பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் -சற்று முன்பு - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: சற்று முன்பு
பாடியவர்:ரம்யா NSK
இசை:இளையராஜா  
பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன்  சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஒஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னை தானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஓர்  நதி என இன்று நானடா ..
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சேர்த்து போன நம் சாலைகள்
மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின்
சோகம் மாறுமா
ஓய்ந்து போன நம் வார்த்தைகள்
மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில்
வண்ணம் மலருமா
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
தொட்டுத்தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன்  சொல்
ஒ ஹோ .. உன்னை பிரித்திட
என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய் என்று சொல்வாயா .. ஒ.. ஒஹோ..

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக