பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 1 ஜூன், 2013

பாடலின் வரிகள் - வெள்ளித்திரை - உயிரிலே என் உயிரிலே

படம்  : வெள்ளித்திரை 
பாடியவர்கள் : நரேஷ் அய்யர் 
பாடல் : உயிரிலே
இசை :G .V .பிரகாஷ் 

உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே
விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி

காணாமல் போனாயே
இது காதல் சாபமா ?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஒடமா ?

உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி


கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா ?
இனி தீயே வைத்து எரிந்தாலும்
என் நெஞ்சம் வேகுமா ?

உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா ?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ ?
இரு கண்ணை கட்டி
ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல ?
ஆண் நெஞ்சம் எப்போதும்
ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி

உயிரிலே என் உயிரிலே
உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக