பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் - காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பாடியவர்:கார்த்திக்
இசை:இளையராஜா  

எழுதியவர் : நா.முத்துக்குமார்
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்.
நெஞ்சில்  உள்ளில் பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்.
தள்ளி தள்ளி போனாலும்
உன்னை எண்ணி வாழும் ஓர்
ஏழை எந்தன் நெஞ்சத்தை பாரடி..
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் எந்நாளும் 
தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா.
மீதி வைத்த கதைகள்  எல்லாம் பேசி தீர்க்கலாம்.. ஹே ஹே ஹே

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.

நேற்று எந்தன் கன்வில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே..
பார்த்து பார்த்து எந்நாளும்
பாதுகாத்த என் நெஞ்சில்
எந்ந மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு
எண்ணம் ஓடும் தறிகெட்டு..
இன்னும் என்ன செய்வாயோ  சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே..
மீட்டபோது மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்

காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்,
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்,
ஓடி வந்து உன்னை சந்திக்க.
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்,
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்,
கண்ணை மூடி உன்னை சிந்திக்க.
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
உன்னை பார்த்து கேட்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்,
என் காதல் நலமா என்று..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக