சமீபத்துல எனக வீட்ல ஒரு conversation நடந்தது.இந்தியன் ஸ்கூல் எல்லாம் ரொம்ப மோசம் , அமெரிக்கன் ஸ்கூல் எல்லாம் செம்ம அப்படீன்னு .
என்னால இத ஏத்துக்கவே முடியல .ஆமா அமெரிக்கன் ஸ்கூல் -ல நம்ம நாட்டு ஸ்கூல் மாதிரி அதிகமான சுமையை குடுக்கமாட்டாங்க .அதிகமா எழுதுறதை குடுக்கமாட்டாங்க .கையெழுத்து பத்தி கவலை படமாட்டாங்க .பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கணும்னு சொல்லமாட்டாங்க . Theraritical -ஆ மட்டும் இல்லாம practical -ஆ ரொம்ப அழகா பழக்குவாங்க.பிள்ளைங்களுக்கு எது பிடிக்குது எது பிடிக்கலைனு எதுல அதிகமா ஆர்வமா இருக்காங்கனு ஸ்கூல்-ளையும் பாப்பாங்க.அங்க வீட்லயும் அப்பா அம்மாவும் பாப்பாங்க.அதுக்கு தகுந்த மாதிரி அவங்கள அவங்களுக்கு பிடிச்சதை படிக்க வைப்பாங்க .நம்மள மாதிரி நீ படிச்சே ஆகணும் டாக்டர் ஆகியே தீரணும், இல்ல கவுரவக்குறைச்சல் , அசிங்கமாகிடும் இதுலாம் இல்ல ..ஒத்துக்குறேன்.அதுக்காக இந்த நாட்டுல படிச்சவங்க ஆஹா ஓகோனு இருக்காங்கனு சொல்லமுடியுமா?
நம்ம நாட்டுல இருந்து இந்த நாட்டுக்கு வந்து வேல செய்யுறவங்க எவ்வளவு பேர் இருக்காங்க .நம்ம நாட்டுடைய education சிஸ்டம் சூப்பர்னு ஒரு நாளும் நா சொல்லமாட்டேன் இப்போவரைக்கும் ,அதுக்காக அங்க படிச்சாங்களாம் முட்டாளுங்க இல்ல , புக் தவிர வேற எதுவும் செய்யத்தெரியாதவங்க இல்ல ,அத தாண்டி யோசிக்க தெரியாதவங்க இல்ல . அப்டி எல்லாம் இருந்தா நம்மாளுங்கஎப்படி இங்க இருக்குற பெரிய கம்பெனி எல்லாத்துலயும் டாப் இடத்துல இருப்பாங்க.எத்தனை டாக்டர்ஸ் எத்தனை சாப்ட்வேர் டெவெலப்பர்ஸ் நம்ம நாட்டுல இருந்து இந்த நாட்டுல வேல செய்யுறாங்க .வட்டத்தை தாண்டி யோசிக்க தெரியாதவங்கனா எப்படி இங்க வந்து வேல செய்வாங்க?
நம்முடைய நாட்டுல கல்வி காசாகிடுச்சு . எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்குறது இல்ல . அதுக்காக அங்க படிக்குற , படிச்ச, நாமெல்லாம் முட்டாள்கள் இல்ல.
நம்ம நாட்டுல இன்னோர் பிரச்சனை என்ன தெரியுமா , ஒரு குழந்தை நல்லா படிக்குதுனு தெரிஞ்சா அந்த குழந்தையை இன்னும் கொஞ்சம் அதிகமா மெனக்கெட்டு இன்னும் நல்லா படிக்க ட்ரைனிங் தருவாங்க. அந்த குழந்தை நல்ல மார்க் எடுத்தா நம்ம ஸ்கூலுக்கு பெருமைனு போட்டி போடுவாங்க அந்த குழந்தையை படிக்க வைக்க.
ஆனா இங்க அமெரிக்காவுல ஸ்பெஷல் குழந்தைகளுக்குதான் முதல் முக்கியத்துவம் குடுத்து அவங்கள இன்னும் ஸ்பெஷல்ஆ ட்ரீட் பண்ணி அந்த குழந்தைபோக்குலயே போகவிட்டு படிக்க வைப்பாங்க .அப்படிதான் ஆட்டிசம் குழந்தைங்களுக்கு அவ்ளோ அழகா கல்வி கொடுக்குறாங்க.நம்ம நாட்டுல அவ்ளோதான் அந்த குழந்தை ஸ்பெஷல் குழந்தை அந்த குழந்தைக்கு கல்வி வராதுனு முடிவு பண்ணிடுவாங்க.
இவ்ளோ நல்லா education சிஸ்டம் இருக்குற இந்த நாட்டுல படிச்ச எல்லாரும் செய்மையான பொஷிஷன்-ல இருக்காங்களா என்ன?
இனக்ளுக்கு தானே நம்ம நாட்டுல கால் சென்டர்-னு ஒன்னு வச்சு இவங்களுக்கு வேணுங்குற உதவிகளை தானே செய்றாங்க .எத்தனை பேருக்கு செக் fill பண்ண தெரியாம customer care -க்கு கால் பண்ணி கேப்பாங்க, எத்தனை பேர் வாஷிங் மெஷின்ல இத எப்படி operate -பண்றதுனு கேப்பாங்க .எத்தனை பேர் இந்த ஸ்வீப்பர் எப்படி remove பண்ணி clean பண்றதுனு கேப்பாங்க.அட இவ்ளோ எதுக்கு , நானும் இங்க இந்த நாட்டுல இந்த நாட்டுகாரங்களோட வேலை செஞ்சுருக்கேன்.அஞ்சு வருஷம் பத்துவருஷமா வேல செய்யுறேன்னு சொல்லுவாங்க ,ஒரு Team -ல இன்னோர் பேரை எப்படி சேக்குறதுனு கூட தெரியாது. இத பண்ணுங்க இத கிளிக் பண்ணுங்கன்னு சொன்னா கூட தெரியாது. அப்டித்தான் வேல செய்யுறாங்க. ஏன்னா இவங்க தான் அந்த வட்டத்தை தாண்டி யோசிக்கமாட்டாங்க .தனக்கு குடுத்த வேலை மட்டும்தான் பாப்பாங்க .50 பேர் வேல செஞ்சா அதுல 45 பேர் இப்படி தான் இருக்குப்பாங்க.செம சூப்பர்-ஆ வேல செய்யுறவங்களும் இருக்காங்க .அந்த சதவிகிதம் குறைவுன்னு தான் நான் சொல்றேன்.
yes , நம்ம நாட்டுல கல்வியும் கால் சம்மந்தமான விஷயங்களை improve பண்ணனும் நிறையவே , improve பண்ணனும் .எல்லாரும் நல்ல கல்வி கிடைக்க செய்யணும் .உலகத்துக்கே நாம எடுத்துக்காட்டா இருக்கலாம் அப்படியெல்லாம் செஞ்சா. நம்ம குழந்தைங்க உலககத்துல எல்லா நாட்டுலையும் எல்லா பெரிய பொசிஷன்லயும் இருப்பாங்க.
மனக்குமுறல் தான் இதுலாம் .