பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 19 அக்டோபர், 2016

சுவிட்சர்லாந்து டு ஜெர்மனி – 8 நிமிடம் தான்!

சுவிட்சர்லாந்து டு ஜெர்மனி – 8 நிமிடம் தான்! இதுதான் மிக குறைந்த நேர சர்வதேச விமான சேவை!

இந்த விமான சேவை, சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலனில் இருந்து ஜெர்மனியின் பிரைட்ரிச்ஷபென் வரை என அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.

கான்ஸ்டன்ஸ் ஏரியின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்லும் இந்த விமானத்தின் பாதை தொலைவு வெறும் 20 கிலோமீட்டர் மட்டுமே. இந்த விமான பயனத்திற்கு 40 யூரோக்கள் செலவாகும் என கூறப்படுகிறது. இந்த இரு ஊர்களுக்கு இடையே ரயில் வழியாக சென்றால் கூட 1 மணி நேரம்தான் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ஆஸ்திரியா, வியன்னாவில் இருந்து ஸ்லோவாக்கின் பிரட்ஸ்லாவா வரை இயக்கப்பட்ட விமானம் தான் மிக குறைந்த நேர சர்வதேச விமான சேவையாக இருந்தது. இதன் தொலைவு 50 கிலோமீட்டர் மற்றும் விமான பயண நேரம் 10 நிமிடம் என்பது குறிப்பிடத்தக்கது.


                                  ----நன்றி சமூக வலைத்தளம் 

வியாழன், 13 அக்டோபர், 2016

காரணம் இல்லமா சொல்லல பெரியவங்க !!!

1.தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா... வீட்டுல சண்டை வரும்.'

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.


2. 'வீட்டுக்குள்ள நகம் வெட்டினா... வீடு விளங்காது.'

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி... வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.


3. 'நகத்தைக் கடித்தால் தரித்திரம்.'

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.


4. 'உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.'

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

Whatsapp Update !!

வாட்ஸ் அப்-பில் 2.16.272 என்ற புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட அந்த அப்டேட் மூலம் இனி வாட்ஸ் அப்-பில் குழு சாட் செய்யும் போது, குழு உறுப்பினர்களை தனியாக Tag செய்யலாம்.


எவ்வாறு Tag செய்வது?

குழுவில் மெசேஜ் அனுப்பும் போது அந்த மெசேஜினை பேஸ்புக், டிவிட்டரில் tag செய்ய உபயோகிக்கப்படும் ‘@’ என்ற குறியீட்டை பயன்படுத்தும் போது நமது contacts list-ல் உள்ள பெயர்கள் தோன்றும், இவ்வாறு நாம் நமது நண்பர்களுக்கு குறிப்பிட்ட மெசேஜினை tag செய்யலாம். ஒன்றிற்கு மேற்பட்ட நண்பர்களுக்கும் tag செய்யலாம்.

நமது வாட்ஸ்ஸப் உரையாடல்களை இவ்வசதி மேலும் சுவாரஸ்யம் ஆக்கும் என்பது உறுதி.

மேலும், நீங்கள் tag செய்யும் உங்களுடைய நண்பர் அக்குழுவினை mute செய்திருந்தாலும் கூட அவருக்கு அறிவிப்பு செய்தி (Notification message) திரையில் தோன்றும்.
                       
                                        ----நியூஸ் 7

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

வாட்ஸ்ஆப் அப்டேட் பண்ணினீங்களா? இதை கவனிச்சீங்களா?


வாட்ஸ்ஆப் அப்டேட் செஞ்சீங்கனா அப்போ  share info with Face Book -னு ஒரு option வரும் அதை agree பண்ணவேணாம்.ஒரு வேல அப்படி பண்ணிருந்தீங்கனா , Settings போங்க Account செலக்ட் பண்ணுங்க ,அங்க     ''Share my account info "-னு option இருக்கும் அதுல இருக்குற டிக் மார்க் -கை எடுத்துவிட்டுடுங்க.ஏன்னா இந்த டிக் இருந்தா நம்மோட வாட்ஸ்ஆப் தகவல்கள் எல்லாம் பேஸ்புக் கணக்கோட பகிர்ந்து கொள்ளபடும்..அதாவது நாம பயன்படுத்துற வார்த்தை வச்சு நமக்கு ஏத்தமாதிரி விளம்பரம் பேஸ்புக் கணக்குல விளம்பரம் பயன்படுத்தப்படுமாம். உதாரணமாக திருமணம் பற்றிய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டால் matrimonial தளங்கள் பற்றிய விளம்பரம் பேஸ்புக்ல் நமக்கு கிடைக்குமாம்.இதுவும்  வியாபாரம் செய்யும் பணி இதுனு சொல்றாங்க.



வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ரீ-யூனியன்தீவு

தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம் தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம் ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று. சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும் ரீயூனியன்! சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே – இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி. உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும் இடங்களில் ஒன்று – இந்த ரீயூனியன்தீவு…!!!


சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ள மொத்தமாக 2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு சுமார் ஒன்றரை லட்சம்….!!! 170-180 ஆண்டுகளுக்கு முன்னால் பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றதமிழர்களின் சந்ததியினர் இவர்கள். உலகில் தமிழகத்திற்கு வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சாதியப் பாகுபாடுகளில்லாமல் சம உரிமை பெற்று வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…!!!

பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது 1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்றபகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ யூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள். இரண்டும் பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..!!

சிலர் இலங்கையில் (யாழ்ப்பாணம்)) இருந்தும் குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினர். ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது. இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள். பிரெஞ்சுத் தமிழர்கள்என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்….!

ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப்பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம், காவடியாட்டம், கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன்எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன் இணைத்து வைத்திருக்கின்றனர்…!

அத்தனையையும் இப்போதும் விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும், வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது. தமிழ் நாட்டிலிருந்து கலாச்சார தொடர்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ள ஒரே வேண்டுகோள் – அவர்களுக்கு தமிழும், இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தர தாய்த்தமிழகம் உதவ வேண்டும் என்பது தான் !!

அற்புதமான இயற்கை வளம் நிரம்பியது ரீயூனியன் . இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம் – ஒன்று சுமார் 2600 மீட்டர் உயரமுள்ளது. மற்றொன்று 3200 மீட்டர் உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம்….! 1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரங்களில், இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6இஞ்ச் ) மழை பெய்தது ஒரு உலக ரெக்கார்டு – இதுவரை முறியடிக்கப்படவில்லை.

                                                              --- நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் 

திங்கள், 5 செப்டம்பர், 2016

மிதக்கும் பாறை(Floating Rock).....


இந்த பாறை ஒவ்வொரு வருடமும் வசந்த(every spring) காலத்தில் குறிப்பிட்ட நாளில் சில வினாடிகள் மட்டும் தரையில் இருந்து சற்று மேலே எழும்பி மிதந்து மீண்டு தரையை அடையும் . இந்த பாறை மேகாலயாவில் உள்ளது. 

புதன், 24 ஆகஸ்ட், 2016

இந்த நாடும் நாட்டு மக்களும் ......... !!!


ரியோ-வில் நடந்த 2016-ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில badminton-ல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவுல வெள்ளிப் பதக்கம் வென்றது நம்ம எல்லாருக்குமே தெரியும்..ரொம்ப சந்தோசம்..இந்தியாவுக்கே பெருமை .அவங்களுக்கு நம்மோட வாழ்த்துக்கள் .

ரெண்டு நாளுக்கு முன்னாடி நியூஸ்ல ஒன்னு பாத்தேன்..ஹைதாராபாத்ல பிறந்த சிந்து என்ன caste -னு கூகிள்-ல அதிகமா தேடப்பட்டுருக்குனு பாத்தப்போ நொந்தே போயிட்டேன்..ஆந்திராவை இரண்டு மாநிலங்களா பிரிச்சதால இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்னு ரெண்டு மாநிலத்தாரும் சண்டைப்போட்டுக்கிறதா கூட பாத்தேன்..

அடப்பாவிகளா !! யாராவது ஏதாவது சாதிச்சா அவங்க எந்த மொழி பேசுறவங்க , எந்த மாநிலத்துக்காரங்கனா பாப்பீங்க . இந்தியாவுக்கே பெருமை சேர்த்த ஒரு பொண்ணை இந்தியனா மட்டும் பாக்க மாட்டீங்களா? ஏதாவது ஒன்னு சாதிச்சுட்டா உடனே தமிழன்டா , தெலுங்கன்டா , மலையாளிடா , கன்னடக் காரன்டா , குஜராத்திக்காரன்டா , மராத்திக்காரன்டானு நமக்குள்ள எப்பையுமே வேறுபாடுதான் இருக்கே தவிர ஒற்றுமைனு ஒன்னு இல்லையே.

நமக்குள்ள இல்லாத இந்த ஒற்றுமையை வச்சுத்தான் அந்தகாலத்துல தொழில் செய்ய நாட்டுக்குள்ள வந்த வெள்ளைக்காரன்  மொத்தமா நம்மள அடிமையாக்கி வச்சுருந்தாங்க.இன்னமும் நாம அப்படியேதானே இருக்கோம்..

என்னமோ அந்த பொண்ணுக்கு உங்கபையனை கல்யாணம் பண்ணித்தரப் போற மாதிரி caste ஏன்யா செக் பண்ணிவச்சுருக்கீங்க?

இது ஒரு பக்கம்னா , வெள்ளிப்பதக்கம் வாங்கின சிந்து அவர்களுக்கு,சாக்க்ஷி அவர்களுக்கு இவ்வளவு பணம் தரோம், அவ்ளோ பணம் தரோம், கார் தரோம், அரசு வேலை தரோம்,வீடு தரோம், lifelong travel பண்ண இலவச டிக்கெட் தரோம்னு இவ்ளோ பண்றீங்களே ,ஜெயிச்சாதான் வசதி பண்ணித்தருவீங்க? ஜெயிக்க வசதி பண்ணி தரமாட்டீங்க..

இப்போ இவ்ளோ பணம் கொடுக்குற நீங்க விளையாட்டு துறையில சாதிக்க கூடியவங்க யாரு , திறமை இருந்தும் வெளில வரமுடியாதவங்க யாரு ,  வறுமையில் வாடுற எவ்ளோ பேர் திறமை இருந்தும் வசதி இல்லாத காரணத்தால முன்னேற முடியாம இருக்காங்க  அவங்களுக்கு  உதவி பண்ணி அவங்கள மேல கொண்டுவருவோம் , அவங்கள ஊக்கப் படுத்தி முன்னேற வச்சு விளையாட்டுல ஜெயிக்க வைப்போம்னு இதுலாம் செய்ய தோணல இல்ல உங்களுக்கு??!

சரி இன்னொரு விஷயத்துக்கு வருவோம் , இப்படி சில பல வருஷத்துக்கு முன்னாடி ஜெயிச்சு பரிசு எல்லாம் வாங்கி பெருமை சேர்த்த சிலரோட  இன்றைய நிலைமை எவ்வளவு மோசமா இருக்குனும் படிக்கிறோம்..  அவ்ளோதான் அப்பறம் அவங்கள கண்டுக்க மாட்டோம் .. ஜெயிச்ச அப்போ மட்டும் தான் அவங்களுக்கு இருக்குறது எல்லாம் கொடுத்து பெருமை படுத்துறோம்ங்குற பேர்ல நம்மள உசத்திக் காட்டிக்குறது.. தோத்தாலும் இல்ல அவங்க வயசானாலும்/retired ஆனாலும் அவங்கள்லாம் கண்டுக்க மாட்டோம்..  ஆனா அரசியல்வாதிங்க மட்டும் ஜெயிச்சாலும் ரொம்ப ரொம்ப வசதியா இருப்பாங்க தோத்தாலும் வசதியா இருப்பாங்க..அவங்கமட்டும் ஒருதரம் ஜெயிச்சுட்டா போதும் வாழ்நாள் முழுசும் இல்ல அடுத்த தலைமுறை வரைக்கும் வசதியா, நல்லா இருப்பாங்க ..
ஆனா இதுமாதிரி சாதிச்சவங்க அந்த சமயத்துல மட்டும் தான் lime light-ல இருப்பாங்க..அப்பறம் காணாப்போயிடுவாங்க.

எல்லாத்துலயும் அரசியல் , எல்லாத்துலயும் ஊழல் , இதுல ஒரு நாட்டுக்காரங்கனு  எண்ணம் கூட நமக்கு வராது .அப்பறம் எப்படி .....???!!!

அவங்க இப்படி இருக்குறதால நாம இப்டி இருக்கோமா? இல்ல நாம இப்படி இருக்குறதை அவங்க சரியா use பண்ணிக்குறாங்களானு தெரியல.. ஆனா கடைசியில நஷ்டம் நமக்குதான்னு மட்டும் நமக்கு புரியமாட்டேங்குது .. என்னத்த சொல்ல . ??!!!



இந்த நாடும் நாட்டு மக்களும் ......... !!!