பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - கண்டாங்கி கண்டாங்கி - ஜில்லா

படம் : ஜில்லா 
பாடல் : கண்டாங்கி கண்டாங்கி
பாடியவர்கள் :  விஜய்,ஸ்ரேயா கோஷல் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை:  D .இமான்

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா ஒஹோ

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா


அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலைக் கோயில் யானை வந்து
அல்வாவை தின்பது போல்
என் ஆச உன்ன தின்னட்டுமே

ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது நெத்திகுள்ள துடிக்குது

வெள்ள முழி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது ஈரக்குலை நடுங்குது

சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜிவ்வுனுதான் சூடும் ஏத்துற

நீ பார்த்தாக்கா தென்னமட்ட
பாஞ்சாக்கா தேக்கங்கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

நீ தேயாத நாட்டுக்கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற

அம்பு விட்டு ஆள அடிக்குற
தும்ப விட்டு வால பிடிக்குற

தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

கண்டாங்கி கண்டாங்கி
கண்டாலே கிறுகேத்தும்
கஞ்சா வச்ச கண்ணு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக