பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 12 டிசம்பர், 2013

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ..!!!

நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்னைக்கு.தலைவரோட பிறந்தநாள்ல அவர் ரசிகர்களாகிய நமக்கு சொன்ன சில அறிவுரைகள் ,அவர் பத்தி அவர் கூட பழகினவங்க,அவர் பக்கத்துல இருந்து பாத்தவங்க சொன்ன விஷயங்கள் மேலும் அவர பத்தி சில சுவாரசியமான விஷயங்களை உங்க கூட ஷேர் பண்றேன்..
மது, சிகரெட் பழக்கத்தை விட்டுவிடுங்கள். இதனால், எனது வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இப்போது மறுபிறவி எடுத்துள்ளேன். வாழ்க்கையில் சந்தித்த, கெட்ட நண்பர்கள் மூலம், குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். என் திருமணத்திற்கு பிறகு, குடியை குறைத்துக் கொண்டேன்.ஆனால், முழுமையாக விடவில்லை. அதே போல், சிகரெட் பழக்கமும், என்னை விட்டு, அகலவில்லை.கடந்த ஆண்டு, எனது நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுயநினைவை இழந்துவிட்டேன்.இதற்கு சிகிச்சையளிக்கும் நேரத்தில், எனது சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டிற்கும் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றேன். இதற்காக, அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளினால், எனது உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு விட்டது.இந்த எதிர்விளைவில் இருந்து, கடந்த இரு மாதங்களாகத்தான், விடுபட்டுள்ளேன். எனவே, ரசிகர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள்
                                      -ரஜினிகாந்த்


காஸ்ட்யூம் ஆர்கனைசர் முருகன் இந்து தமிழ் நாளிதழின் தீபாவளி மலரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரையிலிருந்து ..
"ஒரு மீன் தொட்டியை ரஜினி சார் உடைப்பது போல காட்சி. கண்ணாடி தொட்டியை அவரை விட்டு உடைக்க சொல்வது ஆபத்து என்பதால் டூப் போட்டுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார் டைரக்டர். ஒரு செட் துணியை ரஜினி சார் அணிந்து கொண்டிருக்கிறார். டூப்புக்கு இன்னொரு செட் வேண்டுமே, நான் திண்டாடி திக்குமுக்காட என்னையே கவனித்துக் கொண்டிருந்த ரஜினி சார், ‘என்னங்க குழப்பம்’ என்றார். நான் தயங்கி தயங்கி விஷயத்தை சொல்ல, அதுக்கென்ன? நான் கழட்டி தர்றேன். அவரை போட்டுகிட்டு நடிக்க சொல்லுங்க என்றார்.
அந்த ஷாட் முடிந்ததும் மீண்டும் அதே துணியை போட்டுக் கொள்ள வேண்டும். துவைத்து அயர்ன் செய்து தரக்கூட அவகாசம் இல்லை. நான் கவலையோடு அவரை பார்க்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணே. அவரு போட்டுட்டு கொடுக்கட்டும். நான் போட்டுக்குறேன் என்றார் சர்வ சாதாரணமாக".

புத்தகத்தில் படித்து "தன் நண்பர் ஒருவருடன் ரஜினி தன் கேளம்பாக்கம் பண்ணையில் ஜாலியாக பேசிகொண்டிருந்தார். அப்போது இங்கிருந்து 4 கி.மீ தொலைவில் ஒரு பஜ்ஜி கடை உள்ளது மிகவும் அருமையாக இருக்கும் என நண்பர் சொல்ல, ஆர்வம் கொண்ட ரஜினி வாங்க நம்ம போய் சாப்டலாம் நு சொல்லியிருக்கிறார். அதிர்ச்சி அடைந்த நண்பர் ,சார் நீங்க எப்பிடி சார் வரமுடியும்? மக்கள் உங்களை கண்டுவிட்டால் கூட்டம் கட்டுபடுத்த முடியாது சார் என்று சொல்லிருக்கிறார். கவலைபடாதீங்க நான் மாறுவேடமிட்டு அவ்வபோது மக்களோடு சராசரி மனிதனை போல நடமாடுவது வழக்கம் என்று அவரை சமாதான படுத்திவிட்டு இருவரும் வெள்ளை நிற பியட்டில் சென்றுள்ளனர். மணியோ இரவு 8.30. கடைக்கு இரண்டு தெரு அப்பால் காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ரஜினியும் அவர் நண்பரும் கடைக்கு நடைகட்டியுள்ளனர்.ஒரு 85 வயது முதியவரை போல் மாறுவேடமிட்திருந்த ரஜினியை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை யாராலும் . கடைக்கு போகும் வழியில் ஒரு மூதாட்டியை பார்த்த ரஜினி, என்ன அம்மா இங்க இருக்கீங்க என்று கேட்க ஒன்றுமே சொல்லாமல் அமைதியாக இருந்த பாட்டியிடம் மீண்டும் ரஜினி என்ன மா ஏன் இந்த இரவில் வீட்டுக்கு போகாம தனியாக இங்கு இருக்கிறீர் என்று கேட்க. கொஞ்சம் தண்ணி கிடைக்குமாபா என்று இறுகிய குரலில் பாட்டி கேட்க , அடுத்த 3 நிமிடத்தில் தண்ணீர் பாட்டியிடம்.

இப்போ சொல்லுங்கம்மா என்று ரஜினி கேட்க , இறுகிய முகத்துடன் இருந்த பாட்டி கூறியது, என் கணவர் ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர் இழந்தார். இரண்டு பிள்ளைகளையும் ரொம்ப கஷ்டப்பட்டு நல்ல நிலைமைக்கு கொண்டுவந்தேன். இன்று அவர்கள் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார்கள். 3 நாளாக இதே இடத்தில் தான் இருக்கிறேன் என் பிள்ளைகள் தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையில், ஆனால் வரவில்லை. அடுத்தவர்களை பார்த்து கை ஏந்தும் நிலை நாளை முதல, ஆனால் அப்பிடி ஒரு நிலை வந்தால் என் உயிர் என்னை விட்டு பிரிந்து விடும். நீங்க போங்க அய்யா தண்ணீர் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி என்று கூறி பாட்டி அயர்ந்து தூங்கி விட்டார் தெருவோரம். ரஜினியும் நண்பரும் கிளம்பிவிட்டனர் இறுகிய மனதுடன்.

மறுநாள் காலை விடிந்தது, எழுந்தவுடன் பாட்டி கண்முன் ஒரு கார்.

யார் அய்யா நீங்க.

நாங்க முதியோர் நல்வாழ்வு இயக்கத்திலிருந்து வரோம்மா, வந்து கார்ல உட்காருங்கம்மா.

இல்லப்பா நீங்க நினைக்கிறது நான் இல்ல.

இல்லமா நீங்கதான் நாங்க தேடி வந்தது. நேற்று இரவு பெரியவர் கூட நீங்க தாகமா தண்ணி கேட்டது.

ஆமாயா, ஆனா அவர் யார்னு எனக்கு தெரியலியே .

சிரித்து கொண்ட முதியோர் நல்வாழ்வு இயக்கத்தினர் கூறியது 'அவரை உங்களுக்கு தெரியும்மா வாங்க சொல்றோம்'.

காரில் சென்று முதியோர் இல்லம் அடைந்த பின் பாட்டி கூறினார் ஓட்டுனரிடம்; அய்யா அந்த பெரியவர் நல்லா  இருக்கணும். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை சொல்லிருங்கயா. அவர் யார்னு நீங்க சொல்லவே இல்லையே?

ஓட்டுனர் புன்னககையுடன் சொன்னார் , அம்மா அவர் தான் நம்ம ரஜினி.

திகைப்படைந்த பாட்டி கண் கலங்கி ஓட்டுனரிடம் கூறியது, தம்பி நேற்று சொன்னது "நல்லவங்களை ஆண்டவன் கண்டிப்பா கைவிடமாட்டான் அம்மா, காலையில் விடிவு பிறக்கும் பாருங்க"

நல்ல இருப்பிடம், பிள்ளைகூட தராத நல்ல நிம்மதி இன்று அந்த பாட்டிக்கு அந்த நல்வாழ்வு இயக்க கொடுத்துள்ளது. அத்தனை செலவும் இன்றுவரை ரஜினியுடையது" .


ஒரு நாளிதழில் இருந்து ....
1. ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானே..."என்பது தான். நடித்த காட்சிகள் 6.

2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அது அறிமுகமான படம் மூன்று முடிச்சு.

3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.

4. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே "ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்த பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.

5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.

6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.

7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.

8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.

10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர் "மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல்", பிடித்த நடிகை "ஷோபா".

11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன் நடித்த கடைசிப் படம் "படையப்பா".

12. முதல் ஃபேண்டசி படம் "அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.

13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் "பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம் "மூன்று முகம்".

14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் "மாங்குடி மைனர்".

15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம் "தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

16. முதல் சினிமாஸ்கோப் படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம் "கோச்சடையான்".

17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி". பாடல் பாடிய படம் "மன்னன்".

18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார். இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பது அவரது கருத்து.

19. "பாண்டியன்", "அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

21. ரஜினியின் 50வது படம் "டைகர்(தெலுங்கு)". 100வது படம் "ஸ்ரீராகவேந்திரர்". ரங்கா படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.

22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்". அவர் முதல்வரானதால் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.

23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. "நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது. "நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது. "காலம் மாறிப்போச்சு" என்ற டைட்டில் "தர்மதுரை" ஆனது.

24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.

25. ரஜினி எடிட் செய்த படம் "படையப்பா". படப்பிடிப்பு முடிந்து பார்த்தபோது படம் 21 ஆயிரம் அடி வந்திருந்தது. எந்தக் காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு 2 இடைவேளை விடலாமா என்று யோசித்தார்கள். தான் நடித்த காட்சிகளை வெட்டத் தயங்குகிறார்கள் என்று நினைத்த ரஜினி. தானே எடிட்டிங்கில் உட்கார்ந்து காட்சிகளை குறைத்தார். இதுபற்றி அவர் சொன்ன கருத்து "ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது" என்பது.

26. அதிக நாள் ஓடிய படம் "சந்திரமுகி". அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "எந்திரன்". குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "அன்புள்ள ரஜினிகாந்த்".

27. "மூன்று முடிச்சு", "மாப்பிள்ளை", "மன்னன்", "படையப்பா" படங்களில் ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.

28. "முள்ளும் மலரும்", "மூன்று முகம்", "முத்து", "படையப்பா", "சந்திரமுகி", "சிவாஜி" படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மத்திய அரசு வழங்கிய விருதுகள்.

29. மீசையில்லாமல் நடித்த முதல் படம் "தில்லு முல்லு", முதல் முழு நீள காமெடி படமும் அதுதான்.

30. ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்றது பைரவியில் புகழ் பெற்றது அண்ணாமலையில்.

31. இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் "6லிருந்து 60 வரை". ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம்.

32. கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு என்பது அவர் கருத்து.

33. நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை. "ஆறு புஷ்பங்கள்" படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.

34. ரஜினிக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த படம் "முரட்டுக்காளை", "சந்திரமுகி". எதிர்பாராத தோல்வியைக் கொடுத்த படம் "ஸ்ரீராகவேந்திரர்" மற்றும் "பாபா".

35. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். ரஜினின் பல படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. நேரடியாக நடித்த இந்திப் படம் 16.

36. தமிழ் சினிமாவில் அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் "சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்கு பெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித் தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்" என்பார். அதுதான் சூப்பர் ஸ்டார்.

2 கருத்துகள்: