பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

பல்ப் மூலம் இன்டர்நெட் வசதி பெறும் ‘லைபை’ தொழிநுட்பம்


இனி இன்டர்நெட்டை ஒரு பல்ப் மூலம் பெறும் ‘லைபை’ வசதியை சீனாவின் ஷாங்காயில் இருக்குற ஃபுடான் பல்கலைக்கழக பேராசிரியர் சி (chi) என்பவர் கண்டுபிடிச்சுருக்காராம்.

ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டாபோதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தமுடியும் . லைட்டை நிறுத்திட்டா  இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போயிடும். ஒரு பல்பு எரியவிட்டா நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியுமாம்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்ட இந்த‘லைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள்நடந்துகிட்டு இருக்காம் .



LED  வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்குமாம்.அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுது.

வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுது. அதன் மூலம் இன்டர்நெட்  இணைப்பு கிடைக்குது . ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடிச்சுருக்கு

சீனாவில் மட்டும் 60 கோடி பேர் ‘வைபை’யிலிருந்து  ‘லைபை’க்கு மாறிடுவாங்கன்னு சொல்றாங்க.இதேபோல உலகநாடுகளும் சீக்கிரமே ‘வைபை’யிலிருந்து  ‘லைபை’க்கு மாறிடுவாங்கன்னு சொல்றாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக