பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 9 ஜனவரி, 2013

பாடலின் வரிகள் - என்னோடு வா வா - நீதானே என் பொன்வசந்தம்

படம் :  நீதானே என் பொன்வசந்தம்
பாடல்: என்னோடு  வா  வா
பாடியவர்:கார்த்தி  
இசை:இளையராஜா  
எழுதியவர் : நா.முத்துக்குமார்


என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்
என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்
செல்ல  சண்டை  போடுகிறாய்
தள்ளி  நின்று  தேடுகிறாய்
அஹ்  அஹ்  அஹ் அன்பே  என்னை  தண்டிக்கவும்
புன்னகையில்  மன்னிக்கவும்
உனக்கு உரிமை  இல்லையா.....

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

கன்னம் தொடும் கூந்தல்  ஒதுக்க நீ சாய்வதும்
என்னை  கொஞ்சம்  பார்க்கதானடி
கண்ணை  மூடி  தூங்குவதை  போல் நீ  நடிப்பது 
எந்தன்  குரல் கேட்கதானடி
இன்னும்  என்ன  சந்தேகம் 
என்னை  இனி  என்னாலும்
தீயாக  பார்க்காதடி
செல்ல  பிள்ளை  போல  நீ 
அடம்பிடிப்பதை என்ன  சொல்ல
என்னை  விட  யாரும் இல்லை 
அன்பு  செய்து  உன்னை  வெல்ல
சண்டை  போட்ட  நாட்களைதான்  எண்ணி  சொல்ல ..
கேட்டுகொண்டால்  கணக்கும்  பயந்து  நடுங்கும்

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

காதலுக்கு  இலக்கணமே  தன்னால்  வரும்
சின்ன  சின்ன  தலைகணமே
காதல்  அதை  பொறுக்கனுமே 
இல்லையெனில் கட்டி  வைத்து உதைக்கணுமே
உன்னுடைய    கையாலே  தண்டனையை  தந்தாலே
என்  நெஞ்சம்  கொண்டாடுமே
கன்னத்தில்  அடிக்குமடி  முத்தத்தாலே  வேண்டும்மடி
மத்ததெல்லாம்  உன்னுடைய  இதழ்களின்  இஷ்டப்படி
எந்த  தேசம்  போனபோதும் 
என்னுடைய சொந்த  தேசம்
உனது  இதயம்  தானே

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்
செல்ல  சண்டை  போடுகிறாய்
தள்ளி  நின்று  தேடுகிறாய்
அஹ்  அஹ்  அஹ் அன்பே  என்னை  தண்டிக்கவும்
புன்னகையில்  மன்னிக்கவும்
உனக்கு உரிமை  இல்லையா.....

என்னோடு  வா  வா  என்று  சொல்ல   மாட்டேன்
உன்னை  விட்டு  வேறு  எங்கும்  போக  மாட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக