பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 12 மே, 2022

நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க மாட்றாங்க?

 நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க  மாட்றாங்க? இது பொதுவா நாம எல்ல இடத்துலையுமே பாக்கலாம். ஒரு டிராபிக் -ல நின்னாக்கூட ஒரு மனுஷனை நகர சொல்லனும்னா அந்த மனுஷனுக்கு எவ்வளவு வயசா இருந்தாலும் யோவ் தள்ளி நில்லு அப்படீன்னு ஒருமைல தான் சொல்றாங்க. ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது? 

நம்ம அப்பா மேல நமக்கு மரியாதை இருக்கும். நம்ம அண்ணன் தம்பி எப்படி பட்டவங்க , எப்படி குடும்பத்துக்காக உழைக்குறவங்கனு நமக்கு தெரியும். ஒரு டிராபிக்-ல நிக்கும்போது இப்படி நமக்கு மறியாதைக்குறியவங்களை ஒருமையில ஒரு போலீஸ் அதிகாரி பேசினா நமக்கு இயல்பாவே  கோவம் வரும்தானே.அந்த அதிகாரி அப்படி பேசணும்னு பேசி இருக்கக்கூட மாட்டார் , ஆனா அது அவருக்கு பழக்கம் ஆகி இருக்கும்.

20 வயசு பையன 40 வயசு போலீஸ் அதிகாரி ஒருமையில் பேசினா ..அத கூட சரினு எப்படி சொல்லமுடியும்.அப்போ 60 வயசு பெரியவர் 40 வயசு போலீஸ் அதிகாரியை 'யோவ் நகரு' அப்படீன்னு சொல்லலாமா?!  ஒரு பப்ளிக் எப்படி ஒரு காவல் அதிகாரியை அவருடைய பதவிக்கும் உடைக்கும் அவருடைய வயதுக்கும் மரியாதை கொடுத்து சார் -னு கூப்பிடுறோம். ஆனா அவங்க எல்லாரையும் சார்-னு சொல்ல வேண்டாம்.சொல்லவே வேண்டாம் ஆனா , தம்பி நகருனு சொல்லலாம் ,வயசு அதிகமானவங்கள சார்-னு சொல்லலாம்.தப்பில்லை.

ஆனா எல்லாரையும் 'ஏய் இங்கவா', 'முன்னாடி நகரு' ,  'இங்க நீக்காத', 'போயிட்டே இரு' , இப்படி ஒருமையில் தான் சொல்றாங்க. எங்க இருந்து இவங்களுக்கு இந்த பழக்கம் வந்தது?யோசிச்சுப்பாத்தா இந்த அதிகாரிகளை அவங்களுடைய மேலதிகாரி எப்படி நடத்துறாங்களோ அப்படி தான் அவங்க தனக்கு கீழ  இருக்குறவங்களை நடத்துறாங்க. சரி, எங்க இருந்து ஆரம்பிக்குது இது? வேற எங்க ?! தலைவர்கள் கிட்ட இருந்துதான். பெரிய பதவியில் இருக்குற தலைவர்கள் தனக்கு கீழ பதவியில்  இருக்குறவங்களை ஒருமையில பேசுறாங்க, அத அவங்க தனக்கு கீழ இருக்குறவங்ககிட்ட பயன் படுத்துறாங்க. இப்படியே ஒரு ஒரு படியா கீழ இறங்கிவந்து கடைசில பொதுமக்கள் மேல காட்டுறாங்க. இது இங்க மட்டும் இல்ல எல்லா துறைகள்லையும் இருக்கு.ஆனா ,மற்ற துறைகளில் அந்த துறைகளுக்குளேயே இருக்கும் , போலீஸ்ங்குறதால  அவங்க பொது மக்களை அப்படி அழைக்குறாங்க. இது ஒரு இடத்துல மாத்தப்படவேண்டிய விஷயம் இல்ல . ஹயாராரிக்கி படி தலைவர்கள்கிட்ட இருந்து மாத்தவேண்டிய விஷயம். 

நடக்குமா? நடக்கணும் . நாம இதை மாத்தினாதான் அடுத்த தலைமுறை மாறும். இல்லைனா அடுத்த தலைமுறைக்கும் இந்த பழக்கம் மாறாது. மத்தவங்கள மரியாதையா கூப்பிடணும்னு தோணாது. நம்மகிட்ட இருந்து இப்பவே நாம இதை ஆரம்பிக்கணும்.

சனி, 23 ஏப்ரல், 2022

டைரக்டர்-களுக்கு ஒரு சேதி

 ஏன்பா டைரக்டர்களா , மாஸ் ஹீரோக்களை  வச்சு படம் எடுத்தா தான் நீங்க பெரிய டைரக்டர்-னு உங்களுக்கு நீங்களே ஏங்க ஒரு வட்டத்தை போட்டுக்கிறீங்க?

 டைரக்டர்-களுக்கும் கதைகளுக்கும்  தான் நடிகர்கள் நடிக்கனும். நடிகர்களுக்காக கதைகளை உருவாக்காதீங்க.கதைகளுக்காக நடிகர்களை நடிக்கவையுங்க.

எப்பவுமே கதைதான் ஹீரோ-வா இருக்கனும். சில டைரக்டர் -கள்  இருக்காங்க இன்னும் கதைக்காகத்தான் டைரக்டர் பண்ணுவேன் ஹீரோவுக்காக இல்லைனு.அது மாதிரி எல்லாருமே இருந்தா  நல்லா  இருக்கும்.

future -ல உங்க ஜெனெரேஷன்  உங்க படங்களை பாத்து பாராட்டணும் வியக்கனும் , உங்க பிள்ளைங்களே வளந்ததுக்கு  அப்பறம் படத்தை பாத்து கிண்டலோ நக்கலோ பண்றமாதிரி இருக்க கூடாது.

நல்ல கதை இருந்தா போதும்னு மக்கள் நாங்க எவ்ளவோ மாறுறோம் ஆனா நீங்க மாறமாட்ரீங்களே .



புதன், 30 மார்ச், 2022

தப்புதான்!! ஆனா தப்பில்ல!!! ஆனா தப்பு !!!!

 ரஷ்யா உக்ரைன் பிரச்சனையை ஓரங்கட்டிவிட்டுட்டு, டாப் 1-ல சமீபத்தில கேள்விப்படுற,படிக்குற,பாக்குற ,விவாதிக்குற விஷயம் Will Smith , Chirs  Rock -ஐ ஆஸ்கர் மேடையில் அறைஞ்சதுதான் .

வில் ஸ்மித் -ன் மனைவி ஜடா ஸ்மித் , அலோபீசியா அப்படினுங்குற ஒரு விஷயத்துனால பாதிக்கப்பட்டு முடிகளை இழந்துருக்காங்க. அதாவது இந்த அலோபீசியா எதனால ஏற்படுத்து அப்படீனா , உடல்ல நோய் எதிர்ப்பு சத்தி குறைஞ்சு அது முடிகள் வளரத்துக்கான ஃபாலிக்குளை பாதிச்சு முடிகளை உதிரவச்சுடும்.அதனால தலையில அங்க அங்க சொட்டை ஏற்படும். இந்த பாதிப்பாலதான் ஜடா ஸ்மித் தலையை மொட்டை அடிச்சுக்கிட்டாங்க.

இந்த உடல் நல குறைவை வச்சு ஆஸ்கர் மேடையில தொகுப்பாளர் Chirs  Rock ,ஜடா ஸ்மித்ஐ கிண்டல் பண்ணினதும் அதை பொறுத்துக்க முடியாத வில் ஸ்மித் மேடையேறி தொகுப்பாளர் Chirs  Rock-ஐ அறைஞ்சிட்டாரு ,அதுமட்டும் இல்லாம ரொம்ப கோவத்தோடு Chirs  Rock -ஐ பார்த்து இன்னோர் தரம் என் மனைவியின் பேர் உன்வாயில இருந்து வரக்கூடாதுன்னு திட்டிருக்காரு.

மனைவி அப்படீனால ஒரு கேலிப்பொருளா மத்தவங்களுக்கு முன்னாடி, அதுவும் குடும்பம் சொந்தம் முக்கியமா friends -முன்னாடி மனைவியை, மனைவியின் செயலை , மனைவியின் பேச்சை கேலி கிண்டல்  செஞ்சு,  அதன் மூலமா மத்தவங்களை சிரிக்க வச்சு தானும் சிரிச்சு  (சில நேரம் கொட்ட முடியாததை  எல்லாம் மத்தவங்க முன்னாடி இப்படி கிண்டலா கொட்டி திருப்தி அடஞ்சுக்குற) தெரிஞ்சோ தெரியாமலோ மனைவி அப்படிங்குற தன்னுடைய சரி பாதியை கஷ்டப்படுத்துற எத்தனையோ கணவன்களை பாக்கும் போது  நினைக்கும் போது  வில் ஸ்மித் -ன் செயல் , இப்படியும் இருக்காங்க அப்படினு நினைக்க, பெருமை பட, சந்தோஷ பட  தோணுதுதான் . அது முழுக்க முழுக்க அளவுகடந்த காதலின் வெளிப்பாடு அன்பின் வெளிப்பாடு . ஒத்துக்கலாம் . புரிஞ்சுக்கலாம்.


ஆனா நாகரீகம் அதுவும் முக்கியமா மேடை நாகரீகம் அப்படீன்னு ஒன்னு இருக்கே.நாம எப்படி இருந்தாலும் என்ன செஞ்சாலும் என்ன உடை அணிந்தாலும் நம்ம கிண்டல் கேலி செய்யுறதுக்கு ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்யுது.சிலநேரம் அது அவங்களின் அறியாமைனு சொல்லிக்கலாம் ,சிலநேரம் பொறாமைனு சொல்லிக்கலாம், தன்னால முடியல இவங்க செய்யுறாங்கலேன்னு ஒரு இயலாமை அப்படீன்னு கூட சொல்லிக்கலாம். இந்த மாதிரி சமயத்துல உலகமே பாத்துகிட்டு இருக்குற ஒரு மேடையில வில் கொஞ்சம் கோவத்தை கன்ட்ரோல் பண்ணிருக்கலாம். மேடைக்கு பின்னாடி கண்டிச்சுருக்கலாம். இல்ல அவரை அறையுறதைவிட்டுட்டு தன்னுடைய கோபத்தையும் கண்டனத்தையும் தெரிவிச்சு இருக்கலாம். 

ஒரு சாதாரண மனிதன் இப்படி நடந்துகிட்டு இருந்தாலே அது தவறு .பலகோடி பேர் இவரை  ஒரு ரோல் மாடலா நினைச்சுகிட்டு இருக்குற இடத்துல வில் இருக்காரு.அப்படி பட்ட ஒரு மனிதன் தன்னைப்போல வாழ்க்கைல முன்னேற நினைக்கிற மத்தவங்களுக்கு ஒரு  தவறான உதாரணமா ஆகிடக்கூடாது தன்னுடைய நடவடிக்கைகளால. ஒரு மனுஷன்  தன்  வாழ்க்கைல ஒரு நல்ல position -க்கு  வரதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்படணும் ஆனா அந்த உச்சியில இருந்து கீழிறங்க ஒரு கஷ்டமும் படவேணாம் , ஒருநிமிஷம் போதும் அப்படினு சொல்லுறதுக்கு சமீபத்திய உதாரணம் தான் WILL SMITH . 


[என்ன வில் -இப்ப்படி பண்ணிட்டீங்களே வில் . இப்பதான் உங்க புத்தகத்தை ரசிச்சு அனுபவிச்சு படிச்சுக்கிட்டு இருந்தா இப்படி.....ஹ்ம்ம் அப்போ உங்க புக்கோட அடுத்த பார்ட்ல இதப்பத்தி எழுதுவீங்கன்னு எதிர்பாக்கலாம்.] 


Red pumbkin : Tamil vlog - Human Body Part 1

என்னுடைய youtube சேனல்-ல human  body பற்றிய ஒரு புது செக்மென்ட் ஆரம்பிச்சுருக்கேன்.  

மனித உடல் எவ்வளவு அற்புதமான விஷயம் தெரியுமா? நம்ம உடம்புல இருக்குற ஒரு ஒரு பகுதியும் ஒரு ஒரு உறுப்பும் ஏதோ ஒரு வேலையை செஞ்சுகிட்டு தான் இருக்கு. இது இருக்குறது வேஸ்ட் இது இருக்குறதனால எந்த பயனும் இல்ல இப்படி நாம எதையுமே சொல்ல முடியாது .நம்ம உடம்பின் ஒரு ஒரு பகுதிகளோடு வேலையையும் பயன்களையும் தெரிஞ்சுக்கிட்டோம்னா நாம அப்படியே பிரமிச்சுடுவோம். 

நா படிச்சு ஆச்சரியப்பட்ட வாயடுச்சுப்போனா விஷங்களை இந்த செக்மென்ட் மூலமா உங்க கூட ஷேர் பண்ணிக்குறதுல என்னக்கு ரொம்பவே சந்தோசம். அந்த வகையில இந்த வீடியோ முடிகளை பற்றிய விஷயங்கள் -பாகம் 1




சனி, 12 பிப்ரவரி, 2022

Home maker-job easy இல்லைங்க

 நமக்கு ஒரு dream job -னு இருக்கும் அப்படி ஒரு job -க்கு போகணும்னு நினச்சா அதுலாம் நம்ம குடும்பத்துக்கு  சரிப்பட்டு  வராதுனு சொல்லி அவங்க இஷ்டப்படி வேலைக்கு போக வைக்குறாங்க.

சரி செய்ற வேலைய  interest-ஆ வேலை செஞ்சா , சீக்கிரம் கல்யாணம் பண்ணு வயசாகுதுனு சொல்றாங்க. கல்யாணம் பண்ணினா சீக்கிரம் கொழந்தைய பெத்துக்கோங்க வயசாகுதுனு சொல்றாங்க கொழந்தைய பெத்ததுக்கு அப்பறம் வேலைக்கு போகலாம்னா சின்ன கொழந்த ஏங்கிடும் கொஞ்சநாள் ஆகட்டுமேனு சொல்றாங்க சரிதானு கொஞ்சநாள் போனா அடுத்த கொழந்த பொறந்துடுது.அப்பறம் அந்த கொழந்தைக்காக 3 ,4 வருஷம் போக்கிடுறோம்.

கடைசியா ஒரு வழியா வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணினா நம்ம dream  job -க்கு வயசு limit ஆகிடுது ,சரி செஞ்ச வேலையாவது  மறுபடியும் start பண்ணுவோம்னு தேடினா long  gap  இருக்கே அந்த experience  இருக்கா இந்த experience இருக்கானு கேக்குறாங்க. 

8 வருஷம் break  விட்டு வேலைய தேடிப் பாக்குறவங்களுக்குத்தான் தெரியும் அதோட கஷ்டம். House wife/Home maker  -னா ஒன்னும் அவ்வளவு easy  வேலை இல்லைங்க. ஒரு ஒரு பொண்ணும்  தன்னோட கனவு  ஆசை எல்லாம்  ஓரமா ஒதுக்கி வச்சுட்டு , குடும்பத்துக்காக தன்னோட வாழ்க்கைல பல வருஷங்களை கழிக்குறா .

குடும்பத்துல இருக்குறவங்க நல்லா சாப்பிட, அந்த வீடு அழகா இருக்க, சுத்தமா இருக்க, organized -ஆ இருக்க,Neat -ஆ இருக்க , குடும்பத்தோட பொருளாதாரத்துல ஓரளவுக்காவது உயர்ந்த  நிலையில இருக்க ஒரு ஒரு குடும்ப தலைவியும்தான் கரணம். எத்தனையோ குடும்ப தலைவிகள் சிறுக சிறுக சேத்து வச்சு பிள்ளைங்க படிப்புக்கோ, கடனை அடைக்கவோ, இல்ல பொண்ணுங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா நகை சேர்த்து வைக்கவோ இல்ல வீடு வாங்கவோ இல்ல வாடகை குடுக்கவோன்னு சம்பாதிக்கிற பெண்களும் சரி இல்ல House wife/Home  maker  -சரி உழைச்சுக்கிட்டே தான் இருக்காங்க.

ஒரு ஆணோ பெண்ணோ வேலைக்குனு  போய் உழைக்குறதுக்கு எந்த வகையிலும் குறைவில்லாம House wife/Home maker-ம் உழைக்குறாங்க. அத முதல்ல எல்லோரும் புரிஞ்சுக்கணும்.

கல்யாணம் குழந்தைனு ஆனதுக்கு அப்பறமும் உன்னோட கனவை துரத்தி போ -னு பொண்ணு பின்னாடி நின்னு தட்டி குடுத்து ஊக்கப்படுத்த ,எனக்கு கிடைச்ச கணவன் மாதிரி ஒரு சில பேர் மட்டும் தான் இருக்காங்க. யாருமே இல்லனு சொல்லமுடியாது , பொருளாதார தேவைக்காக குடும்பம் குழந்தைனு ஆனதுக்கு அப்பறம் வேலைக்கு பொண்ணுங்க போறாங்கதான் /வேலைக்கு போக வற்புறுத்தப்படுறாங்க (/அவங்க நிலைமை அப்படி இருக்கு )இல்லைனு சொல்லல. ஆனா அவங்களுடைய dream job  என்ன? என்ன செய்யணும்னு ஆசைப்பட்டாங்க அதைதான் செய்யுறாங்களானு பாத்தா அதை  செய்யுறவங்க ரொம்பவே குறைவானவங்கதான். 


என்ன கேட்டா காலைல 6 மணிக்கு எந்திரிச்சு குளிச்சுட்டு அவசரமா சாமிய கும்பிட்டு கிச்சன் பக்கம் வந்து இட்லி ஊத்தி  சட்னி அரைச்சு முடிச்ச கையோட  lunch  செய்ய ஆரம்பிச்சு   7 மணி போல வேகமா பிள்ளைங்களை எழுப்பி அரைதூக்கத்துல  இருக்குற பிள்ளைங்களை பல்லு தேய்க்கவச்சு அவங்களுக்கு குளிப்பாட்டி 7.30 மணிக்கு புருஷனை எழுப்பி விட்டு office -க்கு கிளம்ப சொல்லி ,பிள்ளைங்களுக்கு uniform  போட்டுவிட்டு தலையை சீவி 8 மணிக்கு  breakfast கொடுத்து tiffin  box -ல லஞ்ச் வச்சு பிள்ளைங்கள ஸ்கூல் பஸ் ஏத்திவிட்டுட்டு வீட்டுக்கு வந்தா 8.30 வேலைக்கு ரெடியாகி வந்து நிக்குற புருஷனுக்கு breakfast  வச்சு , அன்னைக்கு செஞ்ச சட்டினிமாதிரி டேஸ்ட் இன்னைக்கு இல்லனு கொடுக்குற கமெண்டை கடுப்பு ஆனாலும் அடுத்ததரம் செஞ்சுடலாம்ங்கனு புன்னகையோடு  சொல்லிட்டு புருஷனுக்கு லஞ்ச் box -ல லஞ்ச் கட்டி கொடுத்துட்டு அவரையும் ஆபீஸ்க்கு வழியனுப்பி வச்சுட்டு அப்பாடானானு 9.30க்கு உக்காந்து நியூஸ் பாத்துகிட்டே 4 இட்லியை வாயில போட்டுக்கிட்டு 10 மணி போல room க்கு போய் போர்வை எல்லாம் மடிச்சு வச்சுட்டு பிள்ளைங்க ரூம்-ஐ சுத்தப்படுத்திட்டு 10.30 மணிக்கு மறுபடியும் கிச்சன் -க்கு வந்து பாத்திரத்தை எல்லாம் தேச்சு வச்சுட்டு 11.30 போல வீட்டை பெருக்கி வீட்டை துடைச்சு ,துடைச்சதை அலசி காயவச்சுட்டு 12.15 போல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் phone  பண்ணி பேசிட்டு 1 மணி போல சாப்பிட்டு ஒரு ,ஒரு   மணி நேரம் தனக்காகன நேரமாக்கிக்கிட்டு 2 மணி  போல காஞ்ச துணி எல்லாம் எடுத்து மடிச்சு iron பண்ணி வச்சுட்டு 3 மணிக்கு பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வருவாங்க அவங்கள பிக்கப் பண்ணிட்டு , பிள்ளைங்க வந்ததும் அவங்கள டிரஸ் மாத்த வச்சு சாப்பிட ஏதாவது நொறுக்குத்தீனி  குடுத்துட்டு அவங்கள tuition பாட்டு கிளாஸ் டான்ஸ் கிளாஸ் keyboard கிளாஸ்-னு ஏதவது கிளாஸ்க்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு(online  கிளாஸ் அதைவிட மோசம் , பக்கத்துலயே உக்காந்து சரியா கவனிக்குறாங்களானு பாத்துகிட்டே இருக்கணும் வேற)   வீட்டுக்கு வந்து evening snacks  எதாச்சம் செஞ்சு வச்சுட்டு  மறுபடியும் பிள்ளைங்களை போய்  கிளாஸ்-ல இருந்து கூப்டுகிட்டு வந்து பிள்ளைங்களுக்கு ஸ்னாக்ஸ்  கொடுத்துட்டு , coffee  இல்ல டீ  போட்டு குடுச்சுட்டு பிள்ளைங்களுக்கு பூஸ்ட் போட்டு குடுத்துட்டு பிள்ளைங்களை ஹோம்  ஒர்க் பண்ண வச்சு அடுத்தநாளுக்கு தேவயானதையெல்லாம் எடுத்து வச்சுட்டு ஆபீஸ்ல இருந்து வர புருஷனுக்கு காபி போட்டு கொடுத்துட்டு நைட் dinner  ரெடி பண்ணிகிட்டே அடுத்த நாள் காலைல சமைக்க தேவையான காய் எல்லாம் வெட்டி  boxல போட்டு பிரிட்ஜ்ல வச்சுட்டு , நைட் dinner -ஐ  எல்லாருக்கும் குடுத்துட்டு எல்லாம் சாப்பிட்டதும் பாத்திரத்தை கழுவி வச்சுட்டு அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு போய்  படுக்க நைட் 10 மணி ஆகும். மறுபடியும் அடுத்த நாள் அதே routine ...என்ன கேட்டா,Home  maker-job விட கடினமான job இல்லைன்னுதான் சொல்லுவேன் .









வெள்ளி, 7 ஜனவரி, 2022

விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

அன்பான அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,


         நம்ம ஊர் விருதாச்சலத்துல இருக்குற பெரிய கோவில் என்று அழைக்கப்படுற 'விருத்தகிரீஸ்வரர்' ஆலயத்துடைய  கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாசம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கு. இதுக்காக கோவிலை சுத்தப்படுத்திகிட்டு இருக்காங்க.கோவிலை பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு. 

        எல்லா கோபுரங்களுக்கும் புதுசா பெயிண்ட் நடிச்சிருக்காங்க. கோபுரத்துல ரொம்பவே அழகா எல்லா  லைட்டும்  எரியுது. [கோபுரம் என்பதை"கோ+புரம்' -னு பிரிக்கணும் . "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியுற  அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுறாங்க . இதனால தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்'னு  சொல்லுற  வழக்கம் வந்தது]

சிவன் சன்னதி,விருத்தாம்பிகை சன்னதியை சுத்தி அவ்வளவு அழகா சுத்தப்படுத்தி இருக்காங்க.என்னை பசை, விளக்கு தீபங்களுடைய கரி துகள்கள் எல்லாம் இல்லமா அவ்வளவு அழகா இருக்கு கோவிலை பாக்கவே. இப்படி தான் நம்ம ஊரு கோவில் எப்பவுமே  இருக்கணும்னு நினச்சேன். 

இப்படி நம்ம கோவிலை  சுத்தமாவும், அழகாவும் வச்சுக்குறது நம்முடைய கடமை. ஊரு உலகமே பாத்து ஆச்சர்யப்படுற நம்ம கோவிலை தூய்மையா வச்சுக்குறது நம்முடைய கடமை. எல்லா இடங்களையும் தீபத்தையும் கற்பூரத்தையும் ஏற்றாம அதற்கான ஒரு இடத்துல மட்டும் எல்லா விளக்குகளையும் ஏத்துறமாதிரி அமைக்கணும், ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போடணும். அதை மக்களும் கேட்டு,ஏத்துக்கிட்டு  நடந்துக்கணும். ஒரு பெரிய கோவிலை சுத்தப்படுத்துறதுங்குறது ரொம்ப பெரிய விஷயம். நம்மால செய்ய முடியல அட்லீஸ்ட் செஞ்சதையாவது பத்திரமா பாத்துப்போமே . 


அனைவரும் கும்பாபிஷேகத்துக்கு வாங்க. இறைவனின் அருள் பெறுக 

வெள்ளி, 10 டிசம்பர், 2021

அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்

அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்

எனக்கு விபரம் தெரிஞ்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் உங்களுடைய ரசிகை தான். அன்புள்ள ரஜினிகாந்த் படம் பார்த்தப்போ நானும் ரஜினி uncle எங்க இருக்கீங்க ?-னு உங்களை ஒரு uncle -ஆ நினச்சு சந்தோஷப்பட்ருக்கேன். முத்து படத்தை பார்த்தப்போ அறியா வயசுல உங்கள மேல ஒரு க்ரஷ் இருந்ததுன்னு கூட சொல்லலாம். கபாலி படத்தை பார்த்தப்போ உங்கள என்னுடைய அப்பாவுக்கு நிகராதான் பாத்தேன். அதனாலயே அந்த படத்துடைய கிளைமாக்ஸ் என்னால ஏத்துக்க முடியலைன்னு கூட சொல்லலாம்.

"பத்ம பூஷன் " ,"பத்ம விபூஷண்","கலைமாமணி", "தாதா சாஹெப் பால்கே" -னு அத்தனை விருதுக்கும் சொந்தக்காரர் நீங்க ( என்னென்னமோ விருதை உங்களுக்கு குடுத்து அரசியலுக்கு உங்களை இழுக்க ,இல்ல ஒரு வார்த்தையாவது சொல்ல வைக்க முயற்சி பண்றாங்க ஆனா முடியல).

நின்னா விமர்சனம், நடந்தா விமர்சனம் , மூச்சு வேகமா விட்டா விமர்சனம், தும்மினா விமர்சனம்னு உங்க நிலைமையை, உங்க இடத்துல இருந்து பாத்தாதான் தெரியும்.

உங்களுடைய போட்டியாளர்ங்குற ஒரே காரணத்தால சில வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு திரு கமல்ஹாசன் அவர்களை பிடிக்காது.அவர் நடிச்ச படங்களை பாக்கமாட்டேன் பிடிக்காது.(அதுக்கு அப்பறம் அவருடைய படங்களை பார்த்தபோது தான் மனுஷன் என்னமா யோசிச்சு படம் எடுத்துருக்கார் .நாளைய உலகத்தை இன்னைக்கே நம்ம கண் முன்னாடி காட்டி இருக்காரேன்னு ஆச்சர்யப்பட்டு , ச்சே , அறியாமைல தப்பு பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணி அவருடைய எல்லா படங்களையும் மிஸ் பண்ணாம தேடி தேடி பாத்தது வேற கதை).

இவ்வளவு வெறித்தனமா இருந்த, இருக்குற பொண்ணுதான் நான், இருந்தாலும் சில கேள்விகளை கேக்காம இருக்க முடியல.

எதுக்காக உங்கள தலைவர் அப்டீன்னு கூப்பிடனும்? உங்களை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? என்ன செஞ்சிருக்கீங்க அப்படீன்னா , காசு பணம் குடுத்து உதவுவதை மட்டும் சொல்லல. காசு இருக்குற யார் வேணும்னாலும் யாருக்கு வேணும்னாலும் உதவலாம். நான் 1500 ரூபாய் சம்பளம் வாங்கும்போது கூட 100 ரூபாய்யை சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருந்தவர்களுக்குனு ஒதுக்கி சாப்பாடு வாங்கி தந்துருக்கேன். நீங்க உங்களுடைய தகுதிக்கு ஏத்தமாதிரி உதவுறீங்க.அவ்ளோதான்.அத பத்தி நான் பேசல.
"மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன்மீது மண்ணுக்காசை மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது -இதை மனம்தான் உணர மறுக்கிறது" ----- "எத்தன சந்தோசம் தினம் கொட்டுது உன் மேலே நீ மனசு வெச்சுபுட்டா ரசிக்க முடியும் உன்னால நீ சிந்தும் கண்ணீரும் இங்கு நிரந்தரம் அல்ல இது புரிஞ்சிக்கிட்டாலே இங்கு நீ தாண்ட ஆளு கையில் கெடச்சத தொலைஞ்சா இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்-ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்" இதுமாதிரி தத்துவப் பாடல்கள் மூலமா மக்களுக்கு அறிவுரை சொல்றதையும் சொல்லல.
உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்குற, ஒரு பெரிய 'பிரபலமா' இதுவரை மக்களுக்கு என்ன செஞ்சுருக்கீங்க? நீங்க ஒரு வார்த்தை சொன்னா செய்ய தயாரா இருக்குற , உங்கள பின்தொடருற மக்களுக்கு /ரசிகர்களுக்கு என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கீங்க?
எத்தனை hollywood Celebrities , awareness documentaries பண்ணிருக்காங்க, பண்ணிக்கிட்டு இருக்காங்கனு தெரியுமா? Will Smith -னுடைய EARTH ,AMEND மற்றும் Chris Hemsworth-ன் Shark Beach documentary-னு எத்தனையோ பேர் ,எத்தனையோ documentaries. Ofcourse அவங்களும் பணம் வாங்கிட்டு தான் செய்றாங்க இல்லைனு சொல்லல but செய்றாங்களே .ஒரு celebirity வச்சு documentary எடுத்து publish பண்ணினா அவங்களுடைய fans /followers பாப்பாங்க .சிறு துளி கூட பெரு வெள்ளமாகும்னு செய்றாங்க. ஆனா நீங்க அப்டி கூட எதுவும் செஞ்சது இல்லையே. அதுக்கான ஒரு அடி கூட எடுத்தது இல்லையே.

அமிதாப் பச்சன் பாருங்களேன் எவ்வளவு வித விதமான கதாபாத்திரங்கள் அவர் வயசுக்கு ஏத்த மாதிரி நடிக்கிறார்.ஹாலிவுட் -ல Liam Neeson எடுத்துக்கோங்க ஹீரோவா மட்டும் தான் நடிக்கிறார்.ஆனா அவருடைய வயசுக்கு ஏத்த கதாபாத்திரங்களில். உங்கள வச்சு படம் எடுக்குறவங்க பணம் பாக்க தான் பாக்குறாங்க. உங்களால மக்களுக்கு அவங்க வாழ்க்கைல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தனும்னு நினச்சு படம் எடுக்கல.ஆனா நீங்க நினச்சா அது எல்லாத்தையும் மாத்தலாமே.
"மாநாடு" படம் பாத்து நல்லா இருக்குனு பாராட்டின நீங்க , "ஜெய்பீம்" படம் பாக்காமலா இருந்துருப்பீங்க.கண்டிப்பா பாத்துருப்பீங்க. personal -ஆ கூட team -ஐ பாராட்டி இருக்கலாம். public -ஆ நீங்க பாராட்டி இருந்தா கூட அது அரசியல் ஆகி இருக்கும்தான் இல்லைனு சொல்லல. ஆனா இன்னும் எத்தனை நாள் மத்தவங்களுக்காக உங்க கருத்து பேச்சு சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கப்போறீங்க. இது கூட சொல்ல யோசிக்கிற ,தயங்குற நீங்க எப்படி அரசியலுக்கு வந்துருப்பீங்க.வந்திருந்தா கண்டிப்பா ஜெயிச்சு இருப்பீங்க . நாங்க ஜெயிக்க வச்சிருப்போம்.ஆனா அப்பறம் ................
உங்க வயதையும் தாண்டி இப்போ வரைக்கும் நீங்க ஹீரோவா மட்டும் தான் நடிக்குறீங்க, டூயட் பாடுறீங்க , எதிரினு ஒருத்தன காட்றாங்க அவனை பொறட்டிப்போடுறீங்க , முடிவுல அவன் திருந்திடுறான். 46 வருஷமா இதையேதான் செய்றீங்க . Producers உங்கள முட்டாள் ஆக்குறாங்களா இல்ல நீங்க மக்கள/ரசிகர்களை முட்டாள் ஆக்குறீங்களானு தெரியல. (இன்னும் எங்கள பைத்தியக்காரங்களுனே நினைச்சுகிட்டு இருக்கீங்க இல்ல)

திரைப்படத்துல காட்டுவதை தான் மக்கள் உண்மைன்னு நம்புறாங்க. மக்களுடைய எண்ணங்களே திரைப்படங்களின் மூலமாத்தான் உருவாக்கப்படுது. 'பயமா ! எனக்கா !?'-னு வசனம் பேசி நடிக்குறீங்க. நாங்க தொண்டை கிழியுற அளவுக்கு கத்துறோம் ,கைதட்டுறோம். அதே நீங்க 'MAN vs WILD' -ல ஒரு புலி விசிட் பண்ணின இடத்துக்கு இறங்கி போய் பாக்க பயப்படுறீங்க. அது நடிப்புனு சொல்லி யாராவது சமாளிச்சாலும் நீங்க Bear Grylls -னுடைய கையை பிடிச்சுட்டு போனதுல இருந்தே தெரிஞ்சது எங்களுக்கு அது நடிப்பா ! நிஜமானு!!
மக்களை வழி நடத்துறவங்களைதான் தலைவர்னு கூப்பிடனும்.தலைவர் தலைவர்னு உங்கள ஏன் கூப்பிட்டோம்?கூப்பிடுறாங்க இன்னமும்.அரசியலுக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பாத்தோம்தான் ஆனா வரலை. அதுனால என்ன ? ஒரு தாய் தன் குழந்தைமேல வைக்குறது unconditional லவ்-னு சொல்லுவாங்க. அதாவது எந்த நிபந்தனையும் இல்லாத அன்பு.உங்க மேல எங்களுக்கு இருக்குற அன்பும் அப்படித்தான் .அது எப்பவுமே மாறாது அப்படியேதான் இருக்கும்.
' Life is very short ' . 100 வயசுவரைக்கும் நாம வாழ்ந்தாலும் உலகத்துடைய வயதை compare பண்ணி பாக்கும்போது ஒரு ஒரு மனிதருடைய வாழ்க்கையும் short தான். 40 / 50 வருடம் ஆரோக்கியமா இருப்போம் அப்பறம் நம்முடைய செல்களுக்கு வயதாகும் .வயதாக ஆக நம்முடைய உடம்புல ஏற்படுற மாற்றம் நமக்கு பெரிய தடையா இருக்கும். உங்களுக்கும் 70 வயசு ஆகிடுச்சு. இன்னும் எதுக்கு தயக்கம்? இன்னும் எதுக்கு யோசனை? இப்போவும் செய்யலைன்னா இனிமே எப்போ செய்யப்போறீங்க?

நீங்க உயரத்துல இருக்கீங்க.எல்லோரும் உங்கள தலையை தூக்கி பாக்குறோம்.அப்போ உங்களுக்கு (இன்னும்)எந்த அளவுக்கு அதிகமான பொறுப்பு இருக்கும் இருக்கனும்னு பாருங்க. உங்களை நம்புற உங்கள் மேல அன்பு வச்சுருக்குற ரசிகர்களுக்கு/மக்களுக்கு திரைப்படத்தையும் தாண்டி ஏதாவது செய்யலாமே. உண்மையை சொல்லனும்னா செய்யணும்னு எங்களுக்கு ஆதங்கம்னு கூட சொல்லலாம். அவ்வளவுதான்.

அரசியல் மட்டும் power கிடையாது .அரிஸ்டாட்டில் அவர்கள் நாடகங்களை போய் பார்த்தப்போ வியந்துட்டாராம். எவ்வளவு பெரிய விஷயங்களை மக்களுக்கு எவ்வளவு எளிமையா சொல்லிடுறாங்க நாடகத்தின் மூலமான்னு வியந்தாராம். நாடகத்திலிருந்து உருவானது தானே திரைப்படமும். அப்போ மக்களுக்கு நல்ல விஷயங்களை விதைக்குறதுல எவ்வளவு முக்கிய பங்கு திரைப்படங்களுக்கு இருக்கு. விதையா இருங்க .அட்லீஸ்ட் இனியாவது.
IF NOT NOW ,THEN WHEN ?
ஈலான் மஸ்க் -கிட்ட கேள்வி கேட்டா கூட பதில் கிடைக்கும் . நம்ம ஊரு ஸ்டார் கிட்ட கேள்வி கேட்டா எந்த பதிலும் கிடைக்காதுனு எனக்கு தெரியும்.

[உங்கள பத்தி ஒரு சின்ன வார்த்தை கூட தப்பா பேசினா பிடிக்காது எனக்கு.குடும்பத்துல இருக்குறவங்ககிட்ட கூட சண்டை போடுவேன்.என்னை மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க.எனக்கு கோவம் வர மாதிரி சிலபேர் உங்களப்பத்தி என்கிட்ட கேட்ட கேள்விகள் எனக்கு நியாயம்னு பட்டதால தான் அதை நான் உங்ககிட்ட இப்போ கேக்குறேன்]