பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 4 மார்ச், 2013

மின்சார ரயில்-புகார் தெரிவிக்க

சென்னைமின்சார ரயில்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள் குறித்து இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (044-25353999)

அரககோணம்- கடற்கரை, தாம்பரம்- கடற்கரை, வேளச்சேரி- கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை மற்றும் மாலை வேளையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெண் போலீசார் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் 'ரெயில் பயணத்தின்போது பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் புகார் செய்ய உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இந்த புகார் மையத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை பெண் போலீசார் இருப்பார்கள். அதற்குப்பிறகு கட்டுப்பாட்டு அறை போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். 044-25353999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயணத்தின்போது தொந்தரவு செய்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்' என்று கூறியுள்ளார்


                                         --facebook -ல் இருந்து 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக