பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு..!

காலக்கண்ணாடி என்ற வலைப்பக்கத்துல "உலகசாதனை புத்தகம் உருவான வரலாறு..!"-னு பாத்ததும் ஆர்வமா படிச்சேன்..ரொம்ப நல்லா இருந்த அந்த படைப்பை அப்படியே உங்ககிட்ட ஷேர் பண்றேன்...


1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார் அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.

எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை.

அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.

திங்கள், 28 ஏப்ரல், 2014

வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்..!


பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன.

வெற்றிலையின் நுனியில் மூதேவியும்

வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும்

வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும்

வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும்

வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும்

சனி, 26 ஏப்ரல், 2014

மாணவர்களுக்காக கோடை காலப் பயிற்சிகள்

கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்க பள்ளி மாணவர்களுக்காக சென்னையில் நடைபெறும் கோடை காலப் பயிற்சிகள் குறித்த சிறிய அறிமுகம்...

பொதுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருக்கும் நேரம் இது. இந்தக் கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில், ஏராளமான கோடைகாலப் பயிற்சி முகாம்கள் சென்னை நகரெங்கும் நடைபெறுகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் இக்காலத்தில், குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டுச் செல்வதைவிட, இதுபோன்ற கோடைகாலப் பயிற்சி முகாம்களில் சேர்த்துவிடுவதே நல்லது என்று கருதுகிறார்கள். இந்த முகாம்களின் மூலம் புதிய விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பள்ளிப் பாடங்களிலிருந்து விடுபட்டு, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பெற முடிகிறது. இனி, பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சிகள் பற்றிய தகவல்கள்...


இயற்கைப் பயண முகாம்

நகர்ப்புற நெருக்கடியிலிருந்து சற்றே விலகி, இந்தக் கோடையை உல்லாசமாகக் கொண்டாட விரும்புபவர்களுக்கென்றே சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த இம்ப்ரஸ்ஸாரியோ டிராவல்ஸ் நிறுவனம் மாணவர்களுக்கான கோடை கால முகாமை நடத்துகிறது. ‘நேச்சர் கேம்ப்’ எனப்படும் இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களை இயற்கையான வனப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

கம்ப்யூட்டர் படிச்சுட்டு என்னதான் வேலைபாக்குறோம்னு தெரிஞ்சுக்கனுமா !!!

கொஞ்சநாள் முன்னாடி என் ஃப்ரண்ட் எனக்கு ஷேர் செய்த போஸ்ட் இது..ஒரு கம்பெனில ப்ராஜெக்ட் வேல எப்படி நடக்குதுங்குறது பத்தி தான் இந்த போஸ்ட் .பலபேருக்கு இந்த விஷயம் தெரியாம இருக்கும். இதவிட அழகா தெளிவா அந்த விஷயத்தை  யாரும் சொல்லிருக்கமாட்டாங்க..இத யார் எழுதினதுன்னு எனக்கு தெரியல ..ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச போஸ்ட் இது ..நீங்களும் இந்த போஸ்ட்  பாத்து தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க.... தெரிஞ்சவங்க ரசிங்க..


"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

 "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

 "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

வியாழன், 24 ஏப்ரல், 2014

படத்த பத்தி - தெனாலிராமன்

தெனாலிராமன்   - இது ஒரு நகைச்சுவை(அப்படீன்னு சொல்லிக்குறாங்க)த் திரைப்படம் .


இந்த படத்தை பத்தி மேலும் படிக்க கீழ குறிப்பிட்டுருக்குற லிங்க் போய்பாருங்க ..

http://srivalaipakkam.blogspot.in/p/4.html

புதன், 23 ஏப்ரல், 2014

இன்று உலக புத்தக தினம் !!!!!



இன்று, ஏப்ரல் 23  உலக புத்தக தினம் .உங்கள் நண்பர்கள் , அன்புக்குரியவர்களுக்கு புத்தகங்களை பரிசாக தந்து படிக்கும் பழக்கத்தை ஊக்குவியுங்கள் 

திங்கள், 21 ஏப்ரல், 2014

இணையதளம் இல்லாமல் ஜிமெயில் பயன்படுத்துவது எப்படி?


கூகுளின் ஜிமெயில் கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்துகிறோம். ஜிமெய்லின் புது புது வசதிகள் அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையில் அமைந்துள்ளது.

ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.