பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 11 டிசம்பர், 2012

நவதிருப்பதி - தலம் 2


திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்):

ஸ்ரீ வைகுண்டதுல இருந்து 3 கிலோமீட்டர் தூரத்துல கிழக்கு வந்தால் இந்த கோவிலுக்கு வரலாம். கிராமம் தான். பஸ் வசதி இருக்கு.

தல வரலாறு :

ஒரு காலத்துல ரேவா நதிக்கரையில புண்ணிய கோஷம் என்னும் அக்கிரகாரத்துல வேதகி அபடிங்குறவர் மாதா,பிதா ,குருவுக்கு செய்யவேண்டியதுலாம் செஞ்சு முடிச்சுட்டு திருமால நோக்கி ஆஸனதை அப்படிங்குற மந்திரத்த சொல்லி தவம் இருக்கலாம்னு நினைச்சப்போ அவர்கிட்ட திருமால் கீழ் பிராமண வேஷத்துல வந்து ஆஸனதை

மந்திரத சொல்ல வரகுணமங்கை தான் சிறந்ததுன்னு சொல்ல ,வதவி இங்க வந்து கடுமையா தவம் பண்ணி திருமாலோட அருளை பெற்று பரமபதம்
அடஞ்சாராம் .

ஆஸனதை மந்திரம் சொல்லி இறைவன் காட்சிதந்த இடம்கறதால 'விஜயசானார்' என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானதாம் .பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேசமகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிரை மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும் அக்கிரமத்தையும் சுட்டு பொசுக்கும் அக்கினி தேவனுக்கும் காட்சியளித்த காட்சியளித்த இடம் ,இந்த மூணு பேருக்கும் ஜெயம் அளிப்பவனாக சத்திய நாராயணனாக ஆதி சேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன ஆசனமாக கொண்டு 'விஜயாசனர்' என்னும் திரு நாமத்தோட திருமால் உக்காந்து இருக்குற கோலத்துல பரமபத சேவை தந்தருளும் கோவில் இது.இந்த கோவில்ல உயிர் பிரிஞ்சா மோட்சம் கிட்டும்னு ரோமேச முனிவர் சொல்லி இருக்காராம்.
மூலவர் - விஜயாசனபெருமாள் ,ஆதிஷேசன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலம் ,கிழக்கு பார்த்த திருமுக மண்டலம் ,தாயார் - வரகுணவல்லி தாயார் ,வரகுணமங்கை தாயார் .தீர்த்தம் - அக்னி ,சம்பிரதாய் - தென்கலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக