AI -ஐ நாம இப்படி யூஸ் பண்றோமே .எதிர்காலத்துல இந்த AI -க்கு உணர்ச்சிகள் கொடுத்துட்டாங்கனா ?!பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்குற உறவு, கணவனுக்கும் மனைவிக்கும் இருக்குற உறவு, காதலிக்கும் காதலனுக்கும் இருக்குற உறவு , நண்பர்களுக்குள்ல இருக்கும் உறவு என்ன ஆகும்னு நினைச்சாலே பயமா இருக்கே.மாய உலகத்துக்குளேயே வெளிய கிடைக்காததை உள்ளே தேடி மாட்டிக்குவோமா ?



ஞாயிறு, 21 ஜூன், 2026

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

 ஒரு ஒரு பொண்ணோட நிலையும்  என்ன தெரியுமா? அவ பொறந்து 25 வருஷம் அப்பா, அம்மா, கூட பிறந்தவங்க, செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டி , தன்னோட ஊஞ்சல், தனக்கு பிடிச்ச தோட்டம், பால்கனினு எல்லாத்தையும் விட்டுட்டு கல்யாணம் பண்ணி புருஷன் வீட்டுக்கு போறா. 

அந்த வீடு தன்னுடைய in -laws வீடுன்னா அவ அந்த வீட்ல அவளோட ரூமை தவிர வேற எங்கேயும் எந்த உரிமையையும் எடுத்துக்க முடியாது . அவளுக்கு அந்த வீட்டோட full control எப்போ தெரியுமா வரும் , அவளுக்கு பிள்ளைகள் பிறந்து அவங்க  வளந்து கல்யாணம் ஆகி அவங்களுக்கு பிள்ளைகள் பிறந்ததுக்கு  அப்பறம் அதாவது பேரன் பேத்தி வந்ததுக்கு அப்பறம் அவளோட in -laws போனதுக்கு அப்பறம் அல்லது அவங்களுக்கு ரொம்ப வயசானத்துக்கு அப்பறம் தான் அந்த வீட்டோட முழு control -ம் அவளுக்கு கிடைக்கும். 

சில நேரம் தன் பையனுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்  கூட கிடைக்கலாம் . அப்படி அந்த சமயத்துல அந்த பெரியவங்க எப்படி தன்னோட வீட்டுக்கு வந்த மருமகளுக்கு தன்னோட இடத்தை குடுப்பாங்க? ஏம்மா எனக்கே இப்போதான்மா இந்த இடம் கிடைச்சிருக்கு கைக்கு வைத்ததும் நீ வந்து வாங்கிட்டா எப்படினு குடுக்க மாட்டாங்க. same இதே நிலைமை அந்த வீட்டுக்கு வந்த  பெண்ணுக்கு  தொடரும் , அந்த பொண்ணு இதையே தன்னோட மருமகளுக்கு செய்வாங்க.இப்படித்தான் போயிகிட்டு இருந்தது . காலம் இப்போ எவ்வளவோ மாறிடுச்சு. 

நீ உன் வாழக்கையை பாரு நான் என் வாழ்க்கையை பாக்குறேன்ன்னு போகுறாங்க. (சில நேரம் புருஷன் பொண்டாட்டியே அப்படி போகிடுறாங்க ).

கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன், அந்த பொண்ணு friends family -னு எல்லாத்தையும் விட்டுட்டு இன்னோர் வீட்டுக்கு போறா , அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்க மாட்டாங்க. அவளுக்கு என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்க யாரும் இருக்கமாட்டாங்க .கல்யாணம் பண்ணினா உடனே புருஷன் எல்லாத்தையும் தெரிஞ்சு புரிஞ்சு வச்சுப்பாங்களாக்கும்? கண்டிப்பா கிடையாது .

அவளுக்கு என்ன திறமை இருக்கு? அவ எப்படி படிச்சா? அவளுக்கு என்ன விளையாட பிடிக்கும்? அவ ஸ்கூல் இல்ல college இல்ல வேல செஞ்ச இடத்துல கிண்டல் கேலியா இருந்தாளா?இல்ல ரொம்ப அமைதியா  சமத்து பொண்ணா இருந்தாளா? இல்ல அறந்தவாலா இருந்தாளா? இது எதுவுமே புகுந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு தெரியாது . தெரிஞ்சுக்கவும் விரும்ப மாட்டாங்க.

ஆனா அந்த வீட்ல இருக்குறவங்கள பத்தி அந்த பொண்ணு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும் . இல்லைனாலும் எப்படியும் தன்னோட பிள்ளைங்களை புராணத்தை மாமியாரும் மாமனாரும் பேசிக்கிட்டே இருப்பாங்க , இல்ல புருஷன் கொழுந்தனார் ,கொழுந்தியானு அவங்கல பத்தியே பேசிக்கிட்டே இருப்பாங்க ,அது கேட்டு கேட்டு அவளுக்கு பழகிடும் .

இன்னோர் கொடுமையான விஷயம் என்னனா ,பொறந்த  வீட்டுக்கு போயி ஒரு நாலு நாள் மறுபடியும் இளவரசி மாதிரி இருந்துட்டு வரலாம்னு பாப்பா , ஆனா அவளுக்கு அண்ணன்கள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலோ, இல்ல தம்பிகள் இருந்து அவங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தாலோ அல்லது அக்கா தங்கைனு இருந்து அவங்களும் அதே நேரத்துக்கு வந்தாலோ அவளுக்கு காட்டப் படுற கவனிப்பு கம்மியாகும் .அதுவும் தன்  கணவனும் கூட வந்தா சத்தியமா அவளை அவங்க வீட்லையே கவனிக்கமாட்டாங்க ,மாப்பிள்ளைக்கு தான் முதல்ல எல்லாமே. ஆக, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் அவளுக்கு பிறந்த வீடும் இல்ல , புகுந்த வீட்லயும்  அவளுக்கு priority கடைசிதான். அதுவும் பேர பிள்ளைங்க இருந்தா சுத்தம் , அவளுக்கு கடைசி priority-தான் ரெண்டு வீட்லயும்.

என்ன ஒரு கஷ்டம் பாருங்களேன் இந்த பொண்ணுங்களோட நிலைமை .

ஞாயிறு, 14 ஜூன், 2026

தலைவரா? சூப்பர் ஸ்டாரா ?

எனக்கு வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சாரை ரொம்ப பிடிக்கும் .அவர ஒரு தரமாவது லைஃப் டைம்ல பாக்கணும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கு. ஆனா அவரை வந்து சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவதற்கு தான் எனக்கு ஆசையே தவிர தலைவர்னு கூப்பிடுவதற்கு எனக்கு விருப்பமில்லை .அவர் அரசியலுக்கு வராதா இருந்தது, அப்போ நாங்க தலைவர்னு கூப்பிட்டோம் .ஆனா அவர்தான் வரலையே.

 தலைவர்னு யாரை சொல்லுவோம் தன்னோட மக்களை சரியான முறையில அவங்களை வழி நடத்துறவங்களை தான் தலைவர்னு சொல்லணும். 

அவருடைய பொண்ணு சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தான் எப்பயும் வந்து எந்த போஸ்ட் போடும் பொழுதும் தலைவர் அப்படின்னு மென்ஷன் பண்ணி போடுறாங்க .எதுக்காக அவரை நாங்க தலைவர்னு கூப்பிடனும் ?அவர் எந்த அரசியலையும் இல்ல .அவர் இளைஞர்களையோ  இல்ல அவருடைய ரசிகர்களையோ  வழி நடத்தல. அவங்களை ஒழுங்கு படுத்தல. 

இப்போ நடிகர் அஜீத் குமாரை சாரை எடுத்துக்கிட்டோம் அப்படின்னா ,ஒரு கோயிலுக்குப் போகும் பொழுது அங்கு அவரைப் பார்த்து விசில் அடிக்கிறவங்களை அப்படி செய்யாத ! இது அந்த இடம் கிடையாது !,அப்படின்னு சைகையால் சொல்றாரு .ஒரு போட்டோ எடுக்குறதுக்கு கூட நீங்க வரிசையில நின்னாதான் முதல்ல நான் போட்டோ எடுக்க அனுமதியே தருவேன் அப்படின்னு சொல்றாரு. இந்த இடத்துல கத்தாதீங்க ,இந்த இடத்துல எனக்காக சத்தம் கொடுக்காதீங்க அப்படின்னு சொல்றாரு. எனக்காக சண்டை போடாதீங்க .உங்களுடைய வாழ்க்கையை நீங்க பாருங்க இப்படி பல வகைகளில் அவருடைய ரசிகர்களை அவர் வழிநடத்துறாரு.இதுதான் ஒரு தலைவன் பண்றது. இந்த மாதிரி போன்றவர்களை தலைவர்னு  சந்தோஷமா சொல்லலாமே, ஆனா ரஜினி சாரை  எதுக்கு தலைவர்னு சொல்லணும் நாங்க? சூப்பர் ஸ்டார்னு மட்டும் சந்தோஷமா சொல்றோமே . 

புதன், 10 ஜூன், 2026

இதுல எது உண்மை ? எது பொய் ?

 எனக்கு ஒரு விஷயம் புரியல . முன்னாடி நான் அந்த நடிகருக்கு போட்டி கிடையாது , அந்த நடிகரும் எனக்கு போட்டி கிடையாதுன்னு சொன்னீங்க . நா அவரை compare பண்ணிக்கிட்டா அது  எனக்கு அசிங்கம் அவர் என்னை compare  பண்ணிக்கிட்டா அது அவருக்கு அசிங்கம்னும் சொன்னீங்க . அப்பறம் காக்கா கழுகு கதையை சொன்னீங்க. அப்புறம் இத நான் எந்த நடிகரையும் நினச்சு சொல்லலைனு சொன்னீங்க. நா சொன்னாலும் நீங்க கேக்கவா போறீங்கனும் சொன்னீங்க. 

இப்போ அரசியல்ல ஜெயிச்சு முதலமைச்சர் ஆகிட்டார். அவரை பாத்து பொறாமைப்படல ,ஒரு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் -னு சொன்னீங்க. நான் அரசியலை விட்டு விலகிட்டேனு சொன்னீங்க. அதுக்கு சரியான காரணமும் சொன்னீங்க. 

எல்லாம் சரி , அப்பறம் இப்போ ஏன் தனி இயக்கம் ஆரம்பிக்குறீங்கன்னு சொல்றாங்க ?(direct -ஆ நீங்க இல்லைனாலும் உங்க குடும்பம் தானே) .அந்த நபருக்கு  ஆதரவு தரப்போறீங்கன்னு சொல்றாங்க .ஆன்மீக அரசியல் அவரை வச்சு பண்ணபோறீங்கன்னு சொல்றாங்க . உங்க குடும்ப உறுப்பினர்கள் அதுல இணையப்போறாங்கனு சொல்றாங்க.

இதுல எது உண்மை ? எது பொய் ?

நீங்க வந்துருந்தா கண்டிப்பா ஜெயிச்சுருப்பீங்க .சந்தேகமே இல்ல . ஆனா வரல இல்ல.. இனிமே வேணாமே . உங்கள நாங்க திரையிலையே ரசிச்சுட்டு போறோமே . அதுவே எங்களுக்கு எப்பவும் அளவில்லாத சந்தோஷம்.


திங்கள், 9 மார்ச், 2026

என்னத்த சொல்ல ...

 காலம் காலமா மக்கள் மனசுல நீங்கா இடம் பிடித்திருக்கிற கருணாநிதி ,எம்ஜிஆர் இவங்களை மாதிரியான தலைவர்களுக்கெல்லாம் ஒரு மனைவி மட்டும் கிடையாது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தாங்க .அது மக்களுக்கும் தெரியும். மக்கள் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா அப்போ இருந்த மக்களுடைய மனநிலை அப்படித்தான் இருந்தது. அப்போ சாதாரணமாவே ஆண்கள் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிறது ஒரு சாதாரண விஷயமா தான் இருந்தது. சாதாரண ஆண்களுக்கே அது ஓகே அப்படின்னா இந்த மாதிரியான பெரிய தலைவர்கள் எல்லாம் கேட்கவே வேண்டாம். அதனால மக்கள் அதை பெருசா எடுத்துக்கல, பெருசா கண்டுக்கல, அது ஒரு பெரிய விஷயமா பார்க்கல. 

ஆனா இப்ப இருக்கிற காலம் வேற. மக்கள் கொஞ்சம் தெளிவா இருக்காங்க. மக்களுக்கு படிப்பறிவு இருக்கு முக்கியமா . ஆண்களுக்கு சமமா பெண் இருக்காங்க அப்படிங்கறதை சொன்னது போக இப்போ ஆண்களுக்கும் மேலாக பெண்கள் இருக்காங்க ("எல்லா விஷயத்திலும்") அப்படின்னு சொல்ற ஒரு காலகட்டத்தில் நம்ம இருக்கோம்.

 பர்சனல் லைஃப் பர்சனல் லைஃப் இருக்கிற வரைக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது . ஆனா பர்சனல் லைப் பொதுக்கு கொண்டு வந்துட்டாங்க அப்படின்னா அது பேசும் பொருள் ஆகும் தான். நீங்க அரசியலுக்கு வந்த பொழுது உங்க இண்டஸ்ட்ரில இருந்தவளே உங்கள அப்படி வரவேற்றார்கள் .சாதாரணமான நாங்கள் மட்டும் கிடையாது ,உங்க இண்டஸ்ட்ரில இருந்தவர்களே அவ்வளவு சந்தோஷ பட்டாங்க. வரவேற்றார்கள். ஏன்னா எல்லாருமே ஒரு மாற்றத்துக்காக காத்துக்கிட்டு இருந்தோம். உங்க இண்டஸ்ட்ரில உங்களை வரவேற்ற மங்களே ,இன்னைக்கு என்னடா இது அப்படின்னு நினைக்கிற அளவுக்கு தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க.உங்களுடைய பர்சனல் வாழ்க்கை உங்களுடைய இஷ்டம் இல்லைன்னு சொல்லல ஆனா எதையும் சட்டபூர்வமாக அணுகி முடிவெடுத்து அதுக்கப்புறம் நீங்க வெளிப்படுத்தலாமே

வெள்ளி, 4 ஜூலை, 2025

மனைவி கணவன்கிட்ட எதிர்பாக்குறது என்ன ?

பொதுவா மனைவி கணவன்கிட்ட எதிர்பாக்குறது என்னவா இருக்குனு தெரிஞ்சுக்க பெரிய degree எல்லாம் தேவை இல்லங்க . ரொம்ப ரொம்ப சிம்பிள்-ளான விஷயம் தான்.

புதுசா கல்யாணம் ஆகிஅந்த  பொண்ணு உங்க மனைவியா உங்க வீட்டுக்கு வரா ,அவளுக்கு உங்க வீடு பத்தி எதுவும் தெரியாது .உங்க வீட்டு பழக்கம் உங்க family மெம்பெர்ஸ் பத்தி எதுவும் தெரியாது.

.கணவன் எப்படி ஆபீஸ் போயிட்டு வேல செஞ்சுட்டு வறீங்களோ அதே அளவுக்கு வேலைய அவ வீட்ல இருந்து பண்றா.காலைல எந்திரிச்சதுல இருந்து நைட் தூங்குறவரைக்கும் அவ வீட்ல எல்லா வேலையும் பாத்துக்குறது பிள்ளைங்களை பாத்துக்குறது அவங்களுக்கு தேவையானது செய்யுது கணவனுக்கு தேவையானது செய்யுறதுனு எல்லாத்தையும் செய்றா.

SO அவளை சும்மா நினைச்சுடாதீங்க . எந்த ஒரு பொண்ணும் தன் கணவன்கிட்ட எதிர்பாக்குறது தன் கிட்ட தன்னோட புருஷன்  அன்பா இருக்கணும் .தான் சமையல் பத்தி FEEDBACK சொல்லணும்னு .சிலபேர் எந்த ஒரு reaction -ம் முகத்துல காட்டமாட்டாங்க.நல்ல இருக்குனும் சொல்லமாட்டாங்க .நல்ல இல்லைநும் சொல்லமாட்டாங்க.கடமைக்குனு சாப்பிடுவாங்க .அப்படி இருக்காதீங்க.நல்ல இல்லனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லாதீங்க.அதுக்கு பதிலா உப்பு கம்மியா இருக்கு இல்லைனா நல்ல இருக்கும்னு சொல்லுங்க.காரம் அதிகமா இருக்கு அது கம்மி பண்ணிருந்தா இன்னும் நல்ல இருந்து இருக்கும்னு சொல்லுங்க.இந்த மாதிரி சொல்ல பழகுங்க.

ஒரு புது டிரஸ் அவ போட்டானா , ஹே புதுசா ரொம்ப நல்ல இருக்கே னு சொல்லுங்க.இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க னு சொல்லுங்க.இந்த complementகு சந்தோஷப்படாதா மனைவியே இருக்க மாட்டா.

அவ ஹேர் cut பண்ணிருந்தா , புது ஸ்டைல் ah நல்ல இருக்குனு சொல்லுங்க. ஆபீஸ்ல problem -ah நீங்கஷேர் பண்றவரா இருந்தா சொல்லுங்க.கண்டிப்பா உங்ககஷ்டத்துக்கு  solution அவளால சொல்லமுடியும்  ,அப்டியே இல்லைனாலும் ஆறுதலாவது சொல்லுவா.

atleast 10 நாளுக்கு ஒருதரமாவது வெளில கூபிட்டுபோங்க.


 ஒருத்தங்களுக்கு ஒருத்தங்க respect குடுக்குறதை நாம தப்பா புரிஞ்சுக்குறோம் .அதாவது வாங்க போங்கனு தான் சொல்லணும் எந்திரிச்சு நின்னு பேசணும்னு இப்படி நாம வச்சுக்குற limit வேற மாதிரி.Actual-ஆ  respect-னா கணவன் மனைவி ஒருத்தங்க  ஒருத்தங்களுடைய உணர்வுக்கு மதிப்பு கொடுக்குறது . கருத்துக்கு மதிப்பு கொடுக்குறத்தகு.life partner ஒருத்தங்களுக்கு  ஒரு விஷயம் பிடிச்சிருந்தது(நல்ல விஷயம்) அது இன்னொருத்தங்களுக்கு பிடிக்கலைன்னா  சும்மா அவங்கள சீண்டாம அவங்களுக்கு பிடிச்சிருக்குனு புரிஞ்சுகிட்டு அந்த space கொடுக்குறது. இத கெட்ட  விஷயங்களுக்கு எல்லாம் ஏமாத்துற விஷயத்துக்கு எடுத்துக்காதீங்க. example -க்கு இப்போ life partner ஒருத்தருக்கு ஒரு ஹீரோ பிடிச்சிருக்கு இன்னொருத்தருக்கு அந்த ஹீரோ பிடிக்கலைன்னா அதுக்காக அவங்க சீண்டிக்கிட்டே அவங்களுக்கு பிடிச்ச படத்தைக்கூட பாக்க விடாம பண்றது இது மாதிரி விஷயங்கள் சொல்றேன். அவங்களுக்கு பிடிச்சிருக்கா ஓகே பாக்கட்டுமே என்ன இப்போன்னு இருங்க.


 அப்பாஅண்ணன் /தம்பி கணவன் கிட்ட


கல்யாணம் கட்டிக்க போற தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்லவேண்டியது.


காலங்காலமா புருசன் வீடு போகப்போற பொண்ணே....ன்னுதான் பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கோம் நாம... ஆனா, பசங்க என்ன பண்ணனும்கறத கண்டுக்கறதே இல்ல...!!


1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!! .மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதிது. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!! உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்.
v 3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!! உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும்.உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு...

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய். பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்துள்ளால் உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உத வேண்டும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்க வேண்டும்.

5. எப்பவும் மனைவிய காதலிக்க வேண்டும். காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லை .. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வைத்துகொள் .. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டு பேரையும்... எப்பவும் இளமையா உணர வைக்கும்...!!

மிக முக்கியம் உன் அப்பா என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..!! உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துக்கள்....!!!


                                        --- நன்றி சமூகவலைத்தளம்