பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 5 மார்ச், 2013

இதோட தமிழ் பெயர்கள் தெரிஞ்சிக்குவோம்



என்னனு பாக்குறீங்களா ? இது எல்லாம் சமையல் அறை பொருள்களோட 'தமிழ்' பெயர்கள் .


                                                        --facebook - ல் இருந்து 

திங்கள், 4 மார்ச், 2013

மின்சார ரயில்-புகார் தெரிவிக்க

சென்னைமின்சார ரயில்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், தொந்தரவுகள் குறித்து இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (044-25353999)

அரககோணம்- கடற்கரை, தாம்பரம்- கடற்கரை, வேளச்சேரி- கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே காலை மற்றும் மாலை வேளையில் இயக்கப்படும் மகளிர் சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெண் போலீசார் பணியில் நியமிக்கப்படுவார்கள் என்று ரெயில்வே பாதுகாப்பு படை சீனியர் கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் 'ரெயில் பயணத்தின்போது பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் புகார் செய்ய உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இந்த புகார் மையத்தில் காலை 6 மணி முதல் இரவு 11 மணிவரை பெண் போலீசார் இருப்பார்கள். அதற்குப்பிறகு கட்டுப்பாட்டு அறை போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். 044-25353999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயணத்தின்போது தொந்தரவு செய்பவர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்' என்று கூறியுள்ளார்


                                         --facebook -ல் இருந்து 

சனி, 2 மார்ச், 2013

ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகம்!!!!!!!!!!!



பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்குறது மட்டும் இல்லாம , அத புதுப்பிச்சு , நகலெடுத்தும் தருதாம் ஓர் நூலகம்

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையின்கீழ் இயங்குற ‘கீழ்த்திசை நூலகம்’ மற்றும் ஆய்வு மையத்துல , அரிதான பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் இருக்காம் . தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடக சாதனமாகப் பயன்பட்ட ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்குறதும் அப்பப்போ கிடைக்கிற சுவடிகளை ரசாயன முறையில் புதுப்பிப்க்கறத்தையும் மிகவும் நேர்த்தியாகச் செய்து வருது, இந்த நூலகம். இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், வட்டார வரலாறுகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் சேகரிக்கப்பட்ட 72,314 ஓலைச்சுடிகள் இங்கே கணக்கில் வரவு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த இந்த கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் தோற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தவங்க இரண்டு பேர். ஒருவர், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி. மற்றவர், இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயேரான பிரௌன். காலின் மெக்கன்சி 1783ல் இந்தியாவிக்கு வந்து, கிழக்கிந்தியக் கம்பெனியின் பொறியியல் பிரிவில் பணியாற்றியவர். பழமையான கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கார் . இதனால, அவர் ஏராளமான சுவடிகள், வரைபடங்கள், மற்றும் நாணயங்களை சேகரிக்கறதை வழக்கமாக்கி இருக்கார்.

மொழியியல் அறிஞரான பேராசிரியர் லேடன் என்பவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டப்போ சேகரிச்ச பல தொகுப்பினை லண்டனில் இருக்குற இந்திய அலுவலகத்தில பார்த்த பிரௌன், பல முயற்சிகளுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் 10,000 பவுண்டுகளுக்கு அந்த ஓலைச்சுவடிகளை விலைக்கு வாங்கி, அதில் ஒரு பகுதியை சென்னைக்கு கொண்டு வந்திருக்கார் . மெக்கன்சியால் சேகரித்த சுவடிகள் உட்பட அனைத்தையும் இப்போ இந்த நூலகத்தில் வைச்சு பாதுகாத்து வராங்க.

1870ல் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கப்பட்ட இந்த நூலகம், இப்போ சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வருது. இங்குள்ள முக்கியமான ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் சிதைந்த தாள், சுவடிகள் மற்றும் அச்சு நூற்களை, சிப்பான் துணிகளைக் கொண்டு சீரமைக்குறாங்க . இங்குள்ள சுவடில இருந்து இதுவரை 200 புத்தகங்கள் உருவாக்கப்பட்டுருக்கு.

ஆராய்ச்சி மாணவர்கள் பலர் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான விஷயங்களை சேகரிச்சுகிட்டு போறாங்க.மேலும் வெளிநாட்டினரும் இங்கு உள்ள ஓலைச்சுவடிகளை பாத்துட்டு போறாங்களாம். ஓலைச்சுவடிகளை இங்கு விலை கொடுத்தும் வாங்கிக்குறாங்க . நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் ஏற்றுக்குறாங்க . அப்படி வாங்கிய ஓலைச்சுவடிகள், ரசாயனப் பொருட்கள் இட்டு பாதுகாக்கப்படுதாம்.

தமிழகத்தில் உள்ள 12,617 ஓலைச்சுவடிகளின் அடிப்படை விவரங்களைத் திரட்டி, அதில் 1,862 சித்த மருத்துவ சுவடிகளை இவர்கள் சி.டி.யில் பதிவு செஞ்சிருக்காங்க. இதனால், குறுந்தகடு மூலம் சித்த மருத்துவ ஆய்வாளர்கள் தகவல்களை எளிதாகப் பெறமுடியுது.

பழமையான ஓலைச்சுவடிகளை சேகரித்து வச்சிருக்குறவங்க இங்கு வந்து அத கொடுத்தா, சென்னை அருங்காட்சியகத்திலுள்ள சுவடிப் பாதுகாப்பு மையம் மூலம் எவ்விதக் கட்டணமும் இல்லாம உரிய வேதிப் பொருட்கள் இட்டு, ஓலைச்சுவடிகளை சீரமச்சும் தராங்க.

ஓலைச்சுவடிகள் மூலம் தகவல்களைத் திரட்டவும், சுவடிகளைச் சீரமைக்கவும்
தொடர்பு எண்: 044-2536 5130

வெள்ளி, 1 மார்ச், 2013

கண்டுபிடிங்க...

சரி இது  ரிலாக்ஸ் டைம் .இந்த படத்துல எத்தனை மனிதர்கள் இருக்காங்கனு கண்டுபிடிங்க பாப்போம் 


ஆஸ்திரேலியாவில் 1000 பேர் தமிழ் படிக்கிறாங்களாம்


ஆஸ்திரேலியால ஏறத்தாழ 35 வருஷமா  தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ் மொழியைசொல்லிகுடுக்குற வேல நடந்துகிட்டு இருக்காம்.1970ம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து ,து சிட்னி நகர்ல குடியேறிய தமிழ் பெற்றோர்கள்அவங்க பிள்ளைகள தாய்மொழியை விட்டு விலகி, ஆங்கில மொழியின் தாக்கத்திற்கு உள்ளாவதை உணர்ந்து , இந்த நிலை தொடராமல் இருக்க, ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ்ப் பள்ளியாக 1977ம் ஆண்டு, ‘பாலர் மலர் தமிழ்ப் பள்ளி’ தொடங்கப்பட்டுச்சாம் . ஆரம்ப காலங்களில் வார இறுதி நாட்களில் வகுப்புகள் பலருடைய வீடுகளில் நடத்தப்பட்டதாம் . அதுக்கு அப்பறம்  மாநில அரசின் அனுமதி வாங்கி  சிட்னியின் புறநகர்களில் ஒன்றான ஆஷ்பீட்டில் உள்ள அரசுப் பள்ளியில் வகுப்புகள் நடைபெறத் தொடங்கிச்சாம் . இப்படித் தொடங்கப்பட்ட பாலர் மலர் இன்று சிட்னியில் 5 கிளைகளாக விரிந்து,  தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்த்து வருகின்றதுனு சொல்றாங்க .

பாலர் மலர் தொடங்கி, பத்து ஆண்டுகளுக்கு அப்பறம் , இலங்கையிலிருந்து வந்து வாழ்ந்த சிறுவர்களுக்காக   சிட்னி சைவ மன்றம் ஹோம்புஷ் என்ற புறநகரில் தமிழ்க் கல்வி நிலையம் ஒன்றைத் தொடங்கி, தமிழ்ப்பணியை செஞ்சுக்கிட்டு வராங்களாம். அதுக்கு அப்பறம்  ,  சிட்னியின் மற்ற பகுதிகளிலும் பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது 11 பள்ளிகள் தமிழ் கதுக்குடுதுகிட்டு இருக்காம்.. சிட்னியில் மட்டும் 1,000 மாணவர்களுக்குமேல் தமிழ் கத்துக்குறாங்கலாம் .

ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மெல்பெர்ன், பிரிஸ்பேன், பெர்த், கான்பரா, அடிலெட் போன்ற நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் துவங்கியாச்சாம்.
                            -நன்றி வார இதழ் 

ம்ம்ம்ம்ம்...ஆனா தமிழ்நாட்ல இருந்துகிட்டு தமிழ்ல பேசினா அவமானமா நினைக்குறாங்க சிலபேர் .என்னத்த சொல்ல ..

FREEMOSONS அமைப்பு


FREEMOSONS என்ற அமைப்பு , 2011-ல் இந்தியா முழுக்க 58 கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராம மக்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் பொறுப்பை ஏத்துகிட்டு இருக்காங்க.

இந்த திட்டத்தோட பெயர் 'ஜோதிர் கமயா'(வெளிச்சம் வழங்குவோம்).தமிழ் நாட்டுல சத்தியமங்கலம் வனப்பகுதியில சில கிராமங்கள்,கொல்லிமலை,கொடைக்கானலில் சில கிராமங்கள்,ஆந்திரா,மகாராஷ்டிரா,உத்ரகாண்ட்,சக்தீஷ்வர் போன்ற மலைவாழ் கிராமங்களும் அடங்கும்.இதன் தலைவர் டாக்டர்.பிஸ்வகுமார் .

இவர் சொந்த ஊர் கும்பகோணம்.1962-ல படிப்பு முடிஞ்சதும் இந்திய ராணுவத்துல சேந்தவர்.இந்தியா-பாகிஸ்தான் போரில் மருத்துவ பணியாற்றி இருக்கார்.சென்னை திரும்பினதும்,சென்னை அரசு பொது மருத்துவமனைல கௌரவ டாக்டர்-ஆக இருந்துகிட்டே முதுநிலை மருத்துவத்தையும்,நரம்பியல் பட்டமும் வாங்கி இருக்கார்.அப்பறம் இந்த  FREEMOSONS அமைப்புல சேர்ந்து சேவை செய்றார்.

FREEMOSONS அமைப்போட தொடர்புக்கு : www.masonindia.org