பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 28 அக்டோபர், 2014

சிறுத்தை


* சிறுத்தையை பத்தி தெரிஞ்ச மற்றும் தெரியாத சில விஷயங்களை தெரிஞ்சுப்போம்...

* சிறுத்தை, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் வேட்டைக்கு வசதியாக உருவானது. சிறுத்தைகள் தனியாக உலாவக்கூடியவை. இரவில் வேட்டையாடும். வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டுசென்று உண்ணும்.

* சிறுத்தைகள் வழுவழுப்பான, தங்க நிற மயிர்ப் போர்வையையும், அதன் மீது கறுப்புத் திட்டுகளையும் கொண்டவை.

* ஒல்லியான உடல் வாகும், திறனும் கொண்டது சிறுத்தையின் உடல். ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். நீச்சலடிக்கும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் அநாயாசமாக ஏறக்கூடிய திறன் படைத்தது. நீண்ட தூரத்துக்குத் தாவும் இயல்பு கொண்டது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

First Aid American Red Cross APP

அமெரிக்காவின் செஞ்சிலுவைச் சங்கம் முதலுதவி எப்படித் தருவது என்பதை படங்கள் வீடியோவுடன் விளக்கி APP ஒன்றை வெளியிட்டுள்ளது.


மாரடைப்பில் தொடங்கி ரத்தக்காயங்கள், தீக்காயங்கள், ஆஸ்துமா என உடனடியாக தேவைப்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்குமான முதலுதவி முறைகள் இந்த APP இல் எளிய மொழியில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. வெறும் முதலுதவி மட்டுமல்ல, கூடவே பிரச்சினைக்கேற்ற உடனடி மருந்துகள் என்ன என்பசை் சொன்னாலும், முதலில் ஆம்புலன்ஸை அழையுங்கள் என்கிற அடிப்படையான விஷயத்தையும் பரிந்துரைக்கிறது.

ஒவ்வொருவருடைய மொபைலிலும் கட்டாயம் இருக்க வேண்டிய இந்த APPLICATION கூகுள் ப்ளேஸ்டோரிலும் ஆப்பிள் ஐட்யூன்ஸ் ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்கள் இந்தச் செயலியை தரவிறக்க – http//goo.gl/IBrp4B என்ற இணைப்பை பயன்படுத்தலாம் அல்லது கூகுளில் First Aid American Red Cross APP என்று தேடினாலும்கிடைக்கும் .

வெள்ளி, 10 அக்டோபர், 2014

அக்பரும் பீர்பாலும் - அசலும் போலியும்

ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும் நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும், பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது. அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.

ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம் இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார் பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார் மன்னர்.

இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும் இலவசமாக உணவு அளிக்கபட்டது.

இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி உண்பது அதிகமானது.

இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள் இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால் அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை மோசமாகிவிட்டது.இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர் பீர்பாலிடம் கோரினார்.

மன்னர் பெருமானே! இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.

வியாழன், 9 அக்டோபர், 2014

இந்தியாவின் முதல் பெண்கள்

 

முதல் பெண் அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்

முதல் பெண் ஆளுநர் -சரோஜினி நாயுடு

முதல் பெண் முதல்வர் -சுதேசா கிருபளானி

முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி

முதல் பெண் குடியரசு தலைவர் -பிரதீபா பாட்டீல்

முதல் பெண் மக்களவை தலைவர் -மீரா குமார்

உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி

உயர் நீதிமன்ற பெண் தலைமை நீதிபதி -லைலா சேத்

முதல் பெண் ஐ.பி.ஸ் அதிகாரி - கிரண் பேடி

எவரஸ்டில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்

செவ்வாய், 7 அக்டோபர், 2014

இட்லி தோசை சாப்பிட்டா உடம்புக்கு நல்லது..


அரிசியையும் உளுந்தம் பருப்பையும் ஊறவச்சு அரைச்சு மறுநாள் காலைல இட்லி தோசையா சாப்பிடுறோம் இல்லையா இது சிறந்த சத்துணவுனு சமீபத்திய ஆய்வுல தெரிஞ்சிருக்கு.

அரிசியில உளுத்தம்ப் பருப்புல இருக்குற வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக செயல்படுது.

அமினோஅமிலம் மற்றும் திசுக்களை புதுப்பிக்குற லைசின் என்ற அமினோஅமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு  உதவுற காமா அமினோபட்ரிக் ன்ற அமினோஅமிலம்பத்து மடங்கும் அதிகரிக்குதாம்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

திருக்குறள் - அறிந்ததும் அறியாததும்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை

திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

வியாழன், 25 செப்டம்பர், 2014

மழை துளிகள் பற்றிய தகவல்கள்


மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில்கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்றுமேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதிநீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.

மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100mm (4in பிளாஸ்டிக்) அல்லது 200mm(8in உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0mm முதல் 25mm (0.98 in) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செல்லுமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.