பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் - சாய்ந்து சாய்ந்து - நீதானே என் பொன்வசந்தம்

படம் : நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: சாய்ந்து சாய்ந்து

பாடியவர்:யுவன் ஷங்கர் ராஜா ,ரம்யா NSK  
இசை:இளையராஜா   

பாடலாசிரியர் : நா.முத்துக்குமார்


சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே
விழியோடு..விழி பேச..
விரலோடு..விரல் பேச ,
அடடா... வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி
உனை கண்டு கொண்டேன்..
ஓஹோ .. என் தந்தை தோழன், ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்..
அழகான உந்தன் மாக்கோலம்..
அதை கேட்கும் எந்தன் வாசல்..
காலம் வந்து வந்து கோலமிடும்..
உன் கண்ணை பார்த்தாலே..
முன் ஜென்மம் போவேனே..
அங்கே நீயும் நானும் நாம்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே

கை வீசி காற்றில்  நீ பேசும் அழகில்
 மெய்யாகும் பொய்யும்..
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்
 ஏதேதோ செய்யும்..
என் வீட்டில் வரும் உன் பாதம்..
எந்நாளும் இது போதும்..
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்..
ஆள் யாரும் பார்க்காமல்
தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே
விழியோடு.. விழி பேச..
விரலோடு.. விரல் பேச ..
 அடடா வேறு என்ன பேச..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது
அடடா ஹே ஹே ஹே..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக