பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 2 ஜூன், 2013

பாடலின் வரிகள் - வெள்ளித்திரை - விழியிலே

படம்  : வெள்ளித்திரை 
பாடியவர்கள் : சித்ரா 
பாடல் : விழியிலே 
இசை :G .V .பிரகாஷ் 

விழியிலே என் விழியிலே 
கனவுகள் கலைந்ததே 
உயிரிலே நினைவுகள் தளும்புதே 
கன்னங்களில் கண்ணீர் வந்து
உன்  பெயரை எழுதுதே 
முத்தமிட்ட உதடுகள் உலருதே 
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன் 
என் கண்ணீர் துளியில் நமக்காக 
ஒரு மாலை சூடினேன் 

விழியிலே என் விழியிலே 
கனவுகள் கலைந்ததே 
உயிரிலே நினைவுகள் தளும்புதே 
கன்னங்களில் கண்ணீர் வந்து
இமைகளிலே கனவுகளை விதைத்தேனே 
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே 
இன்று வெரும்காற்றிலே நான் விரல் நீட்டினேன் 
உன் கையோடு கை சேரத்தான் 
உன் உருவம் இல்லை என் நிழலும் இல்லை 
இனி என் காதல் தொலை தூரம் தான் 
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே 
அந்த சாம்பல் மீதும் உனக்காக 
சில பூக்கள் பூக்குமே 

விழியிலே என் விழியிலே 
கனவுகள் கலைந்ததே 
உயிரிலே நினைவுகள் தளும்புதே 
கன்னங்களில் கண்ணீர் வந்து

உள்ளிருக்கும் இதயத்துக்கு இனி புரியும் 
யாருக்குதான் நம் காதல் விடை தெரியும் 
காதல் சிறகானது இன்று சருகானது 
என் உள்நெஞ்சம் உடைகின்றது 
உன் பாதை எது ?என் பயணம் எது?
பனி திரை ஒன்று மறைக்கின்றது 
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா ?
விதி கண்ணாமூச்சி விளையாட 
நாம் காதல் பொம்மையா 

விழியிலே என் விழியிலே 
கனவுகள் கலைந்ததே 
உயிரிலே நினைவுகள் தளும்புதே 
கன்னங்களில் கண்ணீர் வந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக