பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 29 மார்ச், 2015

சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டர்


சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டரை விழுப்புரம் மயிலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள மயிலம் பொறியியல் கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனி கேஷன் பிரிவில் இறுதி யாண்டு படிக்கும் மாணவர்களான வி.பிரேம் நாத், கே.சிவராமன், ஐ.வெற்றிவேல், வி.கே.அருண் ஆகியோர் இணைந்து சூரிய ஒளி மின்சாரம் மூலம் நிலத்தை உழும் டிராக்டரை கண்டுபிடித்து அக்னி என்ஜினீயரிங் கல்லூரி நடத்திய போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளனர்.

விவசாயம் பிழைக்க விவசாயத்தில் உற்பத்தி செலவு அதிகரித்ததால் பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். இதைத் தவிர்க்க எங்களால் முடிந்த உதவி செய்யும் வகையில், விவசாயத்தில் உள்ள இடர்பாடுகளை நானும் எனது நண்பர்களும் இந்த முயற்சியில் இறங்கினோம் என்கிறார் மாணவர் பிரேம்நாத். விழுப்புரத்தில் உள்ள தோட்டகலை இயக்குநரிடம் இது தொடர்பாக கலந்தாலோசனை நடத்தினோம். இதைத் தொடர்ந்து சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் டிராக்டர் தொழில்நுட்பத்தை உருவாக்க முடிவு செய்தோம். துணை பேராசிரியர் ராஜபார்த்திபனின் ஆலோசனையின்படி இதற்கான முயற்சியில் இறங்கினோம். வழக்க மான டிராக்டரோடு ஒப்பிடுகையில் நாங்கள் வடிவமைத்த டிராக்டருக்கு எரிபொருள் செலவு இல்லை. எடை குறைவாக இருப்பதால் மண்ணில் உள்ள மண்புழுக்கள் போன்ற நுண்ணுயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

வயலின் வரப்பில் அமர்ந்து கொண்டு ரிமோட் மூலம் இந்த டிராக்டரை இயக்கலாம். நாங்கள் வடிவமைத்த டிராக்டரில் மூன்று சக்கரங்கள் இருக்கும். முன்புறம் அல்ட்ரா சென் ஸார் பொருத்தியுள்ளோம். இதனால் வயலில் கற்களோ, பாறைகளோ தென்பட்டால் வாகனம் தன் பாதையை மாற்றிக்கொள்ளும். மேலும் கலப்பை மேலே தூக்கிக் கொள்ளும்.

சனி, 28 மார்ச், 2015

புளூடூத் - வைஃபை : தெரிந்ததும், தெரியாததும் !

WiFI என்பது,என்ன?

இது ஒரு wireless local area network ஆகும்.

கணினி – இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவழி தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.

WiFI என்பதை wireless fidelity என பலரும் சொல்லி வந்தாலும்,அது உண்மையல்ல. WiFi க்குப் பொருள் கிடையாது.

அது ஒரு ஒரு பதிவு செய்யப்பட்ட, IEEE 802.11x. என்பதன் வர்த்தகக் குறியிடாகும்.

Institute of Electrical and Electronics Engineers (IEEE -Electrical and Electronics Engineers- 802.11 ) இவர்களே இந்த முறையை உருவாக்கினார்கள்.

WiFi என்பது sender - receiver களுக்கிடையில் radio frequency (RF) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செயல்படும் முறையாகும்..

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிறிய antenna வில் ஏற்படும், மின் காந்த அலைகளை (electromagnetic ) வைத்து, வானொலி அலைப்பரவல் ( radio wave propagation) ஊடக தொடர்புகள்(communication) வெளியே பரப்பப்பட்டு, பல இடங்களை சென்று (access point -AP -WAP) அடைகிறது.இந்த access point இல் கிடைக்கும், broadcast wireless signal களை கணினிகள் கண்டறிந்து ஏற்றுக் கொள்ளுகிறது.இதற்கு கணினி,devices என்பவை wireless network adapters களாக செயல்படுகிறது.

அதாவது கம்பியில்லாமல் வானொலி அலைகள் மூலம் இணையத் தொடர்பை, நெட்வொர்க் தொடர்புகளை, உயர் வேகம் கொண்ட வானொலி அலைகள் மூலம் இணைக்கும் முறை WiFi எனப்படுகிறது.

ஆனாலும் WiFi எனப் பொதுவாக சொல்லப்படும் தொடர்புகளை, wireless LAN (WLAN) மூலம் ஏற்படுத்தினாலும்,802.11 என்பதே சரியானதாகும்.இதை ரௌட்டர் உள்ளவர்கள், CMD – ipconfig -சென்று அங்குள்ள default Gateway இலக்கத்தை(198.168.178. ) பிரவுசரில் கொடுத்தால், அங்கே WiFi இல் செல்வோர் விபரங்களைக் காணலாம்.

இல்லையேல்,ipconfig/all அல்லது Who's On My Wifi ,Wireless Network Watcher போன்ற மென்பொருட்களை இணைத்தும் கண்டறியலாம்.இந்த WiFi இல்லாது கணினியில் உள்ள ad-hoc-mode மூலம் P2P முறையில் ஏற்படுத்தவும் முடியும். இது செயல்படும் தூரம் 30 மீ. இல் இருந்து, வானொலி அலைகளைப் பொறுத்து வேறுபடும்.

திங்கள், 23 மார்ச், 2015

முழு நிலா தோன்றாத மாதம்

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்துசெல்கிறது. ஆனால் அதை நாம் எந்த அளவுக்குக் கவனிக்கிறோமோ தெரியவில்லை. ரோமர்களின் மாதமான பெப்ருவரிஸ் என்பது லத்தீன் வார்த்தையான ஃபெப்ரும் என்பதிலிருந்து தோன்றியுள்ளது. ஃபெப்ரும் என்னும் சொல்லுக்குச் சுத்தப்படுத்துதல் என்பது பொருள்.

ஏனெனில் பழங்கால ரோமர்களின் காலண்டர் படி, இந்த மாதத்தின் 15-ம் தினமான பௌர்ணமி நாளன்றுதான் பாவம் நீக்கிச் சுத்தப்படுத்தும் சடங்கு அனுஷ்டிக்கப்படும். இதை அடிப்படையாகக் கொண்டே இந்த மாதத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரோமர்களின் காலண்டரில் ஜனவரியும் பிப்ரவரியும்தாம் கடைசியாகச் சேர்க்கப்பட்ட மாதங்கள். ரோமர்களைப் பொறுத்தவரை குளிர்காலத்தைத் தொடக்கத்தில் மாதங்களற்ற காலமாகக் கடந்தார்கள். கி.மு. 450-ம் ஆண்டுவரை பிப்ரவரி ஆண்டின் கடைசி மாதமாகத் தான் இருந்துள்ளது.

அந்த ஆண்டுமுதல் தான் அது வருடத்தின் இரண்டாம் மாதம் ஆனது. பிப்ரவரி மாதத்துக்கு 23 அல்லது 24 நாள்கள் மட்டுமே இருந்துள்ளன. பருவ நிலைகளைச் சமாளிப்பதற்காக பிப்ரவரியைத் தொடர்ந்து 27 நாள்கள் கொண்ட மாதம் இடையில் செருகப்பட்டது.
v லீப் ஆண்டு

ஜூலியன் காலண்டரில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டபோது இப்படி இடையில் மாதத்தைச் செருகும் பழக்கம் முடிவுக்கு வந்தது. நான்காண்டுகளுக்கு ஒரு முறை 29 நாள்களைக் கொண்ட லீப் வருடம் என்று முடிவானது. ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி மாதம் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதே கிழமையில்தான் மார்ச், நவம்பர் மாதங்கள் பிறக்கின்றன. லீப் ஆண்டில் மட்டும் ஆகஸ்ட் எந்தக் கிழமையில் பிறக்கிறதோ அதே கிழமையில்தான் பிப்ரவரி மாதம் பிறக்கிறது.