பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 1 ஜூலை, 2014

வானவில்

வானவில்லை  பிடிக்காதவங்க யாருமே இருக்கமாட்டாங்க..பொதுவா நாம வானவில்லை எப்போலாம் பாக்கலாம்?மழை வந்ததுக்கு அப்பறம்னு நமக்கு எல்லாருக்குமே தெரியும்.ஆனா வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்ல ..பனிமூட்டம் ,காத்துல மிதக்குற கண்ணுக்கு தெரியாத சின்ன சின்ன தூசு,காத்துல நிரஞ்சிருக்குற நீர்த்துளிகள் ஆகியவையும் வானவில் தோன்ற  காரணம்.

நாம பாக்குற வானவில் பொதுவா அரைவட்ட வடிவத்துல இருக்குற மாதிரி தான் தெரியும் இல்லையா..ஆனா உண்மையில வானவில் அரைவட்ட வடிவம் கிடையாது ,முழு வட்ட வடிவத்துல தான் தோன்றும்.நம்ம கண்ணுக்கு வளிமண்டலத்தோட மேற்ப்பரப்புல இருக்குற அரைவட்டம் மட்டும் தான் தெரியும்.

வானவில் பாத்ததும் அத தொட்டுப் பாக்கணும்னு ஆசை நம்ம எல்லாருக்குமே இருக்கும்.ஆனா வானவில்லை தொடமுடியாது.கானல் நீர் மாதிரி ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம்ம கண்ணுக்கு தெரியுற ஒரு பிம்பம் தான் இந்த வானவில்.

வானத்துல இருக்குற நீர்த்துளிகள்ல சூரிய ஒளி ஊடுருவி அது சிதறலடைந்து நீர்த்துளிகளோட பின்புறத்துல எதிரொலிப்பதால உருவாகும் நிகழ்வு தான் இந்த வானவில்.

ஒரு குறிப்பிட்ட கோணத்துல பாத்தா மட்டும் தான் வானவில் நமக்கு தெரியும்.

வானவில்லில் நீளம்,கருநீலம்,ஊதா,பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு-னு ஏழு நிறங்கள் இருக்கும்.இத VIBGYOR என்ற வார்த்தை மூலமா அதாவது  V-Violet , I-Indigo , B-Blue , G-Green , Y-Yellow , O-Orange , R-Red என  நிறங்களை நினைவுல வச்சுக்கலாம்.

வானவில்லில் ரெண்டு வகை இருக்கு.முதல் வகைல வெளிப்பக்கம் சிகப்பு நிறமும் உள்பக்கம் ஊதா நிறமும் இருக்கும்.ரெண்டாவது வகைல நீர்த்துளிகளுக்குள் சூரிய ஒளி ரெண்டுமுறை சிதறடிக்கப்படும்போது இந்த வண்ண அமைப்பு அப்படியே தலைகீழா இருக்கும்.


                                             --நன்றி நாளிதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக