பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 27 மே, 2014

திருமணத்தில் அருந்ததி பார்ப்பது ஏன் ?

புதுமணத்தம்பதிகள் அம்மி மிதிச்சு அருந்ததி பாக்குறது எதுன்னு தெரியுமா?

ராமரின் குலகுருவான வஷிஷ்டரின் மனைவி அருந்ததி..இவங்க ரொம்ப ஒற்றுமையா வாழ்ந்து வந்தாங்க..அதனாலதான் வானத்துல நட்சத்திரமா வாழுற அதிஷ்டம் அடைஞ்சாங்க..இவங்களமாதிரி தம்பதிகள் ஒத்துமையா இருக்கணும்னு தான் அருந்ததி நட்சத்திரம் பாக்குறத ஒரு சடங்கா செய்றாங்க..

அறிவியல் ரீதியா பாத்தோம்னா ... "சப்தரிஷி மண்டலம்" .."சப்தம்" என்றால் "ஏழு" ..ஏழு ரிஷிகள் ஒன்னா சேந்து வசிக்குறாங்கனு புராணங்களில் சொல்றாங்க..

வானவியல் விஞ்ஞானிகள் "The  great bear constellation "-னு சொல்றாங்க..இந்த ஏழு நட்சத்திரங்களில் நாலு நாற்கோண வடிவத்தின் முனைகளாக இருக்கும்..மற்ற மூன்றும் பட்டம் போல இருக்கும்..இந்த பட்டத்தோட வாலில் நடுவுல இருக்குறது 'வஷிட்ட' நச்சத்திரம் என்னும் 'மிசார்' ..அதை ஒட்டி மெல்லியதாக இருக்குறது 'அருந்ததி' என்னும் 'அல்கார்'..இந்த ரெண்டு நட்சத்திரமும் ஒரே ஈர்ப்பு மையத்தோட சுழல்பவை..அதாவது ஒன்றுக்கொன்று ஈர்ப்பு உடையவை.இந்த நட்சத்திரத்தைப் போல புதுமணதம்பதிகள் ஒருத்தருக்கொருத்தர் ஈர்ப்போட எப்பவும் வாழனும்னு சொல்றதுதான் அருந்ததி நட்சத்திரம்  பாக்குறதோட நோக்கம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக