பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 14 மே, 2013

விபூதி,சந்தனம்,குங்குமம் இதுலாம் ஏன் பூசுறோம் ?



குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள்.
நம் உடம்புல எல்லா நாடி நரம்புகளும் மூளையோட இணைக்கப்பட்டுருக்கு . உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாக தான் போகுது .அதனாலதான் நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாவே இருக்கும். நம்ம அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கு . ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில கைவைச்சு பாக்குறோம்.சந்தனம் பூசுரதால அது   மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்யும் .

 தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி பூசுரதோட நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கு . கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள் பூசுறோம்.

1 கருத்து: