பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

எல்லோருக்குமே இப்படி ஒரு Refreshment தேவை

 சமீபத்தில மினசோடா போயிருந்தோம். போகும்போதே என்னோட தோழி சுஹாசினி பாண்டியன் கரெக்ட்-ஆ மெசேஜ் பண்ணின்னா .ஊர்ப்பக்கம் வந்த கண்டிப்பா வா-னு. கூப்பிடலைனாலே அங்க போயி நிப்போம்.கூப்பிட்ட போகாம இருப்போமா. மினசோடா போய் இறங்கிய அடுத்த நாள் அவ வீட்டுக்குத்தான் போனோம்.  

அழகான அமைதியான வீடு அறிவான ரெண்டு பிள்ளைங்கள்னு செட்டில் ஆகி இருந்த அவளை பாக்க ரொம்பவே சந்தோஷமா இருந்தது. பலலலலலல (எவ்வளவு காஞ்சி போயி இருந்தா இத்தன  'ல' போடுவேன்னு பாருங்க) வருஷத்துக்கு அப்பறம் என்னுடைய friend-அப்படினு ஒருத்தரை மீட் பண்றேன் நான். நிறையா ஃப்ரண்ட்ஸ்  இருக்காங்க .ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் ,B.sc ஃப்ரண்ட்ஸ், M .sc ஃப்ரண்ட்ஸ் , ஹாஸ்டல் ஃப்ரண்ட்ஸ்(படிச்சது எல்லாம் வேற வேற ஊரு, வேற வேற இடம்) அப்பறம்  வேலைக்கு போன போது அங்க ஃப்ரண்ட்ஸ் இப்படி நிறையா( கம்மியா ) ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அதுல சுஹாசினியும்  நானும் ஒரே ஆஃபீஸ்ல டெவலப்பர்-ஆ  வேல பாத்தோம்.

நான் ஆரம்பத்துல இருந்தே டெவெலப்பிங்  சைடு தான் போகணும்னு உறுதியா இருந்தேன். அதுக்கு காரணம் என்னுடைய குருக்கள்.காலேஜ்  படிச்சபோது எனக்கு கம்ப்யூட்டர் சென்டர்ல டீச்சர் -ஆ இருந்த சரவணன் (இந்த பையனாதான் ஃபியூச்சர்ல கல்யாணம் பண்ணுவேன்னு சத்தியமா கனவுல கூட நினைச்சி பாத்ததில்ல நான்). அடுத்து M .sc படிச்சப்போ ,ஜாவா தாத்தானு ஒருத்தர்.அவரு பேர் கூட தெரியாது ஆனா எல்லாரும் அவரை ஜாவா தாத்தான்னு தான் கூப்பிடுவோம். அப்படி ஒரு முதுமை ஆனா அவர் கோடிங் டெவெலப் பண்ற அந்த அழகு திறமை, கை நடுங்குற தல்லாத வயசுலயும் கோடிங் மேல அவருக்கு இருந்த அந்த ஆர்வம் . இவங்கதான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் .இவங்கள பாத்துதான் டெவெலபிங்-ல ஒரு ஆர்வம் வந்ததே.

அப்டி டெவெலப்பிங்  சைடு  வேலைபாத்தப்போ தான் சுஹாசினி எனக்கு  பழக்கம்.சுஹாஸ் பேரை  எப்பவுமே ofc boss -னு தான் save  பண்ணி வச்சுருப்பேன்.அப்படி ஒரு BOSS அவங்க.கிட்டத்தட்ட ஒரு 10 , 11 வருஷத்துக்கு அப்பறம் சுஹாசினியை இப்போதான் பாக்குறேன். 

அதே நக்கல் ,நையாண்டித்தனம், அதே சிரிச்ச முகம், எதையும் பெருசா சீரியஸ்-ஆ எடுத்துக்காத, அதிர்ந்து பேசாத  குணம்,பொறுமை முக்கியமா குழந்தைங்ககிட்ட ,அதே சுஹாஸ் தான். ஒரு மாற்றமும் இல்ல . (எனக்கு பொறுமை கொஞ்சம் கம்மிதான் அதுவும் நமக்குன்னு பிள்ளைங்கள்  ஆனதுக்கு அப்பறம் பொறுமை ரொம்ப கம்மியாகிடுச்சு). எனக்கு ஆச்சர்யமா இருந்தது எப்படி பிள்ளைங்ககிட்ட  கோவப்படாம இருக்கானு . பையன் பேரு  கிருஷ்ணா ,பொண்ணு பேர் வைஷு .அவ்வளவு பொறுப்பு ,அறிவு .அவ்வளவு நல்லா வளத்துருக்கா. கடவுள்கள்ல பேபி கிருஷ்ணானா அவளுக்கு ரொம்ப பிடிக்கும் .அதனாலதான் பையனுக்கு க்ரிஷ்ணான்னு பேர் வச்சுருக்கா (அப்டித்தான் இருக்கும்).

சுஹாஸ் என்ன பத்தி ரொம்ப பெருமையா பேசிக்கிட்டே இருந்தா. என் அண்ணா அண்ணி கணவன்னு எல்லார் கிட்டையும் என்னப்பத்தி பெருமையா சொல்லிகிட்டே இருந்தா (காதுல தேனா பாஞ்சதுனு சொல்லலாம். ஒரு கட்டத்துல குடுத்த காசாவிட அதிகமா சொல்லிறியேமா-னு கூட நினைக்க தோணிச்சு).  இத்தனை வருஷத்துல வாழ்க்கைல எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் , கஷ்டங்கள் சந்தோஷங்கள்னு லைஃப் வேற மாதிரி ஆகிடுச்சு. இல்ல இல்ல நான் வேற மாதிரி ஆகிட்டேன்.அதான் கரெக்ட் .  

நம்மள பத்தி நமக்கு தெரியும் அடுத்து நம்ம அப்பா அம்மாவுக்கு ஃப்ரண்ட்ஸ்க்கு தான் நல்லா  தெரியும். கல்யாணம் குழந்தைகள்னு என்ன நானே சுறுக்கிக்கிட்ட காலம்தான் இது.என்ன செஞ்சாலும் சப்போர்டிவ் -ஆ இருக்குற கணவன் .மேல எதாவது படி, வேலைக்கு போ , அடுப்படியில மட்டுமே இருக்காதனு சொல்ற கணவன்தான் , ஆனா பெரும்பாலான பெண்கள் மாதிரியே ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அந்த வட்டத்துக்குள்ளையே இருக்க ஆசைப்பட்டேன் . அதுக்கு இன்னோர் பேர் சோம்பேறிதனம்னு  கூட சொல்லிக்கலாம் .   அடுத்தடுத்த பிள்ளைங்கள் , அது இன்னும் வசதியா போச்சு எனக்கு. யோசிச்சு பாத்தா 30 வருஷ பழக்கத்தை 5/6 வருஷம் மாத்திடுது இல்ல . இதுக்கு நடுவுல anxiety , சாவு,பயம்னு  மத்த விஷயங்கள் வேற. 

சுஹாஸ் என்ன பத்தி சொல்ல சொல்ல எனக்கே என்னப்பத்தி புதுசா கேட்ட மாதிரி இருந்தது. இப்படித்தான் கவுண்டர் குடுப்பா, இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவா .இப்படித்தான் code பண்ணுவா,இவ்வளவு சீக்கிரம் பண்ணுவானு சொன்னபோதுலாம் , இப்படியா நா இருந்தேன்.இப்படியெல்லாமா செஞ்சேன்னு தோணிச்சு. (நம்மள யாரவது பாராட்டிட்டா  அவ்ளோ சந்தோஷமா இருக்கு இல்ல ). என்ன நானே புதுசா பாத்தமாதிரி இருந்தது. (Code பண்ணுவேன்னு எனக்கு தெரியும் ஆனா நமக்குள்ள இவ்வளவு திறமைகள் ஒளிஞ்சு கிடந்ததா .நிறையா மறந்துபோச்சு )

அனேக பொண்ணுங்க மாதிரிதான் நானும் . ஒரு கட்டத்துல குடும்பம் பிள்ளைங்கள்னு மத்த எல்லா விஷயங்களையும்(நண்பர்களையும்) பின்னுக்கு தள்ளிட்டு போயிடுவோம்.அப்டித்தான் நானும் இருந்தேன்.

இந்த 36 வயதினிலே வசந்தி  மாதிரியே. வயசாகிடுச்சு , பேமிலி ஆகிடுச்சு அவ்ளோதான்னு இருந்தேன் . எப்படி அந்த அந்த படத்துல வசந்திக்கு -க்கு சூசன் வந்து ,வசந்தி யாருனு வசந்ததிக்கே புரியவச்ச  மாதிரி  எனக்கு சுஹாஸ் , என்ன பத்தி சொல்லி சொல்லி நான் இப்படியா இருந்தேன்  .ஏன் இப்போ இப்படி இருக்கேன்னு என்க்கு என்ன புரிய வச்சுருக்கா. 

ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் இன்னைக்கு நான் மறுபடியும்  ஒரு புது  டெவெலப்பிங் language கத்துக்கலாம்னு ஆரம்பிச்சுருக்கேன்னா அது சுஹஸ்னாலதான். code படிக்க படிக்க எவ்வளவு ஆர்வமா இருக்கு?.எப்பவுமே பிடிச்ச  விஷயத்தை செஞ்சோம்னா அதுக்கான மதிப்பே தனிதான். வேண்டாம் போதும்னு ஒதுக்கி வச்சத அட்லீஸ்ட் படிச்சு தெரிஞ்சுப்போம்னு மறுபடிச்சும் ஆரம்பிச்சுருக்கேன். சோம்பேறித்தனமா இருந்த நிறைய விஷயங்கள் இன்னைக்கு செஞ்சுருக்கேன் .இதோ இந்த blog எழுதிருக்கேன். என் blog கொஞ்சம் டெவெலப் பண்ணிருக்கேன். இது எல்லாமே சுஹாஸ் உன்னாலதான்.

இதுவும் ஓரு நல்லதுக்குதான் . கடவுள் சுஹாஸ் வடிவத்துல வந்து எனக்கு ஹெல்ப் பண்ணிருக்காங்கனு தான் நினைக்குறேன்.


சுஹாஸுக்கு நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக