பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 20 பிப்ரவரி, 2013

மாவட்ட கலெக்டர்.....................!!



பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தாரேஸ் அஹம்மது இவரபத்தி என்ன ஸ்பெஷல்-னு கேக்குறீங்களா , இருக்கு.
இவர் மக்களோட பிரச்சனைகளை எப்படி எல்லாம் விராரிச்சு சரி செய்றாருன்னு தெரியுமா?
ஒரு நாள் பஸ்-ல மக்களோடு மக்களாக பயணம் பண்ணிகிட்டே அவர்களுடைய பிரச்சினைகளை விசாரிப்பாராம்.

இன்னொரு நாள் மாறு வேஷத்தில திரை அரங்குகளுக்கு போய் டிக்கெட்டுகளுக்கு சரியான பணம் தான் வசூலிக்கிறாங்களானு  விசாரிப்பாராம்,

ஒரு ஒரு நாளும் ஏதாவது ஓரு அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பாராம் ,

பெரம்பலூர் மாவட்டத்தில மக்கள் பிரச்சினைகளுக்காக இயங்குறவங்க  கைல நிச்சயம் தாரேஸ் அஹம்மது சார்ரோட  மொபைல் எண்கள் இருக்குமாம்.

குடி நீர் பிரச்சினையில் தொடங்கி, சாதிச் சண்டைகள் வரை எங்க  எது நடந்தாலும் ஒரே ஓர் அழைப்பில் பிரச்சினையை முடிச்சுகிறாங்கலாம்   பெரம்பலூர் மாவட்ட மக்கள்

பதவி ஏத்து 5 மாசத்துல மக்களை தேடி 45 ஆயிரம் மனுக்களை வாங்கி இருக்காருனா பாத்துக்கோங்க , அதில் 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுடுச்சாம்

இவரோட இந்த பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி  இருக்காங்களாம்.

 

நாமளும் வாழ்த்துக்களை சொல்வோம் .
நன்றி சார்..உங்கள மாதிரி கலெக்டர்கள் எல்லா மாவட்டதுலயும் நாங்க எதிர் பாக்குறோம்.

               ---நன்றி என்விகடன் .http://www.vikatan.com/article.php?aid=14197&sid=384&mid=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக