பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 29 மார்ச், 2016

கத்துக்குவாங்களா??

சமீபத்துல நடந்த இளையராஜா 1000 நிகழ்ச்சியில ,நான் பார்த்து எனக்கு பிடிச்ச ஒரு விஷயம்..

பாடகி சித்ரா அவர்கள் இதுவரைக்கும் 25000க்கும் மேல பல மொழிகள்ல பாடல்கள் பாடியிருக்காங்க.6 தேசிய விருது, 5 பிலிம் ஃபார் விருது, 31 மாநில விருதுகள் வாங்கிருக்குற இவங்க அந்த நிகழ்ச்சியில ஜானகி அவர்களோட பாட்ட பாடினாங்க.அவங்க பாடுறதுக்கு முன்னாடி ஜானகி அம்மா அளவுக்கு பாட முடியாது நான் முயற்சி பண்றேன் . தப்பா பாடினா மன்னிச்சு ஏத்துக்கோங்கனு சொல்லி பாட ஆரம்பிச்சாங்க, அதப்பாத்து நான் பிரமிச்சுபோயிட்டேன் .

இப்போ வரும் பாடகர்கள்/பாடகிகள் இளைய தலைமுறை பாடகர்கள் எத்தனைபேர் இத கத்துக்குவாங்கன்னு தெரியல..இந்த தன்னடக்கம் ,மரியாதை ,தலைக்கனம் இல்லாத ஒரு குணம் இதுலாம் இந்த கால தலைமுறையினர்களுக்கு அவ்வளவா இல்லைன்னு சொல்ல வருத்தப்பட்டாலும் அதுதான் உண்மை ..

ரெண்டு பாட்டு பாடிட்டாலே தான் ஒரு பெரிய பாடகர்/பாடகினு பெருமைபட்டுக்கிறது , தலைக்கனத்தோட திரியறதுன்னு இருக்குற இந்த கால இளைய தலைமுறை இவங்களையெல்லாம் பார்த்தாவது நல்ல விஷயங்களை கத்துக்குவாங்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக